Skip to main content

மதன தாஹன் அல்லது ராதாராணியின் அழகில் மயங்கியவர்




அதிகரித்துக் கொண்டே போகும் பகவானின் அழகினை வர்ணிக்கப் போதுமான வார்த்தைகள் கிடையாது. பகவானின் உலக மற்றும் ஆன்மீகப் படைப்புக்களிலேயே எழில் நலம் மிக்கவள் அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமியே ஆவாள்; தான் மிக்க அழகுடையவர் என்னும் உணர்வு அவளிடம் இருக்கிறது, இருந்தும் பகவான் முன்னால் அவளது அழகு தோற்கடிக்கப்பட்டது. அதாவது பகவானின் முன்னர் இலட்சுமி தேவியின் அழகு இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது என்று கூறலாம். வைணவக் கவிஞர்களின் வார்த்தைகளின்படி கண்ணைக் கவரும் பகவானின் அழுது ஆயிரம் மன்மதன்களைத் தோற்கடிக்கக் கூடியதாகும். ஆதலினாலேயே அவர் மதன மோஹனன் என்றழைக்கப்படுகிறார். மேலும் பகவான் கூட சில நேரங்களில் ராதா ராணியின் அழகில் மயங்குகிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கவிஞர்கள், அச்சூழ்நிலைகளின் கீழ் பகவான் மதன மோஹனனாக இருந்த போதிலும் கூட அவர் மதன தாஹன் அல்லது ராதாராணியின் அழகில் மயங்கியவர் என்று விளக்குகின்றனர். உண்மையில் பகவானின் எழிலானது மேன்மை மிக்கதாகும். அது வைகுண்ட லோகத்திலுள்ள இலட்சுமி தேவியின் எழிலையும் வெல்லக் கூடியதாகும். வைகுண்ட லோகத்திலுள்ள பகவானின் பக்தர்கள் பகவானை அழகில் சிறந்தவராகக் காண விரும்புகின்றனர். ஆனால் கோகுலம் அல்லது கிருஷ்ண லோகத்திலுள்ள பக்தர்கள் கிருஷ்ணரைக் காட்டிலும் அழகு மிக்கவராக ராதாராணியைக் காண விரும்புகின்றனர். இதில் சரிக்கட்டுகின்ற முறை என்னவென்றால் தனது பக்தர்களை மகிழ்ச்சியடையச் செய்யவர் எனும் பொருள்தரும் “பக்தவத்ஸலம்” என்னும் பெயரையுடைய பகவான் இத்தன்மைகளை மேற்கொள்வதினாலேயே சிவபெருமான், பிரம்மதேவன், பிற தேவர்கள் போன்ற பக்தர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்கிறார். இங்கும் கூட பக்த முனிவர்களான குமாரர்களுக்காக பகவான் தனது எழில்கோலத்துடன் காட்சி தந்தார். அவர்களும் தங்கள் விழிகளினால் பகவானை விழுங்கி விடுவது போல் ஆவல் தீராது தொடர்ந்து அவரை பார்த்துக் கொண்டேயிருந்தனர்.


ஶ்ரீமத் பாகவதம் 3.15.42 / பொருளுரை

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.











Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...