Skip to main content

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், அர்ஜுனனும் துவாரகையைச் சேர்ந்த ஒரு பிராமணரின் இறந்த புத்திரிகளை மீட்டிய லீலை

 



ஒருசமையம் துவாரகையில் ஒரு பிராமணரின் மனைவிக்குக் குழந்தை பிறந்து உடனே இறந்துவிட்டது. பிராமணரும் உயிரற்ற தன் மகனை மன்னர் மகாசேனரின் சபைக்கு எடுத்துச் சென்று, அரசரைப் பின்வருமாறு திட்டினார். பீராமணர்களைப் பகைப்பவனும், வஞ்சகனுமான இவன் தன் கடமைகளை சரியாக நிறைவேற்றத் தவறியதால் தான் என் மகன் இறந்து போனான். அந்த பிராமணரின் இந்த துர்பாக்கியமான நிலை தொடர்ந்து கொண்டே இருந்தது. பிராமணர் ஒவ்வொரு முறையும் தன் இறந்த குழந்தையை அரச சபைக்குக் கொண்டு வந்து போட்டு முன்போலவே அரசரைத் திட்டினார். அம்மாதிரியே அவரது ஒன்பதாவது குழந்தையும் இறந்து போய், அவரது புலம்பலைக் கேட்க நேர்ந்த அர்ஜுனன் பிராமணரே இனி உண்டாகும் உமது குழந்தையை நான் காப்பாற்றுவேன். இதை நான் செய்யத் தவறினால், அக்கினிப் பிரவேசம் செய்து அதனால் என் பாவத்தைப் போக்கிக் கொள்வேன் என்று கூறினார்.

சில காலத்திற்க்குப் பிறகு அந்த பிராமணரின் மனைவி பத்தாவது குழந்தையை ஈன்றெடுக்கும் தறுவாயிலிருந்தாள். அதைக் கேள்விப்பட்ட அர்ஜுனன், பிரசவ அறைக்குச் சென்று, தமது அம்புகளால் பாதுகாப்பான ஒரு சரக்கூட்டை அமைத்தார். ஆனால் அவரது முயற்சிகள் வீணாயின. ஏனெனில், பிறந்ததும் ஓயாமல் அழுது கொண்டே இருந்த அக்குழந்தை உடனே ஆகாயத்தில் சென்று மறைந்தது போயிற்று. அப்பொழுது அந்த பிராமணர் அர்ஜுனனை மிகவும் ஏளனம் செய்ததால் அர்ஜுனன் மரண தேவனான யமராஜனின் உலகிற்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் அந்த பிராமண புத்திரனை அர்ஜுனன் அங்கு காணவில்லை. பதினான்று லோகங்களிலும் தேடிய பிறகும் அவரால் அக்குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவ்வாறு பிராமண புத்திரனைக் காப்பாற்றத் தவறிய அர்ஜுனன் அக்கினிப் பிரவேசம் செய்து உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். அப்பொழுது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அங்கு வந்து அவரைத் தடுத்து, அந்த பிராமண புத்திரர்களை உனக்கு நான் காட்டுகிறேன். எனவே உன்னை நீயாகவே இகழ்ச்சிக்கு உள்ளாக்கிக் கொள்ளாதே என்று கூறினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறகு அர்ஜுனனைத் தமது தெய்வீகமான தேரில் ஏற்றிக்கொண்டு, ஏழு சமுத்திரர்களுடன் கூடிய ஏழு பிரபஞ்சத் தீவுகளைக் கடந்து, பிறகு லோகாலோக மலைப் பர்வதத்தையும் கடந்து இருளடர்ந்த பிரதேசத்தினுள் பிரவேசித்தார். குதிரைகளால் தங்களுடைய வழியைக் கண்டு பிடிக்கமுடியவில்லை. இதனால் கிருஷ்ணர் கொழுந்து விட்டெரியும் தமது சுதர்சன சக்கரத்தை முன்னால் அனுப்பி அந்த இருளை துளைக்கச் செய்தார். படிப்படியாக அவர்கள் காரணக் கடலை அடைந்தனர். அதற்குள் பகவான் மகா விஷ்ணுவின் நகரம் இருப்பதையும், அங்கு ஆயிரம் தலை நாகமான அனந்தனின் மேல் மகா விஷ்ணு சயனித்திருப்பதையும் கண்டனர். ஸ்ரீ கிருஷ்ணரையும், அர்ஜுனனையும் வரவேற்ற பகவான் மகா விஷ்ணு உங்களிருவரையும் நான் காண விரும்பினேன். அதற்காகத்தான் அந்த பிராமண புத்திரர்களை நான் இங்கு கொண்டுவந்தேன். தயவு செய்து நர நாராயண ரிஷி என்ற உங்களுடைய ரூபங்களில் சமய ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாக விளங்கி பொது ஜனங்களுக்குத் தொடர்ந்து நன்மை செய்து வாருங்கள் என்று கூறினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், அர்ஜுனனும் பிறகு பிராமண புத்திரர்களை அழைத்துக் கொண்டு துவாரகைக்குச் சென்று, அவர்களை அவர்களது தந்தையிடம் ஒப்படைத்தனர். ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமையை நேரிடையாக அனுபவித்து அர்ஜுனன் ஆச்சரியமடைந்தார். பகவானின் கருணையால் மட்டுமே ஒரு ஜீவனால் சக்தியையோ ஐசுவரியத்தையோ காட்ட முடியும் என்று அர்ஜுனன் முடிவு செய்தார்.



ஶ்ரீமத் பாகவதம் 10.89 அறிமுகம்



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண🙏


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...