Skip to main content

ஹரே கிருஷ்ண ஸங்கீர்த்தன இயக்கத்தின் காலம்






கலியுகம் களங்கள் நிறைந்ததாகும். இது ஸ்ரீமத் பாகவதத்தில் (12.3.51) பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது:


கலேர் தோஷ - நிதே ராஜன்

அஸ்தி ஹி ஏகோ மஹான் குண:

கீர்த்னாத் ஏவ க்ருஷ்ணஸ்ய

முக்த - ஸங்க: பரம் வ்ரஜேத்


இக்கலியுகம் அளவற்ற குற்றங்கள் நிறைந்ததாகும். உண்மையில், இது கடலளவு குற்றங்களைக் கொண்டுள்ளது. (தோஷ - நிதி). ஆனால் ஒரு வாய்ப்பு, ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. கீர்த்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய முக்த - ஸங்க: பரம் வ்ரஜேத்: ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடுவதாலேயே, கலியுகத்தின் களங்கத்திலிருந்து ஒருவர் விடுபட்டு, அவரது சுயமான ஆன்மீக உடலில், அவர் பரம பதத்தைச் சென்றடைய முடியும், இதுவே கலியுகத்தில் கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பமாகும்.


கிருஷ்ணர் தோன்றிபோது, அவரது கட்டளைகளை அவர் கொடுத்தார். மேலும் கிருஷ்ணரே, ஒரு பக்தராக ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவாக தோன்றியபோது, கலியுகக் கடலை கடப்பதற்கான வழியை அவர் நமக்குக் காட்டினார். அதுவே ஹரே கிருஷ்ண இயக்கத்தின் பாதையாகும். ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தோன்றியபோது, இந்த சகாப்தத்தின் ஸங்கீர்த்தன இயக்கத்தை அவர் அறிமுகப்படுத்தினார். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு இந்த சகாப்தம் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஸங்கீர்த்தன இயக்கத்தை ஏற்று, ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தைப் பாடுவதாலேயே, இக்கலியுகத்தலுள்ள வீழ்ந்த ஆத்மாக்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது இதன் பொருளாகும். பகவத்கீதை பேசப்பட்ட குருட்சேத்திரப் போருக்குப் பிறகு, 4,32,000 ஆண்டுகளுக்குக் கலியுகம் தொடரும். இதில் 5,000 ஆண்டுகள் மட்டுமே கடந்துள்ளது. இவ்வாறாக இன்னும் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளன. இந்த 4,27,000 ஆண்டுகளில், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவால் 500 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டதும், 10,000 ஆண்டுகளுக்கு நீடிக்கப் போவதுமான இந்த ஸங்கீர்த்தன இயக்கம், கலியுகத்தின் வீழ்ந்த ஆத்மாக்களுக்கு அரிய சந்தர்ப்பத்தை வழங்குகிறது. அவர்கள் இக்கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஏற்று, ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தைப் பாடுவதன் வாயிலாக, பௌதிக வாழ்வின் பிடியிலிருந்து விடுபட்டு, பகவானின் பரலோகத்திற்கு திரும்பிச் செல்லலாம்.


ஹரே கிருஷ்ண மந்திர ஜபம் எக்காலத்திலும் சக்தி வாய்ந்ததாகும். ஆனால் இக்கலியுகத்தில் அது விசேஷமான சக்தியைக் கொண்டுள்ளது. ஆகவே சுகதேவ கோஸ்வாமி, பரீட்சித்து மகாராஜனுக்கு உபதேசிக்கும் வேளையில், இந்த ஹரே கிருஷ்ண மந்திர ஜபத்தை வலியுறுத்தினார்.


கலேர் தோஷ - நிதே ராஜன்

அஸ்தி ஹி ஏகோ மஹான் குண:

கீர்த்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய

முக்த - ஸங்க: பரம் வ்ரஜேத்


“எனக்குப் பிரியமான ராஜனே, கலியுகம் குற்றங்கள் நிறைந்ததாக இருப்பினும், இந்த யுகத்தைப் பற்றிய சிறந்த குணமொன்று இருக்கத்தான் செய்கிறது. அது என்னவெனில், ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தைப் பாடுவதாலேயே ஜட பந்தத்திலிருந்து ஒருவர் விடுதலையடைந்து, தெய்வீகமான இராஜ்யத்திற்கு அவரால் ஏற்றம் பெய முடியும்.” (பாகவதம் 12.3.51) பூரண கிருஷ்ண உணர்வில் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தைப் பரப்பும் பணியை மேற்கொண்டுள்ளவர்கள், பௌதிக வாழ்வின் பிடியிலிருந்து மக்களை மிகவும் சுலபமாக விடுவிப்பதற்கு, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே, ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் உபதேசங்களைப் பின்பற்றி, மனப்பூர்வமாக கிருஷ்ண பக்தி இயக்கத்தை உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதே நமது கடமையாகும். இதுவே மனித சமுதாயத்தின் அமைதிக்கும், செழுமைக்கும் உரிய மிகச்சிறந்த பொதுநலத் தொண்டாகும்.



ஶ்ரீமத் பாகவதம் 8.5.23 / பொருளுரை



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...