Skip to main content

பாவக்ராஹீ ஜனார்தனர் (தூய பக்தர் ஸ்ரீ நரசிம்மானந்த பிரம்மசாரி)


ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குச் செல்ல உள்ளார் என்பதை ஸ்ரீ நரசிம்மானந்த பிரம்மசாரி கேள்விப்பட்டபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியுற்று தமது மனதினால் அந்தப் பாதையினை அலங்கரிக்கத் தொடங்கினார். (ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.155 )


முதலில் நரசிம்மானந்த பிரம்மசாரி குலியா நகரத்திலிருந்து தொடங்கும் ஓர் அகலமான சாலையினை தியானித்தார். அவர் அச்சாலையினை இரத்தினங்களால் அலங்கரித்து, அதன்மீது காம்பு இல்லாத மலர்களின் படுக்கையை விரித்தார்.(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.156)



அவர் தமது மனதாலேயே சாலையின் இரு புறங்களையும் மலர்கள் மிகுந்த மகிழ மரங்களினால் அலங்கரித்தார், இடையிடையே இரு புறங்களிலும் தெய்வீகத் தன்மையைக் கொண்ட ஏரிகளை வைத்தார்.(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.157 )



அந்த ஏரிகளின் படித்துறைகள் இரத்தினங்களால் கட்டப்பட்டிருந்தன, ஏரிகளோ மலர்ந்த தாமரை மலர்களால் நிரம்பியிருந்தன. அங்கே பலவிதமான பறவைகள் கீச்சிட்டுக் கொண்டிருந்தன, அங்கிருந்த நீரானது அமிர்தம் போன்று இருந்தது.(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.158 )



சாலை முழுவதும் குளிர்ந்த இளங்காற்று நிறைந்திருந்தது, அது பல்வேறு மலர்களின் நறுமணங்களைத் தாங்கி வந்தது. அவர் தமது சாலையின் கட்டமைப்பினை கானாய் நாடசாலா வரை கொண்டு சென்றார்.(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.159 )



மனதினுள் விருந்தாவனப் பாதையினை அமைத்த நரசிம்மானந்த பிரம்மசாரியினால் கானாய் நாடசாலாவிற்கு அப்பால் அதனை வடிவமைக்க முடியவில்லை. சாலையின் கட்டுமானப் பணியினை ஏன் நிறைவு செய்ய இயலவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல், அவர் ஆச்சரியமடைந்தார்.(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.160 )



அதன் பிறகு, ஸ்ரீ சைதன்யர் இம்முறை விருந்தாவனத்திற்குச் செல்ல மாட்டார் என்று அவர் மிகுந்த உறுதியுடன் இதர பக்தர்களிடம் உரைத்தார்.


பொருளுரை


ஸ்ரீ நரசிம்மானந்த பிரம்மசாரி ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மிகச் சிறந்த பக்தராவார்; எனவே. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு குலியாவிலிருந்து விருந்தாவனத்திற்குச் செல்கிறார் என்பதைக் கேள்விப்பட்டபோது, அவரிடம் எந்த பௌதிகச் செல்வமும் இல்லை என்றபோதிலும், அவர் தமது மனதினுள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பயணத்திற்காக மிகவும் அற்புதமான சாலையினை அமைக்கத் தொடங்கினார். அப்பாதையின் சில வர்ணனைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. ஆயினும், மனதினால்கூட கானாய் நாடசாலாவிற்கு அப்பால் அவரால் சாலையை அமைக்க முடியவில்லை. எனவே, சைதன்ய மஹாபிரபு இம்முறை விருந்தாவனத்திற்குச் செல்ல மாட்டார் என்று அவர் முடிவு செய்தார்.


ஒரு தூய பக்தனுக்கு வெளிப்புறமாக சாலை அமைப்பதும் மனதினுள் அமைப்பதும் ஒன்றாகும். ஏனெளில், புருஷோத்தமரான முழுமுதற் கடவுளான ஜனார்தனர், பா,வ-க்ராஹீ அல்லது உணர்ச்சிகளை ஏற்பவர் என்று அழைக்கப்படுகிறார். அவரைப் பொறுத்தவரையில், உண்மையான இரத்தினங்களால் அமைக்கப்பட்ட சாலையும் மனதில் இரத்தினங்களால் அமைக்கப்பட்ட சாலையும் ஒன்றுதான். சூட்சுமமாக உள்ளபோதிலும் மனதும் ஜடப் பொருளே. எனவே, ஸ்தூலப் பொருளானாலும் சரி, சூட்சுமப் பொருளாளாலும் சரி, பகவானின் தொண்டில் ஈடுபடுத்தப்படும் எந்தவொரு பாதையும் பரம புருஷ பகவானால் சமமாக ஏற்கப்படுகிறது. பகவான் தம்முடைய பக்தன் தமக்கு சேவை செய்வதற்கு எவ்வளவு தயாராக உள்ளான் என்பதைப் பார்த்து, அவனுடைய மனப்பான்மையினை அங்கீகரிக்கின்றார். பக்தன் பகவானுக்கு ஸ்தூலப் பொருளை வைத்தும் சேவை செய்யலாம் அல்லது சூட்சுமப் பொருளை வைத்தும் சேவை செய்யலாம்-அஃது அவனது சுதந்திரம். அந்த சேவையானது பரம புருஷ பகவானின் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதே முக்கியமான கருத்தாகும். இது பகவத் கீதையில் (9.26) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


பத்ரம்' புஷ்பம்' பலம்' தோயம்' யோ மே பக்த்யா ப்ரயச்சதி 

தத் அஹம் பக்த்யுபஹ்ருதம் அஷ்னாமி ப்ரயதாத்மன:


"அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு இலையோ பூவோ பழமோ நீரோ அளித்தால், அதனை நான் ஏற்கின்றேன்." உண்மையான மூலப்பொருள் பக்தியே. தூய பக்தி ஜட இயற்கையின் குணங்களினால் களங்கமடைவதில்லை. அஹைதுக்யப்ரதிஹதா, எதையும் எதிர்பார்க்காத பக்தித் தொண்டானது எந்தவொரு பெளதிகச் சூழ்நிலையினாலும் தடுக்கப்பட இயலாததாகும். அதாவது, பரம புருஷ பகவானுக்கு சேவை செய்வதற்கு ஒருவன் செல்வந்தனாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மிகமிக ஏழ்மையில் உள்ளவன்கூட, அவனிடம் தூய பக்தி இருந்தால், பரம புருஷ பகவானுக்கு சமநிலையில் சேவை செய்ய முடியும். அந்த சேவையில் எந்தவொரு பௌதிக உள்நோக்கமும் இல்லாமல் இருந்தால், பக்தித் தொண்டானது எந்தவொரு பெளதிகச் சூழ்நிலையினாலும் தடுக்கப்பட முடியாததாகும்.


(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.161  மொழிபெயர்ப்பு மற்றும் பொருளுரை )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...