Skip to main content

கிருஷ்ணருக்கு இடையறாது சேவை செய்யும் மனப்பான்மை


க்ரிஷ்ண நாம-மஹா-மந்த்ரேர ஏஇ த' ஸ்வபாவ 

ஜேஇ ஜபே, தார க்ரிஷ்ணே உபஜயே பாவ


மொழிபெயர்ப்பு


"'ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபிப்பவர் உடனடியாக கிருஷ்ணருக்கான அன்புப் பரவசத்தினை வளர்த்துக்கொள்கிறார். இதுவே அந்த மஹா மந்திரத்தின் சுபாவமாகும்.


பொருளுரை: ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பவன் பாவ அல்லது பரவசம் எனப்படும் நிலையை வளர்த்துக்கொள்வதாக இந்த ஸ்லோகத்தில் விளக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில்தான் கிருஷ்ணர் தம்மை வெளிப்படுத்தத் தொடங்குகிறார். இஃது ஒருவனது உண்மையான கிருஷ்ண பிரேமையை வளர்ப்பதன் ஆரம்பநிலையாகும். பகவான் கிருஷ்ணர் இந்த பாவ நிலையினை பகவத் கீதையில் (10.8) குறிப்பிடுகிறார்: 


அஹம் ஸர்வஸ்ய ப்ரப வோ மத்த: ஸர்வம்' ப்ரவர்ததே 

இதி மத்வா பஜந்தே மாம்' புதா பாவ-ஸமன்விதா:


"ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு இதயபூர்வமாக என்னை வழிபடுகின்றனர்." ஓர் ஆரம்பநிலை சீடன், ஸ்ரவணம், கீர்த்தனம், பக்தர்களின் சங்கம், விதிமுறைகளைப் பயிற்சி செய்தல் என பக்தித் தொண்டினைத் தொடங்குகிறான்; இவ்வாறாக, அவன் தன்னுடைய தேவையற்ற தீய பழக்கங்கள் எல்லாவற்றையும் அழித்து, அதன் பின்னர், கிருஷ்ணருக்கான பற்றுதலை வளர்த்துக்கொள்கிறான், அவனால் கிருஷ்ணரை ஒருகணம் கூட மறக்க இயலாது. பாவ என்பது ஏறக்குறைய ஆன்மீக வாழ்வின் பக்குவநிலையாகும்.


ஓர் உண்மையான சீடர் ஆன்மீக குருவிடமிருந்து திருநாமத்தைச் செவிவழியாகப் பெறுகிறார், தீக்ஷை பெற்ற பின்னர் ஆன்மீக குருவினால் கொடுக்கப்பட்ட ஒழுக்கநெறிகளைப் பின்பற்றுகிறார். திருநாமம் இவ்வாறு முறையாக சேவை செய்யப்படும்போது, அதன் ஆன்மீகத் தன்மை தானாகப் பரவுகின்றது; வேறுவிதமாகக் கூறினால், பக்தரொருவர் திருநாமத்தினை அபராதமின்றி உச்சரிப்பதற்குத் தகுதி பெறுகிறார். திருநாமத்தை இவ்வாறு உச்சரிப்பதற்கு முழு தகுதியைப் பெறும்போது, அவர் உலகம் முழுவதும் சீடர்களை ஏற்பதற்கான தகுதியைப் பெறுகிறார், உண்மையில் அவர் ஜகத்குருவாக ஆகிறார். அதன் பின்னர், அவருடைய பிரபாவத்தினால் முழு உலகமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திர வடிவில் திருநாமத்தை ஜபிக்கத் தொடங்குகிறது. இவ்வாறாக, அத்தகு ஆன்மீக குருவின் எல்லா சீடர்களும் கிருஷ்ணருக்கான பற்றுதலை வளர்க்கின்றனர். இவற்றால், அவர் சில நேரங்களில் அழுகிறார், சில நேரங்களில் சிரிக்கிறார், சில நேரங்களில் ஆடுகிறார், சில நேரங்களில் பாடுகிறார். இந்த அறிகுறிகள் ஒரு தூய பக்தரின் திருமேனியில் தெள்ளத்தெளிவாக வெளிப்படுகின்றன. சில நேரங்களில் எங்களுடைய கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சீடர்கள் பாடி ஆடும்போது, இந்த வெளிநாட்டினர் இத்தகைய பரவசத்துடன் பாடி ஆடுவதற்கு எவ்வாறு கற்றுக் கொண்டனர் என்று இந்திய மக்கள்கூட ஆச்சரியப்படுகின்றனர். இருப்பினும், உண்மையில் இது பயிற்சியினால் எழக்கூடிய பரவசமல்ல, யாரொருவன் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உண்மையாக உச்சரிக்கின்றானோ அவனில் இத்தகைய அறிகுறிகள் எந்தவொரு தனிப்பட்ட முயற்சியுமின்றி தோன்றுகின்றன என்று சைதன்ய மஹாபிரபு விளக்கியுள்ளார்.


ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் தெய்வீக இயற்கையை அறியாத பல்வேறு முட்டாள்கள், சில நேரங்களில் இந்த மந்திரத்தினை நாங்கள் பலமாக கீர்த்தனம் செய்வதைத் தடுக்கின்றனர். இருந்தும், ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பதன் பக்குவநிலைக்கு உண்மையிலேயே முன்னேறியவர் மற்றவர்களையும் உச்சரிக்கும்படி தூண்டுகிறார். கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி விளக்குகிறார், க்ரி'ஷ்ண-ஷக்தி வினா நஹே தார ப்ரவர்தன,ஒருவர் பரம புருஷ பகவானிடமிருந்து விசேஷ அங்கீகாரத்தைப் பெறாவிடில், அவரால் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் புகழை பிரச்சாரம் செய்ய முடியாது. பக்தர்கள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தைப் பரப்புகையில், உலகம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள் திருநாமத்தின் மகிமையினைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பினைப் பெறுகின்றனர். பாடி ஆடும்போது அல்லது பகவானின் திருநாமத்தைக் கேட்கும்போது, ஒருவர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளை இயல்பாக நினைவுகொள்கிறார், திருநாமத்திற்கும் கிருஷ்ணருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதால், ஜபிப்பவர் உடனடியாக கிருஷ்ணருடன் தொடர்புகொள்கிறார். அந்தத் தொடர்பினால், ஒரு பக்தர் பகவானின் தொண்டிற்கான தமது மூல சுபாவத்தினை வளர்த்துக்கொள்கிறார். கிருஷ்ணருக்கு இடையறாது சேவை செய்யும் இந்த மனப்பான்மை பாவ என்று அறியப்படுகிறது, இந்நிலையில் அவர் பலதரப்பட்ட வழிகளில் எப்போதும் கிருஷ்ணரை நினைக்கின்றார். இந்த பாவ நிலையை அடைந்தவர் இதன் பின்னர் மாயா சக்தியின் பிடியின் கீழ் இருப்பதில்லை. இந்த பா,வ நிலையுடன், உடல்நடுக்கம், வியர்வை, கண்ணீர் முதலிய ஆன்மீக உபகரணங்கள் இணையும்போது, பக்தர் படிப்படியாக கிருஷ்ண பிரேமையை அடைகிறார்.


கிருஷ்ணருடைய திருநாமம் மஹா மந்திரம் என்று அறியப்படுகிறது. நாரத, பஞ்சராத்ரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இதர மந்திரங்கள் வெறுமனே மந்திரங்கள் என்று அறியப்படுகின்றன, ஆனால் பகவானுடைய திருநாம உச்சாடனம் மஹா மந்திரம் என்று அறியப்படுகிறது.


(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / ஆதி லீலை 7.83 / பொருளுரை)


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...