Skip to main content

எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் தன்னை ஒருவன் விடுவித்துக் கொள்வதற்குரிய மிகச் சிறந்த முறை

 


யத்-கீர்தனம் யத்-ஸ்மரணம் யத்-ஈக்ஷணம்
யத்-வந்தனம் யச்-ச்ரவணம் யத்-அர்ஹணம்
லோகஸ்ய ஸத்யோ விதுனோதி கல்மஷம்
தஸ்மை ஸுபத்ர-ஸ்ரவஸே நமோ நம:


மொழிபெயர்ப்பு

சர்வ மங்களம் பொருந்திய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய பெருமைகள், நினைவுகள், அவரது தரிசனம், பிரார்த்தனைகள், அவரைப் பற்றி கேட்ட மற்றும் அவரது வழிபாடு ஆகியவை சாதகனின் பாவ விளைவுகளை எல்லாம் உடனே தூய்மை செய்துவிடக் கூடியவையாகும். அவருக்கு எனது வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பொருளுரை

எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் தன்னை ஒருவன் விடுவித்துக் கொள்வதற்குரிய மிகச் சிறந்த முறை மிகப் பெரிய அதிகாரியான ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமியால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. நினைவில் கொள்ளுதல், ஆலயத்திற்குச் சென்று விக்கிரகத்தை தரிசித்தல், பகவான் முன்னிலையில் பிரார்த்தனைகள் செய்தல், மற்றும் பகவானின் புகழ் பாடப்படுவதைக் கேட்டல் ஆகியவற்றை ஸ்ரீமத் பாகவதத்திலும், பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளவாறு, கீர்த்தனமாகவும் வேறு முறைகளிலும் நிறைவேற்ற முடியும். இன்னிசைகளுடன் பகவானின் புகழைப் பாட முடியும். ஸ்ரீமத் பாகவதம் அல்லது பகவத் கீதை போன்ற சாஸ்திரங்களைப் படிப்பதன் மூலமாகவும் கீர்த்தனத்தை நிறைவேற்ற மூடியும்.

பகவானுடன் தாங்கள் உறவாடவில்லை என்று பக்தர்கள் எண்ணினாலும், பிரத்யட்சமாக தங்கள் முன் அவர் காட்சி தரவில்லை என்றாலும், அதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைய வேண்டிய அவசியமில்லை. பாடுதல், கேட்டல், நினைவில் கொள்ளுதல் போன்ற பக்தி முறைகளை நிறைவேற்றுகதன் மூலமாக, பகவானின் சகவாசத்தை நம்மால் பெற முடியும். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அல்லது ராமரின் புனித மாம ஓசையும் கூட சூழ்நிலையை உடனே திவ்யமானதாக மாற்றிவிடுகிறது. எங்கெல்லாம் அத்தகைய உன்னதமான தூய பக்தித் தொண்டு நிறைவேற்றப்படுகிறதோ அங்கெல்லாம் பகவான் நிச்சயமாக இருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறாக கீர்த்தனத்தை குற்றமற நிறைவேற்றுபவன் பெருமானின் சாதகமான கூட்டுறவைப் பெறுகிறான். அதைப் போலவே, நினைத்தலும், பிரார்த்தனைகளும் மிகத் திறமையான வழிகாட்டலின் கீழ் நிறைவேற்றப்படுமானால், அவை விரும்பிய பலனை நமக்கு அளிக்கும். பக்தித் தொண்டு முறைகளை ஒருவன் புதிதாக உண்டு பண்ணக் கூடாது. ஆலயத்திலுள்ள பகவானின் வடிவத்தை ஒருவன் வழிபடலாம். அல்லது ஒரு மசூதியிலோ, தேவாலயத்திலோ அருவமான முறையில் ஒருவன் பகவானுக்கு பக்தியூட்டும் பிரார்த்தனைகளை அர்ப்பணிக்கலாம். ஆலயத்தில் வழிபடுவதாலோ அல்லது தேவாலயத்தில் பிரார்த்தனைகளைச் செய்வதாலோ, பாவ விளைவுகளிலிருந்து விடுபட்டு விடலாம் என்று எதிர்பார்த்து, வேண்டுமென்றே பாவங்களைச் செய்யும் மனநிலை, நாம்னோ பலாத் யஸ்ய ஹி பாப-புத்தி: என்று அழைக்கப்படுகிறது. மேலும் இதுவே பக்தித் தொண்டை நிறைவேற்றுவதிலுள்ள மிகப் பெரிய குற்றமாகும். எனவே, இத்தகைய பாவப் படுகுழிகளிலு விழுந்து விடாதவாறு தன்னை ஒருவன் பாதுகாத்துக் கொள்வதற்கு, பகவானைப் பற்றி கேட்பது மிகவும் அத்தியாவசியமானதாகும். இந்த செவிசாய்க்கும் முறைக்கு விசேஷமான முக்கியத்துவத்தை அளிப்பதற்காக, இவ்விஷயத்தில் சர்வ மங்களகரமான அதிர்ஷ்டத்தை வேண்டி கோஸ்வாமி பிரார்த்தனை செய்கிறார்.


ஶ்ரீமத் பாகவதம் 2.4.15 / பொருளுரை

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...