Skip to main content

கோபியர்களின் பிரார்த்தனை

 


ஸ்ரீமத்-பாகவதம்

காண்டம் 10 / அத்தியாயம் 31 / பதம் 1-19

*************************************************************************

பதம் 1

கோப்ய ஊசு:

ஜயதி தே ()திகம் ஜன்மா வ்ரஜ
ஸ்ரயத இந்திரா ஸஸ்வத் அத்ர ஹி
கயித் த்ருஸ்யதாம் திக்ஷு தவாகாஸ்
த்வயி த்ருதாஸவஸ் த்வாம் விசின்வதே

மொழிபெயர்ப்பு


கோபியர்கள் கூறினர்: , அன்பிற்குரியவரே, விரஜத்தில் பிறந்ததினால், உமது பிறப்பு அதன் புகழை அதிகரித்திருக்கின்றது. அதனால் அதிர்ஷ்ட தேவதையான இந்திரா எப்போதும் இங்கே வசிக்கின்றாள். உமக்காகவே உமது பக்தியுள்ள பணிப்பெண்களாகிய நாங்கள் எங்கள் எல்லாவிடங்களிலும் தேடிக் கொண்டிருக்கின்றோம், அருள் கூர்ந்து உம்மைக் காணும் மகிழ்வை எங்களுக்குத் தந்தருள்வீராக.

 

பதம் 2

ஸரத் - உதாஸயே ஸாது-ஜாத-ஸத்-
ஸரஸிஜோதர-ஸ்ரீ-முஷா த்ருஸா
ஸுரத-நாத தே () ஸுல்க-தாஸிகா
வர- நிக்னதோ நேஹ வத:

மொழிபெயர்ப்பு


, காதல் தேவனே, அழகில், உமது பார்வை சரத் காலத் தாமரைத் தடாகங்களில் மலர்ந்திருக்கும் எழில் மிகு தாமரை மலர்களின் சீரிய இதழ்களையும் விஞ்சுகின்றது. , நல்வரம் அருள்பவரே, எந்தவிதக் கூலியும் பெறாது தம்மையே உம்மிடம் அர்ப்பணித்திருக்கும் உமது பணிப்பெண்களை நீர் கொல்கின்றீர். இது கொலை இல்லையா?

 

பதம் 3

விஷ-ஜலாப்பயாத் வ்யால-ராக்ஷஸாத்
வர்ஷ-மாருதாத் வைத்யு தான லாத்
வ்ருஷ-மயாத்மஜாத் விஸ்வதோ பயாத்
ருஷப தே வயம் ரக்ஷிதா முஹு:

மொழிபெயர்ப்பு


, அனைவரினும் சிறந்தவரே, நீர் எங்களைத் தொடந்து-விஷம் நிறைந்த நீரிலிருந்தும், நரமாமிசம் தின்னும் அகாசுரனிடமிருந்தும், நாசகார மழையிலிருந்தும், சூறைக்காற்று அசுரனிடமிருந்தும், இந்திரனின் அனல்காக்கும் வஜ்ராயுதத்திடமிருந்தும், காளை அசுரனிடமிருந்தும், மயனின் மைந்தனிடமிருந்தும் வந்த எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்தும் காத்தருளியிருக்கின்றீர்.

 

பதம் 4

காது கோபிகா-நந்தனோ பவான்
அகில-தேஹினாம் அந்தராத்ம-த்ருக்
விகனஸார்திதோ விஸ்வ-குப்தயே
ஸக உதேயிவான் ஸாத்வதாம் குலே

மொழிபெயர்ப்பு


, நண்பரே, உண்மையில் நீர் கோபி யசோதையின் மைந்தன் இல்லை, மாறாக நீர் உடல் பெற்ற ஆத்மாக்களின் இதயங்களினுள்ளே சாட்சியாக வீற்றிருப்பவர் ஆவீர். பிரம்மதேவர், இப்பிரபஞ்சத்தினைக் காப்பதற்காக நீர் எழுந்தருள வேண்டுமென்று உம்மிடம் வேண்டினார், அதனால் இப்போது நீர் சாத்வத குலத்தில் தோன்றியிருக்கின்றீர்.

 

பதம் 5

விரசிதாபயம் வ்ருஷ்ணி-தூர்யதே
சரணம் ஈயுஷாம் ஸம்ஸ்ருதேர் பயாத்
கர-ஸரோருஹம் காந்த காம-தம்
ஸிரஸி தேஹி : ஸ்ரீ-கர-க்ரஹம்

 

மொழிபெயர்ப்பு


, விருஷ்ணிகளிற் சிறந்தவரே, அதிர்ஷ்ட தேவதையின் கரத்தினைப் பற்றிக் கொண்டிருக்கும் தாமரை மலர்போன்ற உமது கரம், பௌதீக வாழ்வின் அச்சத்தின் காரணமாக உமது திருவடிகளை அணுகுபவர்களுக்கு அச்சமின்மையினை அருள்கின்றது. , அன்பரே, விருப்பத்தினை நிறைவேற்றும் உமது தாமரை மலர்க் கரத்தினை எங்கள் தலைகளின் மீது வைத்தருளவேண்டும்.

