Skip to main content

பரமபுருஷர் கற்பனையில் உருவான ஒரு பொருளலல்ல

 



அத்ர மாம் ம்ருகயந்தி அத்தா யுக்தா ஹேதுபிர் ஈஸ்வரம்
க்ருஹ்யமாணைர் குணைர் லிங்கைர் அக்ராஹ்யம் அனுமானத:


மொழிபெயர்ப்பு


பரமபுருஷராகிய நான் சாதாரண புலன் உணர்வினால் அறியப்பட முடியாதவனாவேன். இருப்பினும், மனித வாழ்வில் இருப்பவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆராய்ந்து அறியப்பட்ட அறிகுறிகளால் நேரடியாக என்னைத் தேடுவதற்குத் தங்களுடைய புத்தியையும், பிறபுலன்களின் சாமர்த்தியத்தையும் உபயோகிக்கலாம்.


பொருளுரை


ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தியின் கருத்துப்படி, இச்சுலோகத்தில யுக்தா: என்ற சொல், பக்தி-யோகத்தின் கட்டுப்பாடான பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்களைக் குறிக்கிறது. சில மூடர்கள் நினைப்பது போல், பகவத் பக்தர்கள் மத வெறியர்களாகித் தங்க்ள் புத்தியை விட்டுவிடுபவர்களல்ல. அனுமானத: மற்றும் குணைர் லிங்கை: என்ற சொற்களால் சுட்டிக் காட்டப்படுவதுபோல், பக்தி-யோகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பக்தன் மனித மூளையிலுள்ள எல்லாப் பகுத்தறிவுப் பிரிவுகளாலும் தீவிரமாக பரமபுருஷரைத் தேடுகிறான். ஆனால்தேடுதல்என்று பொருள்படும் ம்ருகயந்தி என்ற சொல், ஒழுங்கற்ற அல்லது அங்கீகரிக்கப்படாத முறையை குறிப்பிடுவது ஆகாது. ஒரு குறிப்பிட்ட நபரின் தொலைபேசி எண்ணைத் தேடும் நாம், அங்கீகரிக்கப்பட்ட தொலைபேசி செய்திப்புத்தகத்தில் பார்க்கிறோம். அவ்வாறே, நாம் ஒரு குறிப்பிட்ட பொருளைத் தேடும்பொழுது, அப்பொருளைப் பிரத்தியேகமாக விற்பனை செய்யும் கடைக்குச் சென்றால் நாம் தேடும் பொருள் நிச்சயம் கிடைக்கும். பரமபுருஷர் கற்பனையில் உருவான ஒரு பொருளலல்ல என்பதால், பகவானின் நிலையை நாம் மனம்போனபடி கற்பனை செய்து கொள்ள முடியாது என்று ஸ்ரீல ஜீவகோஸ்வாமி குறிப்பிடுகிறார். எனவே, பரமபுருஷரைப் பற்றிய தகவலைச் சேகரிக்க ஒருவன் அதிகாரப்பூர்வமான வேத சாஸ்திரங்களில் ஒழுங்கான பரிசோதனையை நடத்தவேண்டும். சாதாரண மன ஊகத்தினாலோ, ஜடப் புலன்களின் செயல்களினாலோ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அடையவோ, அறியவோ முடியாது என்பதையே இச்சுலோகத்திலுள்ள அக்ராஹ்யம் என்ற சொல் சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பாக ஸ்ரீல ரூப கோஸ்வாமி தமது பக்தி ரஸாம்ருத ஸிந்து (1.2.234) என்ற நூலில் பின்வரும் சுலோகத்தைக் குறிப்பிட்டுள்ளார்.


அத: ஸ்ரீ க்ருஷ்ண-நாமாதி பவேத் க்ராஹ்யம் இந்ரியை:
ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ ஸ்வயம் ஏவ ஸ்ஃபுரதி அத:

எவராலும் தனது பௌதிக மாசுடைய புலன்களால் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமம், ரூபம், குணம் மற்றும் லீலைகளின் உன்னத தன்மையைப் புரிந்து கொள்ள முடியாது. ஒருவன் உன்னதமான பகவத் சேவையில் தன்னை ஆழ்த்திவிடும் போதுதான் பகவானின் உன்னத நாமம், ரூபம், குணம் மற்றும் லீலைகள் அவனுக்கு வெளிப்படுத்தப்படுகின்றன.”


க்ராஹ்யமாணைர் குணை: என்ற சொற்கள், மனித மூளையின் பகுத்தறிவு மற்றும் புத்திக்கூர்மை ஆகிய பிரிவுகளைச் சுட்டிக்காட்டுகின்றன. பகவானை நேரடியாகவும், மறைமுகமாகவும் உணர்வதற்கு இவைகளை உபயோகிக்க முடியும் பகவானுடைய சிருஷ்டியின் மூலம் அவரை மறைமுகமாக உணர முடியும். நம்முடைய புத்தியினால் (மற்றும் புலன்களால்) இவ்வுலகை நாம் உணர்வதால், நம் சொந்த புத்திக்கும் ஒரு சிருஷ்க் கர்த்தா இருக்கவேண்டும் என்றும், எனவே அநத் சிருஷ்டிக் கர்த்தா அதி புத்திசாலி என்றும் நாம் முடிவு செய்யலாம். எனவே சாதாரண பகுத்தறிவைக் கொண்டே, அனைத்தையும் ஆளும் பரமபுருஷர் ஒருவர் இருப்பதை நிதான புத்தியுள்ள ஒருவனால் புரிந்து கொள்ள முடியும்.


பகவானின் புனித நாமங்கள் பெருமைகளைக் கேட்பதாலும், பாடுவதாலும் அவரை நேரடியாக உணர முடியும். ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: என்றால், எப்பொழுதும் ஒருவன் பகவானின் பெருமகளைப் பாடவும், கேட்கவும் வேண்டும் என்று பொருள். பகவானின் பெருமைகளைச் சிறப்பாகப் பாடுபவனும், கேட்பவனும் அவரை நேருக்கு நேராகக் காண்பது நிச்சயம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். எனவே அவரை எல்லா இடங்களிலும் ஒருவ்ன் தேடவேண்டும். பக்தி -யோகத்தினால் தூய்மையடைந்த உன்னதமான புலன்களால் பரமபுருஷரை நேரடியாக உணரமுடியும். இச்சுலோகத்தில் அத்தா என்ற சொல்லால் சுட்டிக் காட்டப்படுவது போல், இவ்வுணர்வு நேரடியானது, கற்பனையானது அல்ல. இக்கருத்த ஸ்ரீல பிரபபுாதரால் பின்வரும் ஸ்ரீமத் பாகவத சுலோகத்தின் (2.2.35) பொருளுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.


பகவான் ஸர்வ- பூதேஷு லக்ஷித: ஸ்வாத்மனா ஹரி:
த்ருஸ்யைர் புத்தி- ஆதிபிர் த்ரஷ்டா லக்ஷணைர் அனுமாபகை:

பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனிப்பட்ட ஆத்மாவுடன் ஒவ்வொரு ஜீவராசியிலும் இருக்கிறார். நாம் காணும் செயலிலும், புத்தியிடமிருந்து உதவி பெறும் செயலிலும் இவ்வுண்மையை நம்மால் உணரவும், அனுமானிக்கவும் முடியும்.”


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

( ஶ்ரீமத் பாகவதம் / 11.7.23 / பொருளுரை / வழங்கியவர்:  ஶ்ரீல பிரபுபாதர்  )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...