Skip to main content

பரம பக்தர்களுள் சிறந்த பிரகலாதர்

 



பரமபுருஷராகிய நரசிம்மதேவர் எப்படி பிரகலாத மகாராஜனை மகிழ்வித்த பின் மறைந்தருளினார் என்பதைப் பற்றியும், சிவபெருமானால் அருளப்பட்ட ஒரு வரத்தைப் பற்றியும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது.


பகவான் நரசிம்மதேவர் ஒன்றன்பின் ஒன்றாக பிரகலராத மகாராஜனுக்கு வரங்களை அருள விரும்பினார். ஆனால் அவற்றை ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடைகளாக எண்ணிய பிரகலாதர் அவற்றில் ஒன்றைக்கூட ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, அவர் பகவானுடைய தாமரைப் பாதங்களில் பூரண சரணாகதியடைந்து, “பகவானுடைய தாமரைப் பாதங்களில் பூரண சரணாகதியடைந்து, “பகவானுடைய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள ஒருவன் சொந்த புலன் நுகர்வுக்காக பகவானிடம் பிரார்த்திப்பானாயின், அவனைத் தூய பக்தன் என்று அல்லது பக்தன் என்றுகூட அழைக்க முடியாது. கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ள ஒரு வியாபாரியாகவே அவன் அழைக்கப்படுவான். அது போலவே, தன் சேவகனிடமிருந்து சேவையைப் பெற்றுக்கொண்ட பின் அவனை திருப்திப்படுத்த விரும்பும் எஜமானரும் உண்மையான எஜமானரல்ல” என்று கூறினார். எனவே பிரகலாதர் பகவானிடமிருந்து எதையும் யாசிக்கவில்லை. மாறாக, பகவான் தனக்கு வரமருள விரும்பினால், பௌதிக வரங்களுக்கு தான் மயங்கிவிடாதிருக்கும் வரத்தை அருளும்படி பகவானிடம் அவர் வேண்டினார். பக்தித்தொண்டிற்குப் பதிலாக சிற்றின்ப சுகங்களை வேண்டுவது எப்பொழுதும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். சிற்றின்ப ஆசைகள் தலை தூக்கிய உடனேயே ஒருவனது மனம், வாழ்வு, ஆத்மா, சமயக் கோட்பாடுகள், பொறுமை, புத்தி, வெட்கம், அழகு, பலம், ஞாபகசக்தி, உண்மை ஆகிய அனைத்தும் வெற்றி கொள்ளப்படுகின்றன. மனதில் பௌதிக ஆசைகள் இல்லாதிருக்கும் பொழுதுதான் ஒருவனால் தூய பக்தித் தொண்டைச் செய்ய முடியும்.


பரமபுருஷர் பிரகலாதரின் தூய பக்தியைக் கண்டு அவரிடம் மிகவும் திருப்தியடைந்தார். இருப்பினும், பிரகலாதர் இவ்வுலகில் பூரண மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, அடுத்த பிறவியில் வைகுண்டத்தில் வாழ்வார் என்ற வரத்தை பகவான் அருளினார். பிரகலாதர் மனவந்தர யுகத்தின் முடிவுவரை இந்த ஜட உலகில் அரசராக இருப்பார் என்ற வரத்தையும். அவர் ஜட உலகில் இருந்தபோதிலும், பகவானுக்குத் தூய பக்தி யோகத்தைச் செய்துகொண்டு, பகவானுடைய மகிமைகளைக் கேட்கும் வசதிகளைப் பெற்று, பகவானையே முற்றிலும் சார்ந்திருப்பார் என்ற வரத்தையும் பெற்றார். பக்தி யோகத்தின் மூலமாக யக்ஞங்கள் செய்யும் படி பகவான் பிரகலாதருக்கு அறிவுரை கூறினார். ஏனெனில், இது தான் ஓர் அரசரின் கடமையாகும்.

பகவானால் அருளப்பட்டதையெல்லாம் ஏற்றுக் கொண்ட பிரகலாதர் தன் தந்தைக்கு நல்ல கதியை அருளும்படி வேண்டினார். பகவானும் பிரகலாதரின் இந்த பிரார்த்தனைக்கு மறுமொழியாக, பிரகலாதரைப் போன்ற ஒரு தூய பக்தரின் குடும்பத்தில், அந்த பக்தரின் தந்தை மட்டுமின்றி, இருபத்தொரு தலைமுறைகளைச் சேர்ந்த அவரது முன்னோர்களும் முக்தியடைவார்கள் என்று உறுதியளித்தார். மேலும் பிரகலாதர் மரணமடைந்த தன் தந்தையின் அந்திம கிரியைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பகவான் கேட்டுக் கொண்டார்.


பிறகு அங்கிருந்த பிரம்மதேவர், பிரகலாதருக்கு வரங்களைக் கொடுத்ததற்காக பகவானுக்கு தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகக் கூறி, பலவிதமாக பகவானைத் துதித்தார். இரண்யகசிபுவிற்குக் கொடுத்தது போன்ற வரத்தை இனிமேல் வேறெந்த அசுரனுக்கும் கொடுக்க வேண்டாம் என்று பகவான் பிரம்மதேவருக்கு அறிவுரை கூறினார். ஏனெனில் அத்தகைய வரங்கள் அவர்களை இஷ்டப்படி செயற்படத் தூண்டும். பிறகு பகவான் நரசிம்மதேவர் மறைந்தருளினார். அன்றை தினமே பிரகலாத மகாராஜன் உலக சிம்மாசனத்தில் பிரம்மதேவராலும், சுக்ராசாரியராலும் அமர்த்தப்பட்டார்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,

ராம ராம, ஹரே ஹரே

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஹரே கிருஷ்ண!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆

Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇

🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க


ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...