Skip to main content

துளசி தேவியின் தோற்றம்

 



துளசி தேவியின் தோற்றம்


தருமத்வஜன் என்கிற அரசனுக்கும் அவரது மனைவி மாதவிக்கும் கார்த்திகை மாதம் பௌர்ணமியும், சுக்ரவாரமும் கூடிய சுபதினத்தில் லக்ஷ்மிதேவியின் அம்சமாக துளசி தேவி அவதரித்தார்.


பருவ வயது வந்தவுடன் துளசி தேவி பதரிகாச்ரமம் சென்று பகவான் ஸ்ரீமந் நாராயணரையே நாயகனாக அடைய வேண்டுமென்று பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரியலானார்.


பிரம்மதேவர் அவர் முன் தோன்றி,"துளசி நீ விரைவில் சங்கசூடனை மணப்பாய்" என்று வரமருள, அதற்கு துளசி, "நான் தங்களிடம் நாராயணனை அடைய வேண்டுமென்றுதான் தவமிருந்தேன் ஆனால்..." என்றதும், பிரம்மா "நீ முன் ஜென்மத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை மோகித்ததால் ஸ்ரீமதி ராதாராணி உன் மீது கோபம் கொண்டு உன்னை பூவுலகில் மானிட யோனியில் பிறக்குமாறு சபித்திருக்கிறாள். அதனால்தான் நீ இங்கு பிறந்திருக்கிறாய். கிருஷ்ணரின் அருளால் விரைவில் அவரையே பதியாக அடைவாய். ஆனால் அதற்கு முன்பு, முற்பிறவியில் கிருஷ்ணரின் அங்கத்தில் தோன்றிய சுதர்மாவும், கிருஷ்ணருக்காக ஸ்ரீமதி ராதாராணியிடம் ராக்ஷஸத்தனமாக வாதாடியதால் ராதாராணியின் சாபத்திற்குள்ளாகி சங்கசூடன் என்னும் ராக்ஷஸனாக பூமியில் பிறந்துள்ளான். அதுமட்டுமல்ல அவன் சுதர்மாவாக இருந்தபோது உன் மீது கொண்ட காதலை பகவான் ஶ்ரீ கிருஷ்ணரிடம் தெரிவிக்க, பக்தவாத்ஸல்யனான அவரும் அவ்வாறே வரமளித்துள்ளார். ஆகையால் பூர்வஜென்ம வாசனையுடன் அவன் உன்னைக் காணவரும்போது அவனை மணந்து கொள்வாயாக" பிறகு இந்த ஜன்மம் முடியும் தருவாயில் நீ அந்த வைகுண்ட நாதனை அடைவாய் என்றருளி ராதிகா மந்திரத்தை அவளுக்கு உபதேசித்து விட்டு மறைந்தார்.


துளசிதேவியும் அம் மந்திரத்தை உச்சரித்தபடி இருக்கையில் ஒருநாள், ஜைகீஷ்யவ்யர் எனும் முனிவரிடம் கிருஷ்ண மஹாமந்திரத்தை உபதேசம் பெற்றதன் பலனாய் கிடைத்த நாராயண கவசத்தை கழுத்தில் தரித்துக் கொண்டு அவ்வழியே வந்த சங்கசூடன், துளசி தேவியைப் பார்த்து மையல் கொள்ள இருவருக்கும் காதல் கைகூடி திருமணமானது.


மிகுந்த பலசாலியான சங்கசூடன், தனது வலிமையால் மூவுலகங்களையும் ஆட்டிப் படைக்கத் துவங்கினான். அவனால் விரட்டியடிக்கப்பட்ட தேவர்கள் பகவான் விஷ்ணுவை சரணடைந்த போது, நீங்கள் சிவபெருமானை சரணடையுங்கள்" என்று கூற அவர்களும் சிவபெருமானை சரணடைந்தனர். சிவபெருமானும் அவர்களைக் காக்க திருவுளம் கொண்டு, முதலில் சித்திரரதன் என்னும் கந்தர்வனை அவனிடத்தில் தூதுவனாக அனுப்பி வைத்தார். அவன் அதற்கு மசியாமல் போகவே இருவருக்குமான யுத்த தேதி முடிவானது.


