Skip to main content

ஹரே கிருஷ்ண மந்திர ஜபம் விக்கிரக வழிபாட்டைவிட அதிக சக்தியுடையதாகும்

 


முன்பு மனிதர்களால் செய்யப்பட்ட எல்லாச் செயல்களும் விஷ்ணுவுடன் சம்பந்தப்பட்டிருந்தன. ஆனால் சத்திய யுகத்திற்குப் பிறகு, வைஷ்ணவர்களுக்கிடையில் அவமரியாதையான நடவடிக்கைகளின் அறிகுறிகள் காணப்பட்டன. மற்றவர்கள் வைஷ்ணவர்களாக மாறுவதற்கு எவன் உதவுகிறனோ, அவனே ஒரு வைஷ்ணவன் என்று ஸ்ரீல பக்தி வினோத தாகுரர் கூறியுள்ளார். மற்றவர்களை வைஷ்ணவர்களாக மாற்றியுள்ளதற்குச் சிறந்த உதாரணம் நாரத முனிவராவார். மற்றவர்களை வைஷ்ணவர்களாக மாற்றியுள்ள சக்திவாய்ந்த ஒரு வைஷ்ணவர் வழிபடத் தகுந்தவராவார். ஆனால் பௌதிக களங்கத்தின் காரணத்தால், சிலசமயங்களில் இத்தகைய மேலான வைஷ்ணவர்கள் மற்ற சாதாரண வைஷ்ணவர்களால் அவமதிக்கப்படுகின்றனர். இந்த களங்கத்தைக் கண்ட சிறந்த முனிவர்கள் ஆலயத்தில் விக்கிரக வழிபாட்டை அறிமுகப்படுத்தினர். இது திரேதா யுகத்தில் துவங்கப்பட்டது என்றாலும், குறிப்பாக துவாப யுகத்தில் இது மேலோங்கி இருந்தது. “த்வாபரே பரிசர்யாயாம்”. ஆனால் கலியுகத்தில் விக்கிரக வழிபாடு அலட்சியம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே ஹரே கிருஷ்ண மந்திர ஜபம் விக்கிரக வழிபாட்டைவிட அதிக சக்தியுடையதாகும். ஸ்ரீ சைதன்ய மகாபிரபு நடைமுறைக்கேற்ற ஓர் உதாரணத்தை அமைத்துக் காட்டியுள்ளார். அதாவது அவர் ஆலயங்களையோ, விக்கிரகங்களையோ ஸ்தாபிப்பதற்குப் பதிலாக, மிகப் பெரிய சங்கீர்த்தன இயக்கத்தை அறிமுகப்படுத்தினார். ஆகவே கிருஷ்ண உணர்வைப் பிரச்சாரம் செய்பவர்கள், குறிப்பாக உன்னத இலக்கியங்களை அதிகமாக விநியோகிப்பதன் மூலமாக, சங்கீர்த்தன இயக்கத்தை அதிகமாக வலியுறுத்த வேண்டும். இது சங்கீர்த்தன இயக்கத்திற்கு உதவியாக இருக்கும். விக்கிரக வழிபாட்டிற்குச் சாத்தியம் ஏற்படும் பொழுது பல ஆலயங்களை நாம் நிறுவலாம். ஆனால் பொதுவாக நாம் உன்னத இலக்கியங்களை விநியோகிப்பதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏனெனில் மக்களைக் கிருஷ்ண உணர்வு உள்ளவர்களாக மாற்றுவதற்கு இது அதிக பயனுள்ளதாக இருக்கும்.


ஶ்ரீமத் பாகவதம் 7.14.39 / பொருளுரை


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...