Skip to main content

ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி

 


ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜர் வைஷ்ணவ சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்கவர் ஆவார், அவர் வைஷ்ணவ-ஸார்வபௌம அல்லது “வைஷ்ணவர்களில் முதன்மையானவர்” என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பிடத்தை ஸ்ரீ நவத்வீப தாமத்தில் கண்டுபிடித்ததில் அவருடைய பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

ஸ்ரீல ஜகந்நாத பாபாஜி மஹாராஜர் 1800 வருடவாக்கில் பிறந்தார். அவர் பல்வேறு வருடங்களை விருந்தாவனத்தில் கழித்து ஒரு பக்குவமான பக்தராக பிரபலமடைந்தார். அதன் பின்னர் நவத்வீப தாமத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தார். அவர் சுமார் 120 வயதை அடைந்த காலக் கட்டத்தில் ஸ்ரீ நவத்வீபத்தில் ஒரு குடிசையில் வசித்து வந்தார், அவருடைய சேவகரான பிஹாரி லால் அவருடைய தேவைகளைப் பார்த்துக் கொண்டார். பாபாஜி மஹாராஜர் எங்கேனும் செல்ல வேண்டுமெனில் அவருடைய சேவகர் அவரை ஒரு கூடையில் தூக்கிச் செல்வது வழக்கம்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உண்மையான பிறப்பிடத்தினை ஸ்ரீல பக்திவினோத் தாகூர் தேடிக் கொண்டிருந்த தருணத்தில் ஜகந்நாத தாஸ பாபாஜியையும் தன்னுடன் வருமாறு அவர் வேண்டிக் கொண்டார். சைதன்ய மஹாபிரபு அவதரித்து பல்வேறு வருடங்களுக்குப் பின்னர் கங்கை நதியின் வழித்தடம் மாறிய காரணத்தால் நவத்வீபத்தில் இருந்த பல்வேறு புனித ஸ்தலங்கள் இடம் மாறியிருந்தன. கங்கையின் பழைய இடங்கள் அழிவுற்று புதிய இடங்கள் தோன்றியிருந்தன. அச்சமயத்தில் இருந்த நவத்வீப நகரம் சுமார் நூறு ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்பதையும், அது சைதன்ய மஹாபிரபு வசித்த நவத்வீபம் அல்ல என்பதையும் பக்திவினோத தாகூர் கண்டறிந்தார். சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பிடம் இப்போது கங்கையினால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது என்று சிலரும் நவத்வீப நகரத்தில் அஃது உள்ளது என்று சிலரும் கூறி வந்தனர். அவை அனைத்தினாலும் அதிருப்தியுற்றிருந்த பக்திவினோத தாகூர், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பிடம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார். பழங்கால வரைபடங்கள், அரசாங்கப் பதிவுகள், மற்றும் சைதன்ய மஹாபிரபுவின் காலத்தில் எழுதப்பட்ட அங்கீகாரம் பெற்ற புத்தகங்களின் அடிப்படையில், மாயாபுர் நவத்வீப தாமமானது கங்கையின் கிழக்குக் கரையில் அமைந்திருந்தது என்று பக்திவினோத தாகூர் உறுதி செய்தார். கங்கையின் கிழக்குக் கரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மணல்மேடுகள் காணப்பட்டு அங்கு பல்வேறு துளசிச் செடிகள் வளர்ந்து வருவதைக் கண்டு ஆச்சரியம் கொண்டார், அந்த நிலமானது இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. அந்த இடத்தில் வித்தியாசமான வெளிச்சங்களும் சப்தங்களும் ஏற்படுவதாக உள்ளுரில் புரளிகள் உளவி வந்தன. அதன் காரணத்தினால் அவ்விடத்தின் உரிமையாளர் அங்கு பேய்கள் இருக்கலாம் என்று எண்ணி அங்குச் செல்வதை தவிர்த்து வந்தார். இருப்பினும், அச்சமயத்தில் பழைய பாபாஜிகள் அனைவரும் அதனை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உண்மையான பிறப்பிடமாக நம்பினார். அஃது உண்மையாக இருக்கலாம் என்ற எண்ணத்தில், பக்திவினோத தாகூர் ஜகந்நாத பாபாஜியை தன்னுடன் அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். பாபாஜி மஹாராஜர் வழக்கம்போல ஒரு கூடையில் உட்கார வைத்து தூக்கி வரப்பட்டார்.

ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜியினால் தன்னுடைய கண்களைக்கூட திறக்க இயலாது. கண்களை திறக்க வேண்டுமெனில் கைகளைக் கொண்டு பலவந்தமாக அவற்றை திறக்க வேண்டியிருந்தது, நடப்பதைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை, அவர் செல்லும் இடங்களிலெல்லாம் பிஹாரி லால் அவரை ஒரு கூடையில் தூக்கிச் செல்வது வழக்கம். ஆனால் சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பிடமான அந்த தெய்வீக ஸ்தலத்தை அடைந்த மாத்திரத்தில், அவர் கூடையிலிருந்து வெளியே குதித்து பரவசத்தில் ஆடத் தொடங்கினார். “ஹரி போல்!” “கௌராங்க!” என்று உச்சரித்தபடி, அந்த இடம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உண்மையான பிறப்பிடம் என்பதை அவர் உறுதிபடுத்தினார்.

 

கௌராவிர்பாவ-பூமேஸ் த்வம்நிர்தேஷ்டா ஸஜ்-ஜன-ப்ரிய:
வைஷ்ணவ-ஸார்வபௌம:ஸ்ரீ-ஜகன்னாதாய தே நம:

பகவான் சைதன்யர் தோன்றிய இடத்தைச் சுட்டிக் காட்டியவரும் அனைத்து வைஷ்ணவர்களுக்கு பிரியமானவரும் வைஷ்ணவர்களில் தலைசிறந்த வருமான ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜிக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்கள்.”


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.






 

 

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...