Skip to main content

துவித மனிதக் குரங்கின் முக்தி

 


பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கொன்ற நரகாசுரன் என்ற அசுரனுக்கு துவிதன் என்றொரு வானர நண்பன் இருந்தான். தன் நண்பனின் மரணத்துக்குப் பழிவாங்க விரும்பிய துவிதன், இடையர்களின் வீடுகளுக்குத் தீ மூட்டினான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆனர்த்த தேசத்தை நாசப்படுத்தினான். மேலும் தன் வலிமைமிக்க கரங்களால் சமுத்திர நீரைக் கடைந்து கொந்தளிக்கச் செய்து கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தினான். அந்த அயோக்கியன் பிறகு மாமுனிவர்களின் ஆசிரமங்களிலுள்ள மரங்களை நாசப்படுத்தியதுடன், அவர்களுடைய வேள்வித் தீயில் மலஜலமும் கழித்தான். அவன் ஆண் பெண்களை கடத்திச் சென்று மலைக் குகைகளில் அடைத்து வைத்தான். முழு நிலப்பரப்பையும் இவ்வாறு நாசமாக்கி, கௌரவமான குடும்பங்களைச் சேர்ந்த பல இள மங்கைகளைக் கற்பழித்தபின், துவிதன் ரைவதக மலைப்பக்கம் வந்தான். அங்கு பகவான் பலராமர் அழகு மங்கையிரின் கூட்டத்திற்கு கிடையயில் களிப்புற்றிருப்பதைக் கண்டான். வாருணி மது வருத்தி போதையேறிவர் போல் காணப்பட்ட பகவான் பலதேவரை அலட்சியப்படுத்தி, அவர் முன்னிலையிலேயே அப்பெண்களிடம் தன் குதத்தைக் காட்டினான். மேலும் அவன் தன் புருவங்களால் அனாகரிகமான சைகைகளைச் செய்தும், மலஜலம் கழித்தும் அவர்களை அவமானப்படுத்தினான்.

தூவிதனின் அக்கிரமமான நடத்தை பகவான் பலதேவரின் கோபத்தைத் தூண்டியதால் அவர் ஒரு கல்லை எடுத்து அந்த வானரத்தின் மேல் வீசினார். ஆனால் துவிதன் அது தன்மேல் விழாத படி விலகிக் கொண்டான். பிறகு அவன் பலராமரை ஏளனம் செய்து, பெண்களின் ஆடைகளைப் பற்றியிழுத்தான். இந்த துடுக்குத்தனத்தைக் கண்ட பகவான் பலதேவர் அவனைக் கொன்றுவிட முடிவு மிச்து, தமது கதை மற்றும் கலப்பை ஆயுதங்களை எடுத்தார். சக்திவாய்ந்த துவிதன் பிறகு ஒரு சால மரத்தை வேருடன் பிடுங்கி பகவானின் தலையில் அடித்தான். ஆனால் பலராமர் அசையாமல் அங்கேயே நின்றபடி அந்த மரத்தை துண்டுதுண்டாக நொறுக்கித் தள்ளினார். துவிதன் மற்றொரு மரத்தைப் பிடுங்கினான். இப்டியே அந்த வனம் வெட்ட வெளியாகும் வரை ஒவ்வொரு மரமாக அன் பிடுங்கியெடுத்து பகவானைத் தாக்கினான். ஆனால் பகவான் எல்லா மரங்களையும் சுலபமாக உடைத்தெறிந்தார். பிறகு அந்த முட்டாள் வானரன் கல் மழை பொழியத் துவங்கினான். பகவான் பலதேவரும் அவற்றையெல்லாம் நொறுக்கிப் பொடியாக்கினார். அதன்பிறகு துவிதன் பகவானை நெருங்கி, தன் முஷ்டியால் பகவானின் மார்பைத் தாக்கி, அவரது கோபத்தைத் தூண்டினான். பகவான் தமது கலப்பை மற்றும் கதாயுதங்களை வைத்துவிட்டு, தூவிதனின் தொண்டையையும், தோள்பட்டையையும் தமது முஷ்டியால் குத்தினார். இதனால் அந்த வானரன் இரத்த வாந்தியெடுத்து, தரையில் விழுந்து மாண்டான்.

துவிதனைக் கொன்ற பிறகு, பகவான் பலதேவர் துவாரகைக்குப் புறப்பட்டார். அப்பொழுது தேவர்களும், முனிவர்களும் ஆகாயத்திலிருந்து பகவான் மேல் மலர்மாரி பொழிந்தும், அவர் துதிபாடியும், அவரிடம் பிரார்த்தனைகள் செய்தும் அவரை வணங்கினர்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...