 

பதம் 6

வ்ரஜ-ஜனார்தி-ஹன் வீர யோஷிதாம்
நிஜ-ஜன-ஸ்மய-த்வம்ஸன-ஸ்மித
பஜ ஸகே பவத்-கிங்கரீ: ஸம நோ
ஜலருஹானைம் சாரு தர்ஸய

மொழிபெயர்ப்பு


, விரஜ மக்களின் துன்பத்தை நீக்குபவரே, , பெண்கள் அனைவரின் நாயகரே, உமது புன்னகை உமது பக்தர்களின் வீண் கர்வத்தினை அழிக்கின்றது. அன்பு நண்பரே, அருள்கூர்ந்து எம்மை உமது பணிப் பெண்களாக ஏற்றுக் கொண்டு, உமது எழில் மிகு செந்தாமரை மலர் முகத்தினை எமக்குக் காட்டுவீராக

 

பதம் 7

ப்ரணத-தேஹினாம் பாப-கர்ஷணம்
த்ருண-சரானுகம் ஸ்ரீ-நிகேதனம்
பணி-பணார்பிதம் தே பதாம்புஜம்
க்ருணு குசேஷு : க்ருந்தி ஹ்ருச்-சயம்

மொழிபெயர்ப்பு


உம்மைச் சரணடைகின்ற உடல்பெற்ற ஆத்மாக்களின் முன்னைய பாவங்களை உமது தாமரைத் திருவடிகள் அழிக்கின்றன. அத்திருவடிகள் மேய்ச்சல் நிலங்களில் பசுக்களைக் பின் தொடர்ந்து செல்கின்றன. மேலும் அதிர்ஷ்ட தேவதையின் நித்திய உறைவிடமாகவும் அவை இருக்கின்றன. அஞ்சவரும் காளிங்க நாகத்தின் தலைகளின் மீது ஒரு முறை நீர் அத்திருவடிகளை வைத்திருக்கின்றீர். ஆதலினால் அவற்றை எமது மார்பகங்களின் மீது அருள்கூர்ந்து வைத்து எமது மனத்திலுள்ள காமத்தினை வெட்டி எறிவீராக.

 

பதம் 8

மதுரயா கிரா வல்கு-வாக்யயா
புத-மனோஜ்ஞயா புஷ்கரேக்ஷண
விதி-கரீர் இமா வீர முஹ்யதீர்
அதர-ஸீதுநாப்யா யயஸ்வ :

மொழிபெயர்ப்பு


, செந்தாமரை மலர் போன்ற விழியுடையவரே, புத்திமான்களின் மனதினை ஈர்க்கும் உமது இனிய குரல் ஒலியும் கவர்ச்சி மிகு வார்த்தைகளும் எம்மை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. எங்கள் அன்பிற்குரிய வீரரே, உமது அதரங்களில் உள்ள அமிர்தத்தினால் உமது பணிப் பெண்களுக்கு அருள்கூர்ந்து புத்துயிர் அளிப்பீராக.

 

பதம் 9

தவ காதம்ருதம் தப்த-ஜீவனம்
கவிபிர் ஈடிதம் கல்மஷாபஹம்
ஸ்ரவண-மங்களம் ஸ்ரீமத் ஆததம்
புவி க்ருணந்தி யே பூரி-தா ஜனா:

மொழிபெயர்ப்பு


உமது வார்த்தைகளின் அமிர்தமும், உமது செயல்களின் சரிதமும் இப்பௌதீக உலகில் துன்புறுவோர்க்கு ஜீவனும் ஆன்மாவும் ஆகும். கற்றறிந்த முனிவர்களால் பரப்பப்படும் இச்சரிதங்கள், ஒருவனது பாவங்களின் பலன்களை நீக்குவதோடு, அவற்றைக் கேட்பவர்களுக்கு, சர்வ மங்களங்களும் அளிக்கின்றன. இச்சரிதங்கள் உலகமெங்கணும் பரப்பப்படுகின்றன. அவை ஆன்மீக சக்தியுடையவையாக இருக்கின்றன. முழுமுதற்கடவுளின் மேதகு தகவல்களைப் பரப்புகின்றவர்கள், ஞான தான வள்ளல்களாவர்.

