Skip to main content

அற்பத்தனத்திற்கான விலை




முன்னொரு காலத்தில் உபபர்ஹணா என்றறியப்படும் கந்தர்வன் ஒருவர் இருந்தார். கந்தர்வர்கள் சுவர்க்க லோகத்தில் வாழும் தேவர்களில் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் மிகவும் அழகான தோற்றடயவர்களாகவும், நன்றாகப் பாடும் திறனுடையவர்களுமாகவும் இருந்தனர்.  இவர்கள் வாழும் கிரஹம் கந்தர்வ லோகம் என்றறியப்படுகிறது. உபபர்ஹணா மிகவும் அழகான தோற்றமுடையவராக, அவரது முகம் கவர்ச்சி மிக்கதாகவும், கட்டுமஸ்தான தேக அமைப்பையும் பெற்றிருந்தார். இதனால் பிற கந்தர்வர்களும் கூட இவரை மதித்தனர். இவர் மலர் மாலைகளாலும், சந்தனக் குழம்பினாலும், அழகு சாதனப்பொருட்களினாலும் மற்றும் ஆவரணங்களினாலும் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்வதில் நிபுணராகத் திகழ்ந்தார். அவர் அங்கு வாழ்ந்த பெண்களுக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார்.


ஒரு சமயம் சுவர்க்கலோக வாசிகள் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை போற்றித் துதிக்கும் பொருட்டு ஆன்மீக விழா ஒன்றினை ஏற்பாடு செய்தனர். எல்லா விதத்திலுமுள்ள தேவர்களையும் அதாவது கந்தர்வர்கள் மற்றும் அப்ஸரசுக்களும் அவ்விழாவில் பங்கெடுக்க அழைக்கப்பட்டிருந்தனர். உபபர்ஹணாவும் பல அழகிய பெண்கள் புடை சூழ அவ்விழாவிற்குச் சென்றார். துரதிர்ஷ்ட வசமாக புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பகவான் கிருஷ்ணரின் அல்லது பகவான் விஷ்ணுவின் புகழைப் பாடி துதிப்பதற்குப் பதிலாக போதையேறிய உபபர்ஹணா அவ்விழாவிற்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் பெளதிக பாடல்களைப் பாடினார். விழாவிற்கு வருகை தந்த அனைவரும் உபபர்ஹணாவின் இச்செயலால் வருத்தம் அடைந்தனர்.


இதனால் பிரபஞ்சத்தின் செயல்களை மேற்பார்வையிடுபவர்களான பிரஜாபதிகள் உபபஹர்ணாவிற்கு சாபம் கொடுத்தனர். "உன்னுடைய இந்த மோசமான செய்கைக்கு அவசியம் தண்டனை பெற்றே தீர வேண்டும்". எனவே நீ இழிகுலத்தில் அழகற்றவனாக பிறக்கக் கடவாய்!!லென்று சபித்தனர்.  இவ்வாறு சபிக்கப்பட்ட உபபர்ஹணா உயர்ந்த சுவர்க்க லோகத்திலிருந்து பூலோகத்திற்குள் வீழ்ந்தார். கந்தர்வன் என்ற உயர்ந்த பதவியும் பறிக்கப்பட்ட உபபர்ஹணா பூமியில் ஒரு வேலைக்காரியின் மகனாகப் பிறக்க நேரிட்டது. அப்பாது தான் பெருமையாக நினைத்த தனது அழகையெல்லாம் இழந்துவிட்டிருந்தார். 


இவ்விதம் பூமியில் வீழ்ந்த உபபர்ஹணாவிற்கு என்ன நேர்ந்தது? அவர் மீண்டும் அவருடைய உயர்ந்த லோகத்திர்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றாரா? தொடர்ந்து படியுங்கள் . . .



                                                       🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


நம்முடைய நடத்தை பற்றிய ஒரு பாடம்


நம்மிடமுள்ள பணிவு மற்றும் மரியாதையுடன் கூடிய நடத்தையானது உயர்நத ஆத்மாக்களை கவர்வது மட்டுமில்லாமல் அவர்களது ஆசியையும் பெற்றுத் தரும். ஒருவரது நடத்தையானது பொதுவாக  அவர் மற்றவர்களிடம் அணுகும் முறையைப் பொறுத்தது. எனவே நாம் நல்ல மனிதர்களது சகவாசத்தில் இருந்து கொண்டு நல்ல ஒழுக்கத்தையும், நல்ல அணுகுமுறையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.








து?

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...