Skip to main content

கோபியர்களின் கார்த்தியாயினி விரதம்

    


துர்கா தேவி, ஜட மூலகங்களாலான ஜடவுலகத்தினை மேற்பார்வையிடும் தேவதையாவாள். தேவர்கள், பௌதிகச் செயல்களின் துறைகளை நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ள வெவ்வேறு நிர்வாகிகளே ஆவர், அவர்களும் அந்த ஜட சக்தியின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளனர். ஆனால், கிருஷ்ணருடைய அந்தரங்க சக்திகள் இந்த பெளதிகப் படைப்புடன் தொடர்புகொள்வதில்லை. ஆன்மீக உலகமும் எல்லா ஆன்மீகச் செயல்களும் அந்தரங்கமான ஆன்மீக சக்தியின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளன. அந்தச் செயல்கள் யோகமாயை எனப்படும் ஆன்மீக சக்தியால் நிறைவேற்றப்படுகின்றன. யோகமாயை என்பது பரம புருஷ பகவானின் ஆன்மீக அல்லது அந்தரங்க சக்தியாகும். ஆன்மீக உலகத்திற்கு ஏற்றம் பெற்று பகவானின் தொண்டில் ஈடுபட விரும்புபவர்கள் யோகமாயையின் கட்டுப்பாட்டின் கீழ் ஆன்மீகப் பக்குவத்தினை அடைகின்றனர். பௌதிகத்தில் உயர்வு பெற விருப்பம் கொண்டவர்கள் புலனுகர்ச்சியை அதிகரிப்பதற்கான சமயச் சடங்குகளிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஈடுபடுகின்றனர். அவர்கள் இறுதியில் பகவானின் அருவ தோற்றத்தினுள் ஐக்கியமாக முயல்கின்றனர். அத்தகு மக்கள் பொதுவாக அருவவாதிகளாக மாறுகின்றனர். அவர்கள் சிவபெருமான் அல்லது துர்கையை வழிபடுவதில் ஆர்வம் கொண்டுள்ளனர், ஆனால் அதற்கான விளைவு நூறு சதவிகிதம் பெளதிகமானதாகவே இருக்கும்.


கோபியர்களின் உதாரணத்தைப் பின்பற்றி, பக்தர்கள் சில நேரங்களில் கார்த்தியாயினி  தேவியினை வழிபடுகின்றனர், ஆனால் காத்யாயினி தேவி யோகமாயையின் அவதாரம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். கோபியர்கள் கிருஷ்ணரைத் தங்களது கணவனாக அடையும் பொருட்டு யோகமாயையினை (கார்த்தியாயினி தேவி ) வழிபட்டனர். மற்றொருபுறம், ஸப்த -ஷதீ என்னும் சாஸ்திரத்தில் ஸுரதன் என்ற சத்திரிய மன்னனும் ஸமாதி என்ற வைசிய செல்வந்தனும் பௌதிகப் பக்குவத்தினை அடைவதற்காக துர்கா தேவியின் வடிவில் ஜட இயற்கையை வழிபட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யோகமாயையின் வழிபாட்டினையும் மஹாமாயையின் வழிபாட்டினையும் சமமானதாகக் கருதி அவற்றினை இணைப்பதற்கு முயன்றால், அச்செயல் புத்திசாலித்தனம் ஆகாது. அனைவரும் ஒருவரே என்னும் கருத்தானது மூளையில் குறைவான சரக்கு உள்ளவர்களால் பிரயோகிக்கப்படும் ஒரு வகையான முட்டாள்தனமாகும். யோகமாயையை வழிபடுவதும் மஹாமாயையை வழிபடுவதும் சமம் என்று முட்டாள்களும் அயோக்கியர்களும் கூறுகின்றனர். அதுபோன்ற எண்ணங்கள் மன அனுமானத்தின் விளைவாகத் தோன்றுகின்றன. அதனால் நடைமுறையில் எந்த நன்மையும் இல்லை .