 

பதம் 10

 

ப்ரஹஸிதம் ப்ரிய-ப்ரேம-வீக்ஷணம்
விஹரணம் தே த்யான-மங்களம்
வஹஸி ஸம்விதோ யா ஹ்ருதி ஸ்ப்ருஸ:
குஹசு நோ மன: க்ஷோபயந்தி ஹி

மொழிபெயர்ப்பு


உமது புன்னகை, இனிமையான காதல் மிகுபார்வைகள், உம்முடன் நாங்கள் அனுபவித்து மகிழ்ந்த நெருக்கமான லீலைகள் மற்றும் இரகசியப் பேச்சுகள் இவையனைத்தும் தியானிப்பதற்கு மங்கள முடையன என்பதோடு, அவை எமது உள்ளங்களையும் தொடுகின்றன. ஆனாலும் , ஏமாற்றுக் காரரே அவை எங்கள் மனங்களைப் பெரிதும் கிளர்ச்சியுறச் செய்கின்றன.

பதம் 11

சலஸி யத் வ்ரஜாச் சாரயன் பஸூன்
நளின-ஸுந்தரம் நாத தே பதம்
ஸில-த்ருணாங்குரை: ஸீததீதி :
கலிலதாம் மன: காந்த கச்சதி

மொழிபெயர்ப்பு


அன்பிற்குரிய நாதரே, அன்புக் காதலரே, பசுக்களை மேய்ப்தற்காக நீர் விரஜத்தைவிட்டுச் செல்லும் பொழுது, தாமரை மலரினும் எழில் மிகு உமது பாதங்களில் தானியக்கதிர்களின் கூர்முனைகளும், முரட்டுப் புற்களும், செடிகளும் குத்துமே என்று நினைத்து எங்கள் மனங்கள் துன்புறுகின்றன.

 

பதம் 12

தின-பரிக்ஷயே நீல-குந்தலைர்
வனருஹானைம் பிப்ரத் ஆவ்ருதம்
கன-ரஜஸ்வம் தர்ஸயன் முஹுர்
மனஸி : ஸ்மரம் வீர யச்சஸி

மொழிபெயர்ப்பு


பகற்பொழுதின் முடிவில் நீர் அடிக்கடி, கருநீல மயிர்க் குழல்களால் மூடப்பட்டு அடர்த்தியாகத் தூசு படிந்திருக்கும் உமது தாமரைக் திருமுகத்தினை எமக்குக் காட்டுகின்றீர். இவ்வாறு , வீரரே, நீர் எங்கள் மனங்களில் காம இச்சையினை எழுப்புகின்றீர்.

 

பதம் 13

ப்ரணத-காம-தம் கத்மஜார்சிதம்
தரணி-மண்டனம் த்யேயம் ஆபதி
சரண-பங்கஜம் ஸந்தனம் சதே
ரமண : ஸ்தனேஷ்வ அர்பயாதி-ஹன்

மொழிபெயர்ப்பு


பிரம்மதேவரால் வழிபடப்படும் உமது தாமரைத் திருவடிகள், அவற்றை அடிபணிந்து வணங்குவோர் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுகின்றன. அவை பூமியின் அணிகலன்களாகும். அவை உயர் திருப்தியை அளிக்கின்றன. ஆபத்துக் காலங்களில் அவையே தியானத்திற்கு உரிய பொருளாகவும் இருக்கின்றன. , அன்பரே, , கவலைகளை அழிப்பவரே, அருள் கூர்ந்து அத்தாமரைத் திருவடிகளை எமது மார்பகங்களின் மீது வைப்பீராக.

 

பதம் 14

ஷுரத-வர்தனம் ஸக-நாஸனம்
ஸ்வரித-வேணுனா ஸுஷ்டு சும்பிதம்
இதர-ராக-விஸ்வமாரணம் ந்ருணாம்
விதர வீர நஸ் தே ()தராம்ருதம்

மொழிபெயர்ப்பு


, வீரரே துன்பத்தினை நீக்கிக் காதல் இன்பத்தினை அதிகரிக்கச் செய்யும் உமது அதரங்களிலுள்ள அமிர்தத்தினை அன்புடன் எங்களுக்கு வழங்குவீராக. அந்த அமிர்தமானது இனிமையாக ஒலிக்கும் உமது புல்லாங்குழலால் சுவைக்கப்படுவதோடு மக்களின் பிற பற்றுக்கையும் மறக்கச் செய்கின்றது.

 

பதம் 15

அடதி யத் பவான் அஹ்னி கானனம்
த்ருடி யுகாயதே த்வாம் அபஸ்யதாம்
குடில-குந்தளம் ஸ்ரீ-முகம் தே
ஜட உதீக்ஷதாம் பக்ஷ்ம-க்ருத த்ருஸாம்

 

மொழிபெயர்ப்பு


பகற்பொழுதில் நீர் காட்டிற்குச் செல்லும் வேளையில் உம்மைக் காண முடியாத காரணத்தினால் ஒரு நொடியில் ஆயிரத்தில் ஒரு பகுதி நேரம் கூட எங்களுக்கு ஓர் யுகம் போல் தோன்றுகின்றது. சுருண்ட குழல் முடிகள் தொங்கும் உமது எழில் முகத்தை நாங்கள் காதலுடன் நோக்குங்காலை, படைப்பவன் என்னும் மூடனால் வடிவமைக்கப்பட்டிருக்கும் எங்கள் கண் இமைகள் எங்கள் இன்பத்திற்குத் தடையாக இருக்கின்றன.

