Skip to main content

உள்ளத்தூய்மை மற்றும் பிராயச்சித்தம்


நைகாந்திகம் தத் தி க்ருதே ‘பி நிஷ்க்ருதே

மன: புனர் தாவதி சேத் அஸத் - பதே

தத் கர்ம - நிர்ஹாரம் அபீப்ஸதாம் ஹ ரேர்

குணானுவாத: கலு ஸத்வ - பாவன: 



மொழிபெயர்ப்பு


சமய சாஸ்திரங்களில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பிராயச்சித்த சடங்கு முறையில் இதயத்தை தூய்மைப்படுத்துவதற்குப் போதுமானவையல்ல. ஏனெனில் பிராயச்சித்தம் செய்த பிறகும், மனம் மீண்டும் பௌதிகச் செயல்களை நோக்கியே ஓடுகிறது. அதனால்தான், பௌதிக செயல்களின் விளைவுகளிலிருந்து விடுபட விரும்புபவனுக்கு, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் ஜபிப்பது அல்லது பகவானின் நாமம், புகழ், மற்றும் லீலைகளைத் துதித்துப் போற்றுவது, பரிபூரண பிராயச்சித்த முறையாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், இத்தகைய நாம ஜபமும், துதியும் ஒருவனது இதயத்திலுள்ள அழுக்கை முழுமையாகப் போக்கிவிடுகிறது.


பொருளுரை


இச்சுலோகத்திலுள்ள கூற்றுகள், ஸ்ரீமத் பாகவதத்தில் (1.2.17) ஏற்கனவே பின்வருமாறு உறுதி செய்யப்பட்டுள்ளன:


ஸ்ருண்வதாம் ஸ்வ கதா: க்ருஷ்ண:

புண்ய ஸ்ரவண கீர்தன:

ஹ்ருதி அந்த: ஸ்தோ ஹி அபத்ராணி

விதுனோதி ஸுஹ்ருத் ஸதாம் 


“எல்லோருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக இருப்பவரும், உண்மையான பக்தர்களை ஆதரிப்பவரும், பரமபுருஷருமாகிய ஸ்ரீ கிருஷ்ணர், முறையாகக் கேட்பதாலும், பாடுவதாலுமே புண்ணியம் தரக்கூடிய அவரது செய்திகளைக் கேட்பதிலும், பாடுவதிலும் உள்ள ஆவலை வளர்த்துக் கொண்டுள்ள பக்தனின் இதயத்திலிருந்து ஜட இன்பங்களுக்கான ஆசைகளை அகற்றிவிடுகிறார்.” ஒருவன் தமது நாம், புகழ், இயல்வுகள் ஆகியவற்றைத் துதித்துப் போற்றுவதை பகவான் அறிந்த உடனேயே, அவர் அவனது இதயத்திலிருந்து அழுக்கை அகற்ற தானாக முன்வந்து உதவி செய்கிறார். இது அவரது தனிப்பெருங் கருணையாகும். எனவே இவ்வாறு அவரது புகழைப் பாடுவதாலாயே ஒருவன் தூய்மையடைவது மட்டுமின்றி, புண்ணிய செயல்களின் பலன்களையும் அடைகிறான் (புன்ய - ஸ்ரவண - கீர்த்தன). புன்ய - ஸ்ரவண - கீர்த்தன என்பது பக்தித் தொண்டு முறையைக் குறிக்கிறது. ஒருவன் பகவானின் நாமம், லீலைகள் அல்லது இயல்புகளின் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், அவைகளைப் பற்றி கேட்பதால் அல்லது பாடுவதாலேயே அவன் தூய்மையடைகிறான். இத்தகைய தூய்மை ஸத்வ - பாவனம் என்று அழைக்கப்படுகிறது.

ஒருவன் தனது வாழ்வை தூய்மைப்படுத்திக் கொண்டு, முக்தியடைவதுதான் மனித வாழ்வின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். ஜட உடலைப் பெற்றுள்ளவரை, தூய்மையற்றவனாகவே ஒருவன் கருதப்படவேண்டும். அனைவரும் உண்மையான ஆனந்த வாழ்வைத் தான் தேடிக் கொண்டிருக்கின்றனர் என்றாலும், தூய்மையற்ற இத்தகைய ஒரு பௌதிக நிலையில் அவர்களால் அதை அனுபவிக்க முடியாது. எனவே ஸ்ரீமத் பாகவதம் (5.5.1) கூறுகிறது, தபோ திவ்யம் புத்ரா யேன ஸத்வம் கத்யேத்: தன் வாழ்வை தூய்மையுடையதாக்கி, ஆன்மீக படித்தரத்திற்கு வர ஒருவன் தவம் செய்ய வேண்டும். பகவானின் நாமம், புகழ், இயல்புகள் ஆகியவற்றைத் துதிப்பதும், பாடுவதுமான இந்த தவம், தூய்மையடைவதற்குரிய மிகச்சுலபமான வழிமுறையாகும். இதனால் எல்லோரும் மகிழ்ச்சியடைய முடியும். எனவே தங்கள் இதய சக்தியை விரும்பும் அனைவரும் இந்த வழி முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும். கர்ம, ஞான, யோக போன்ற பிற முறைகளால் இதயத்தை முழுமையாக சுத்தம் செய்ய முடியாது.



(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 6.2.12 )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...