Skip to main content

தாயிடம் பக்தி (ஆதர்சபுருஷர் இராமபிரான்)




தாயிடம் பக்தி


🍁🍁🍁🍁


இராமபிரானுக்குத் தம்முடைய தாயிடம் இருந்த பக்தி சிறந்த ஆதர்சனமானது, (பிறருக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது). அதை முழுவதும் விவரிப்பது என்பது இயலாது. எனவே இங்கே சுருக்கமாக மட்டுமே எழுதப்படுகிறது.


அன்னை கைகேயி தம்மிடம் தயையில்லாமல் நடந்துகொண்ட போதிலும், அவரிடத்தில் ஸ்ரீராமன் நடந்து கொண்ட விதம் எப்போதுமே பக்தியும். மரியாதையும் நிரம்பியதாக இருந்தது. அன்னை கௌசல்யாவின் அரண்மனையிலிருந்து திரும்பி வருகின்றபோது அவர் லக்ஷ்மணனிடம், பின்வருமாறு சொல்கிறார்;


யஸ்யா மதபிஷேகார்தே மாநஸம் பரிதப்யதே

மாதா ந: ஸா யதா ந ஸ்யாத் ஸவிங்கா ததா குரு 

தஸ்யா: ஸங்காமயம் துகம் முஹூர்தமபி நோத்ஸஹே

 மநஸி ப்ரதிஸஞ்ஜாதம் ஸௌமித்ரேக்ஷஹமுபேக்ஷிதும்

ந புத்தி பூர்வம் நாபுத்தம் ஸ்மராமீஹ கதாசந

மாத்ரூணாம் வா பிதுர்வாஹம் க்ருதமல்பம் சவிப்ரியம்


(வால்மீகி இராமாயணம் 2/22/6-8)


"லக்ஷ்மணா! என்னுடைய முடிசூடுதலின் காரணமாக யாருடைய மனம் கொதிக்கின்றதோ, அந்த என் தாய்க்கு என் மேல் ஒரு சந்தேகமும் ஏற்படாதபடி நீ நடந்து கொள். சந்தேகத்தின் காரணமாக அவர் உள்ளத்தில் எழுகின்ற துக்கத்தை நான் ஒரு முகூர்த்தம் கூடத் தாளமுடியாது. நான் அறிந்தோ அறியாமலோ, தாய்மார்களுக்கோ, தந்தைக்கோ, சிறிதும் ப்ரியமில்லாத காரியத்தை ஒருபோதும் செய்ததாக எனக்கு நினைவில்லை." என்று கூறினார்.




இராமபிரான் தாயார் மீது கொண்டிருந்த பக்திக்கு இதைத்தவிர வேறு பல எடுத்துக் காட்டுக்களும் கிடைக்கின்றன. பரதன் சித்திரகூடத்திலிருந்து திரும்பும்போது இராமபிரான் பரதனிடம், "தம்பி பரதா! நீ அரசை அடையவேண்டும் என்ற விருப்பத்தாலோ அல்லது ராஜ்யத்தின் மேல் உள்ள ஆசையாலோ, உன் தாய் கைகேயி செய்துள்ளதை மனதில் வைத்துக் கொள்ளாதே! வணங்குதற்குரிய ஒரு தாயாரிடம் நடந்துகொள்ள வேண்டிய முறைப்படியே அவரிடம் நடந்துகொள்' என்றார்.


அப்பொழுது அவர் சத்ருக்னனிடம், 'என் மீதும், சீதையின் மீதும் நான் ஆணையிட்டுச் சொல்லுகிறேன். தாய் கைகேயியிடம் நீ ஒரு பொழுதும் கோபித்துக்கொள்ளாதே. எப்பொழுதும் அவருக்குப் பணியாற்றிக்கொண்டிரு'. என்றாலும் காட்டில் இருக்கும்போது ஒருமுறை லக்ஷ்மணன் கைகேயியை நிந்தித்தார். அப்பொழுதும் இராமபிரான் 'தம்பீ, தாய் கைகேயியை நீ நிந்திக்கக்கூடாது' என்றே கூறினார். இதிலிருந்து மற்ற தாய்மார்களிடம் இராமபிரானுக்கு எவ்வளவு மதிப்பும், பக்தியும் இருந்தது என்பது தெளிவாகிறது. 



அவர் காட்டிற்குப் போகும் போது தசரதனுடைய மற்ற ராணிகள் 


க்ருத்யேஷ்வசோதி த: பித்ரா ஸர்வஸ்யாந்த:புரஸ்ய ச 

கதிஸ்ச ஸரணம் சாஸீத் ஸ ராமோத்,ய ப்ரவத்ஸ்யதி 

கௌஸல்யாயாம் யதா யுக்தோ ஜநந்யாம் வர்ததே ஸதா 

ததைவ வர்ததேஸ்மாஸு ஜந்மப்ரப் ருதி ராகவ:


(வால்மீகி இராமாயணம் 2/20/2-3)


'நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப் பற்றித் தந்தை எதுவும் கூறாதிருந்தபோதும் அந்தப்புரம் முழுவதற்கும் கதியாகவும், ஆதரவாகவும் இருந்த அந்த ராமனே இன்று காட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். அவன் தன்னுடைய தாயான கோசலையிடம் எவ்வளவு கொண்டானோ, கவனமாக நடந்து அதேபோல் எங்கள் அனைவரிடமும் நடந்துகொண்டான்' என்று சொல்லிப் புலம்பி அழுதனர். ஸ்ரீராமன் தாயிடம் கொண்ட பக்திக்கு இதைவிடச் சிறந்த சான்று வேறு என்ன இருக்கமுடியும்?


தொடரும் . . . 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁



ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram


🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/udvegakathaigal


Whatsapp :- 


🍁🍁🍁🍁🍁


https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...