 

பதம் 16

பதி-ஸுதான்வய-ப்ராத்ரு-பாந்தவான்
அதிவிலங்க்ய தே ()ந்தி அச்யுதாகத:
கதி-விதஸ் தவோத்கீத-மோஹிதா:
கிதவ யோஷித: கஸ் த்யஜேன் நிஸி

மொழிபெயர்ப்பு


அன்பிற்குரிய அச்சுதரே, நாங்கள் ஏன் இங்கே வந்திருக்கின்றோம் என்பதை நீர் நன்கறிவீர். உமது புல்லாங்குழலின் இனிய இசையினால் மோகமுற்று உம்மைக் காண்பதற்காக நடு நிசியில் வந்திருக்கும் இளம் பெண்களை உம்மைப் போன்ற ஏமாற்றுக்காரரைத் தவிர வேறு யார் நிராகரிப்பர்? உம்மைக் காண்பதற்காக நாங்கள் எங்கள் கணவர்களையும் குழந்தைகளையும், பெரியோர்களையும், பிற உறவினர்களையும் முற்றிலும் புறக்கணித்திருக்கின்றோம்.

 

பதம் 17

ரஹஸி ஸம்விதம் ஹ்ருச்-சயோதயம்
ப்ரஹஸிதானனம் ப்ரேம-வீக்ஷணம்
ப்ருஹத்-உர: ஸ்ரியோ வீக்ஷ்ய தாம தே
முஹுர் அதி-ஸ்ப்ருஹா முஹ்யதே மன:

மொழிபெயர்ப்பு


உம்மோடு இரகசியமாக நாங்கள் நடத்திய உரையாடல்களை எண்ணும் பொழுதும், உமது புன்னகை பூத்த முகத்தினையும், காதல் கனியும் பார்வைகளையும், அதிர்ஷ்ட தேவதையின் உறைவிடமான உமது அகன்ற மார்பையும் நினைந்து எங்கள் உள்ளங்களில் காம இச்சை எழும்பொழுதும் எங்கள் மனம் மீண்டும் மீண்டும் மோகத்திற்காளாகிறது. அதனால் உம்மீதான எங்கள் நாட்டம் அதிதீவிரமாவதை நாங்கள் உணர்கின்றோம்.


பதம் 18

வ்ரஜ வனௌகஸாம் வ்யக்திர் அங்க தே
வ்ருஜின-ஹந்த்ரி அலம் விஸ்வ-மங்களம்
த்யஜ மனாக் நஸ் த்வத்-ஸ்ப்ருஹாத்மனாம்
ஸ்வ-ஜன-ஹ்ருத்-ருஜாம் யன் நிஷூதனம்

மொழிபெயர்ப்பு


, அன்பரே, சர்வ மங்களமுடைய உமது தோற்றம் விரஜத்தின் காடுகளில் வசிப்போரின் துன்பங்களை நீக்குகின்றது. உமது உறவினை எண்ணி எங்கள் மனம் ஏங்குகின்றது. உங்கள் பக்தர்களின் உள்ளங்களிலுள்ள நோயினை நீக்கும் அந்த மருந்தில் துளியளவாவது அருள் கூர்ந்து எனக்கு அளிப்பீராக.

 

பதம் 19

யத்தே ஸுஜாத-சரணாம்புருஹம் ஸ்தனேஷு
பீதா: ஸனை: ப்ரிய ததீமஹி ர்கஸேஷு
தேனாடவீம் அடஸி தத் வயததே கிம் ஸ்வித்
கூர்பாதிபிர் ப்ரமதி தீர் பவத்-ஆயுஷாம் :

மொழிபெயர்ப்பு


, அன்பரே, உமது மென்மையான திருவடித்தாமரைகள் எங்கே காயம்பட்டு விடுமோ என்று அஞ்சிக்கொண்டேதான் நாங்கள் அவற்றை மெதுவாக எங்கள் மார்பகங்களின் மீது வைக்கின்றோம். எங்கள் உயிர் உம்மைச் சார்ந்து மட்டுமே இருக்கின்றது. ஆகையினால், நீர் காட்டுப்பாதையில் நடந்து செல்கையில் கூரான கற்களினால் உமது மென்மையான பாதங்கள் காயப்பட்டுவிடுமோ என்ற கவலை எங்கள் மனங்களில் நிரம்பியிருக்கின்றது.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




 


 


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...