(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / மத்திய லீலை 8.90  பொருளுரை)



இதற்கு உதாரணம் அமைப்பதற்காக, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தாமே தனிப்பட்ட முறையில் பல்வேறு புனித ஸ்தலங்களுக்குப் பயணம் செய்தார். எங்கெல்லாம் சென்றாரோ, அங்கே அவர் உடனடியாக பரம் புருஷ பகவானின் மீதான பரவச அன்பினை வெளிப்படுத்தினார். ஒரு வைஷ்ணவன் தேவர்களுடைய கோயிலுக்குச் செல்லும்போது, அந்த தேவரின் மீதான அவனது பார்வையானது அருவவாதிகள் அல்லது மாயாவாதிகளின் பார்வையிலிருந்து வேறுபட்டதாகும். பிரம்ம சம்ஹிதை இதனை ஆதரிக்கின்றது. உதாரணமாக, ஒரு வைஷ்ணவன் சிவபெருமானின் ஆலயத்திற்குச் செல்லுதல் என்பது அபக்தர்கள் அங்கே செல்வதிலிருந்து வேறுபட்டதாகும். அபக்தன் சிவலிங்கத்தினை கற்பனையானதென்று கருதுகிறான்; ஏனெனில், பரம்பொருள் இறுதியில் சூன்யமானது என்பதே அவனது அபிப்பிராயம். ஆயினும், ஒரு வைஷ்ணவன் சிவபெருமானை ஒரே நேரத்தில் முழுமுதற் கடவுளுடன் ஒன்றுபட்டவராகவும் வேறுபட்டவராகவும் காண்கிறான். இது தொடர்பாக, பால் மற்றும் தயிரின் உதாரணம் வழங்கப்படுகிறது. தயிரானது உண்மையில் பாலைத் தவிர வேறல்ல. ஆனால் அதே சமயத்தில் அது பால் அன்று. அஃது ஒரே சமயத்தில் பாலுடன் ஒன்றுபட்டும் அதிலிருந்து வேறுபட்டும் உள்ளது. இதுவே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தத்துவமாகும். இது பகவான் கிருஷ்ணரால் பகவத் கீதையில் (9.4) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது:


மயா ததம் இதம் ஸர்வம் ஜகத், அவ்யக்த-மூர்தினா 

மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி ந சாஹம் தேஷ்வவஸ்தித:


"நான் எனது தோன்றாத உருவின் மூலம் அகிலம் முழுவதும் பரவியுள்ளேன். எல்லா ஜீவன்களும் என்னில் இருக்கின்றனர்; ஆனால் அவர்களில் நான் இல்லை."


பரம உண்மையான கடவுள் எல்லாமாக உள்ளார், ஆனால் அதே சமயத்தில் எல்லாம் கடவுள் என்பது பொருளல்ல. இந்த காரணத்திற்காகவே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் அவரைப் பின்பற்றுபவர்களும் தேவர்களின் கோயில்களுக்குக்கூட செல்கின்றனர், ஆனால் அவர்கள் அந்த தேவர்களை ஓர் அருவவாதி அவர்களைப் பார்ப்பதைப் போன்று பார்ப்பதில்லை. ஒவ்வொருவரும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி எல்லாக் கோயில்களுக்கும் செல்ல வேண்டும். சில நேரங்களில், கோபியர்கள் காத்யாயனி கோயிலுக்குச் சென்றதை சாதாரண மக்கள் தேவியின் கோயிலுக்குச் செல்வதைப் போன்றதே என்று பௌதிக ஸஹஜியாக்கள் நினைக்கின்றனர். ஆனால், கோபியர்கள் காத்யாயனியிடம் கிருஷ்ணரைத் தங்களது கணவனாக வழங்கும்படி பிரார்த்தித்தனர். பெளதிகவாதிகளோ சில பெளதிக நன்மைகளைப் பெறுவதற்காக காத்யாயனி கோயிலுக்குச் செல்கின்றனர். இதுவே வைஷ்ணவன் செல்வதற்கும் அபக்தன் செல்வதற்கும் இடையிலான வேறுபாடாகும்


(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / மத்திய லீலை 9.360 / பொருளுரை)


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...