துளசிதேவியிடம் இச் செய்தியை சங்கசூடன் கூறியபோது பயந்த அவள், "ஸ்வாமி இன்று காலை கெட்ட கனவு கண்டேன்". அதற்கு ஏற்ப இந்த செய்தியை தாங்கள் கூறுகிறீர்கள். யுத்தத்தில் உங்களுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால்..." என்றதும், அவன், உண் பதிவிரத தன்மைக்கு பங்கம் நேரிடாத வரை எனக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது" என்று தேற்றி விட்டு யுத்தத்திற்குப் புறப்பட்டான்.


யுத்தகளத்தில் சிவபெருமானைப் பார்த்ததும் பூர்வஜென்ம நினைவு வந்தவனாய் அவரை வணங்கி, "ஐயனே! உங்களை தரிசித்ததும் நான் தங்களால் வதைக்கப்பட வேண்டியவன் என்பதை உணர்ந்தேன். ஆதலால் விதிப்படி நடப்பதை எதிர்பார்க்கிறேன்" என்று கூறி அவரை வணங்கி போரை தொடங்கினான்.


நாட்கணக்காக நீடித்த யுத்தத்தில் யாருக்கும் வெற்றி. தோல்வி கிடைக்கவில்லை. அவனை ரக்ஷிப்பதில் அவனது மந்திர கவசத்திற்கும் பங்கு உண்டு என்பதால் சிவபெருமான் மறுபடியும் மஹாவிஷ்ணுவிடம் செல்ல, அவர் "கவலை வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். சங்கசூடனின் இந்தப் பிறவி முடியும் நேரம் வந்து விட்டது. அவனது கவசத்தைப் பெறுவதோடு துளசியின் பதிவிரதா தர்மத்திற்கும் பங்கம் ஏற்படுமாறு செய்து விட்டு வருகிறேன்" என்று கூறி, சிவபிபெருமானிடம் சூலத்தைக் கொடுத்து அதனைக் கொண்டு அவனை வதைக்குமாறு கூறி அனுப்பினார்.


மறுநாள் போருக்குச் செல்வதற்கு முன் சங்கசூடன் பிராம்மணர்களுக்கு தானதர்மங்களை வழங்கும் சமயம் ஒரு பிராமணர் வடிவில் அங்கு சென்ற மஹாவிஷ்ணு அவனிடம் நாராயண கவசத்தை யாசகம் கேட்டுப் பெற்றார். அவனும் மறுப்புச் சொல்லாது அதை அவருக்கு கொடுத்து விட்டான்.


மந்திர கவசத்தை பெற்றுக் கொண்ட பகவான் பச்சைவிஷ்ணு அதன் மஹிமையால் சங்கசூடனாகி, துளசியின் அரண்மனைக்குச் சென்றார். பதியைக் கண்டு மகிழ்ந்த துளசி, ”போர் முடிந்து விட்டதா? என்று ஆச்சர்யமாக வினவ, அதற்கு அவர், "இல்லை. எங்களுக்குள் ஒரு மாதகாலம் தற்காலிகமாக போரை நிறுத்திக் கொள்ளலாம் என்று உடன்படிக்கை எடுத்திருக்கிறோம்" என்றதும் மகிழ்ந்த அவள், அவனை ஆலிங்கனம் செய்து கொண்டபோது அவனது ஸ்பரிசத்தில் வேறுபாடை உணர்ந்து, கோபத்துடன் அவரைப் பார்த்து, நீ யார் உண்மையைச் சொல்" என்று வினவினாள்.


