Skip to main content

பகவான் அனைவருடைய இதயத்திலும் சாட்சியாக அமர்ந்திருக்கிறார்

 


பகவான் அனைவருடைய இதயத்திலும் சாட்சியாக அமர்ந்திருக்கிறார் என்பதை பகவத்கீதை உறுதி செய்கிறது. இதனால் அவரே உத்தரவிடும் பரம வழிகாட்டியாவார். செயலின் பலன்களை அனுபவிப்பவர் வழிகாட்டியல்ல. ஏனெனில் பகவானின் உத்தரவு இல்லாமல் ஒருவரும் அனுபவிக்க முடியாது. உதாரணமாக, குடிப் பழக்கத்திற்கு அடிமையானவன், தடை விதிக்கப்பட்ட ஒரிடத்தில் குடிப்பதற்கு. நிர்வாகியிடம் மனு செய்கிறான், நிர்வாகியும் அவனுடைய நிலையை கருத்திற்கொண்டு, ஒரு குறிப்பிட்ட அளவு மதுவை மட்டுமே அருந்த வேண்டும் என்ற விதியுடன் அவனை அனுமதிக்கிறார். அதைப் போலவே, ஜட உலகம் முழுவதும் குடிப்பழக்கமுள்ளவர்களால் நிரப்ப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு ஜீவராசிக்கும் அவனுடைய மனதில் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. தங்களுடைய ஆசைகள் நிறைவேற வேண்டுமென்று ஒவ்வொருவரும் தீவிர விருப்பம் கொண்டுள்ளனர். தந்தை மகனிடம் அன்பு கொண்டிருப்பதைப் போல், சர்வல்லமை பொருந்திய பகவான், ஜீவராசிகளிடம் உள்ள அன்பினால் அவர்களின் குழந்தைத்தனமான திருப்திக்காக அவர்களுடைய ஆசைகளை கொண்டுள்ள ஜீவராசி உண்மையில் அனுபவிப்பவனல்ல. உடலின் சலன சித்தத்திற்கு அவன் தேவையில்லாம்ல் சேவையாற்றுகிறான். குடிகாரன் குடிப்பதால் எந்த நன்மையையும் அடைவதில்லை. ஆனால் குடிப்பழக்கத்திற்கு அவன் அடிமையாகி விட்டதுடன், அதிலிருந்து விடுபட அவன் விரும்பாததால், கருணா மூர்த்தியான பகவான் அத்தகைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வசதிகளை அவனுக்கு அளிக்கிறார்.

ஒருவன் ஆசயைற்றவனாக ஆகவேண்டும் என்று அருவவாதிகள் சிபார்சு செய்கின்றனர். மற்றும் சிலர் ஆசைகளை முற்றிலும் ஒழித்து விட சிபார்சு செய்கின்றனர். அது சாத்தியமல்ல; ஆசைப்படுவதே உயரின் அடையாளமாகையால், ஆசைகளை முற்றிலும் ஒழித்து விட ஒருவராலும் முடியாது. ஆசைகள் இல்லையெனில் ஜீவராசியொருவன் இறந்து விட்டவனாவான். ஆனால் அவன் இறந்து விடவில்லை. எனவே, உயிர்வாழ்ச் சூழ்நிலைகளும், ஆசைகள் இணைந்தே செயற்படுகின்றன. ஜீவராசிகள் பௌதிக ஆசைகளைத் துறந்து, பகவானின் ஆசைகளை நிறைவேற்றுவதில் ஒத்துழைக்க வேண்டும். அதுவே பகவத் கீதையின் முடிவான உபதேசமாகும். இக்கருத்துக்கு பிரம்ம தேவர் உடன்பட்டார். இதனால் காலியாக உள்ள பிரபஞ்சத்தில் சந்ததிகளைப் படைக்கும் பொறுப்புள்ள பதவி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே பகவானுடைனான ஒற்றுமை என்பது, தனது ஆசைகளை பரமபுருஷரின் ஆசைகளோடு பொருந்துமாறு இணைப்பதாகும். இது ஆசைகளின் பூரணத்துவத்திற்கும் வழியமைக்கிறது.அனைத்து ஜீவராசிகளின் இதயத்திலும் பரமாத்மாவாக உள்ள பகவான், ஒவ்வொரு ஜீவராசியின் மனதிலும் உள்ள எண்ணங்களை அறிவார். அவருக்குத் தெரியாமல் யாராலும் எதையுமே செய்ய முடியாது. பகவான் தமது பரமான மதிநுட்பத்தினால், ஒவ்வொருவரும் தங்களுடைய ஆசைகளை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் அவற்றிற்குரிய பலன்களையும் அளிக்கிறார்.


ஶ்ரீமத் பாகவதம் 2.9.25 / பொருளுரை


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Post a Comment

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...