Skip to main content

(ஞானினஸ் தத்வ-தர்சின: தத்துவதர்சிகளால் எழுதப்பட்ட நூல்களை மட்டுமே நாம் தேர்ந்தெடுத்துக் படிக்க வேண்டும்.

 


அறிஞரென்ற பட்டம் பெற்றிருப்பதால், கல்வியில் முன்னேறியிருப்பதாக காட்டிக் கொள்ளும் நவீன இராட்சஸர்கள், பகவான் ராமச்சந்திரர் பரமபுருஷரல்ல என்றும், அவர் ஒரு சாதாரண மனிதர்தான் என்றும் நிரூபிக்க முயன்றுள்ளனர். ஆனால் கற்றுணர்ந்தவர்களும், ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவர்களும் இத்தகைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; பகவான் ராமச்சந்திரரையும், அவரது செயல்களையும், பரமசத்தியத்தை அறிந்த தத்துவ தரிசிகளால் அளிக்கப்படும் விளக்கங்களுக்கேற்ப மட்டுமே அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். பகவத்கீதையில் (4.34) பகவான் கூறுகிறார்:




“ஆன்மீக குருவை அடைந்து உண்மையை அறிய முயற்சிசெய். அவருக்குத் தொண்டு செய்து, அவரிடம் அடக்கமாக கேள்வி கேள். தன்னுணர்வு பெற்ற ஆத்மாவான அவர் உண்மையைக் கண்டவராதலால், அவரால் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.” ஒருவர் பரம சத்தியத்தைப் பூரணமாக அறிந்த ஒரு தத்துவ தரிசியாக இருந்தால் தான் அவரால் பரமபுருஷரைப் பற்றிய செயல்களை விவரிக்க இயலும். எனவே பல இராமாயண உரைகள் இருந்த போதிலும், அவற்றில் சில அதிகாரப்பூர்வமானவை அல்ல. சிலசமயங்களில் பகவான் ராமச்சந்திரரின் செயல்கள் ஒருவரது சொந்த மனக் கற்பனைகளுடனும், பௌதிக உணர்ச்சிகளுடனும் விவரிக்கப்படுகின்றன. ஆனால் பகவான் ராமச்சந்திரரின் சிறப்பியல்புகளை வெறும் கற்பனையாக எண்ணி கையாளக் கூடாது. பகவான் ராமச்சந்திரரின் நட வடிக்கைகளைப் பற்றி நீர் முன்பே கேட்டிருக்கிறீர்” என்று சுகதேவ கோஸ்வாமி பரீட்சித்து மகாராஜனிடம் கூறினார். எனவே, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் பல இராமாயணங்கள் இருந்ததாகத் தெரிகிறது. இன்றும் உள்ளன. ஆனால் தத்துவதர்சிகளால் (ஞானினஸ் தத்வ-தர்சின:) எழுதப்பட்ட நூல்களை மட்டுமே நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பெயரளவேயான அறிஞர் பட்டம் பெற்றுள்ளவர்களின் நூல்களை அல்ல. இதைத்தான் சுகதேவ கோஸ்வாமி எச்சரிக்கிறார். 



(ஸ்ரீமத்-பாகவதம் 9.10.3  / பொருளுரை )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே


ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram


🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/udvegakathaigal


Whatsapp :- 


🍁🍁🍁🍁🍁


https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...