பகவான் விஷ்ணு அவளுக்கு தம் சுயவுருவைக் காட்டினார். அதைப் பார்த்ததும் உள்ளம் குமுறிய துளசி," என் பதிவிரதா தர்மத்திற்கு களங்கம் விளைவித்த நீர் கல்லாக போகக் கடவீர்" என சபித்தாள். ஆனால் பகவான் விஷ்ணு அமைதியாக," ஹே துளசி! நீ என்னை அடைய வேண்டுமென்று தவம் செய்தாய். என் அம்சமான சங்கசூடனும் உன்னை மண முடிக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் என்னை நோக்கி தவம் செய்தான். நானும் அவனது விருப்பத்தை நிறைவேற்றினேன். உங்கள் இருவருடைய பிறவி நோக்கமும் முடிந்து இருவரும் என்னை சேரும் நேரம் வந்துவிட்டது. நீ உயிரைத் துறந்தவுடன் இப்போதுள்ள உன் உடல் இப்பூமியில் கண்டகி நதியாகி, மனிதர்களை பரிகத்தமடையச் செய்வாய். உன்னுடைய ரோமங்கள் துளசி செடியாகி மூவுலகங்களிலும் நிறைந்திருக்கும். நீ என்னை கல்லாக போகுமாறு சபித்ததால் நான் கண்டகி நதியில் மலையாக இருப்பேன். கிருமிகள் என்னை துளைத்து பற்பல உருவங்களில் சிறு சிறு கற்களாக நதியில் தள்ளும். அவற்றை சாளக்ராமம் என்ற பெயரில் பக்தர்கள் பூஜிப்பர்' என்று மஹாவிஷ்ணு அருளியதும் துளசி தன் உடலைத் துறந்து திவ்ய ரூபத்தோடு பகவான் விஷ்ணுவின் திருமார்பை அடைந்தாள். சாளக்ராமமும், துளசியும் இருக்குமிடத்தில் சகல செல்வங்களும் நிறைந்திருக்கும்.


துளசி மனதால் மஹாவிஷ்ணுவை தனது பதியாக ஒரு கணம் நினைத்ததனால் அவளது பதிவிரததர்மத்திற்க்கு பங்கம் ஏற்பட்டு சங்கசூடனின் பலம் குறைந்தது. இதை உணர்ந்த சிவபெருமான் பிரளய கால அக்னி போல் ஜ்வலிக்கும் சூலாயுதத்தை எடுத்து அவன் மீது பிரயோகித்தார். முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்த அவன் இரு கரங்களையும் கூப்பி ஸ்ரீ கிருஷ்ணரை தியானித்து அதை ஏற்றுக் கொண்டான். சூலாயுதம் அவனைத் தாக்கி அவனது அஸ்தியுடன் சேர்ந்து சங்குகளானது. சங்கசூடன் திவ்ய தேகத்தை அடைந்து, கோலோகத்திலிருந்து வந்த விமானத்திலேறிச் சென்றான். அன்றிலிருந்து சங்கானது மஹாவிஷ்ணுவிற்கும், அனைத்து தேவர்களுக்கும் மிகவும் பிரியமானதாயிற்று. சங்கநாதம் எங்கு கேட்கிறதோ, அங்கு லக்ஷ்மி தேவி வாசம் செய்வார். சங்கு தீர்த்தத்தால் நீராடுபவன் சகல பாபங்களிலிருந்தும் விடுபடுவான். சங்காபிஷேகம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.



துளசியின் 8 நாமங்கள்

******************


விருந்தாவனி : விருந்தாவனத்தில் தோன்றுபவள்


விருந்தா: பல செடிகளிலும், மரங்களிலும் தோன்றுபவள்.


விஸ்வ-பூஜிதா: பிரபஞ்சங்களில் பூஜிக்கப்படுபவள்


புஸ்ப-சாரா: புஷ்பங்களில் சாரமானவள்.


நந்தினி: நம்பிக்கையும், மகிழ்வும் தருபவள்


கிருஷ்ண-ஜீவனி: கிருஷ்ணரின் ஜீவனாய் இருப்பவள்


விஸ்வ-பாவனி: பிரபஞ்சங்களைத் தூய்மைப்படுத்துபவள்.


துளசி : ஒப்பிட இயலாதவள்



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




 





Comments

  1. Hare Krishna 🙏🙇‍♀️Thank you so much prabhuji 🙏🙇‍♀️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...