பக்தர்கள் சங்கத்தின்-முக்கியத்துவம்

 


பதம் 25

ஸதாம் ப்ரஸங்கான் மம வீர்ய ஸம்விதோ
பவந்தி ஹ்ருத் கர்ணரஸாயனா: கதா:
தஜ் ஜோஷணாத் ஆஸூ அபவர்க வர்த்மனி
ச்ரத்தாரதிர்பக்திர் அனுக்ரமிஷ்யதி


மொழிபெயர்ப்பு

தூய பக்தர்களின் தொடர்பில், பரம புருஷ பகவானின் செயல்கள் மற்றும் லீலைகள் பற்றிக் கலந்துரையாடுவது காதுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் தருவதாகும். அந்த அறிவு பதியவைக்கப்படுவதால் ஒருவர் படிப்படியாக முக்திக்கான வழியில் முன்னேறுகிறார், அதன் பின்னர், அவர் விடுதலையடைகிறார், அவர் கவனம் நிலைபெறுகிறது. பின்னர் உண்மை பக்தியும் பக்தித் தொண்டும் தொடங்குகின்றன.

பொருளுரை

கிருஷ்ண உணர்விலும் பக்தித் தொண்டிலும் முன்னேறுவதன் முறை இங்கு வர்ணிக்கப்படுகிறது. முதல் கருத்து என்னவென்றால் ஒருவர் கிருஷ்ண உணர்வில் இருப்பவர்கள் மற்றும் பக்தித் தொண்டில் ஈடுபடுபவர்களின் தொடர்பை விரும்புதல் வேண்டும். அம்மாதிரித் தொடர்பு இன்றி ஒருவர் முன்னேற்றம் அடைய இயலாது என்பதாகும். புத்தக அறிவு அல்லது படிப்பு இவற்றால் மட்டும் ஒருவர் போற்றத்தக்க வகையில் முன்னேற்றம் அடைய இயலாது. ஒருவர் பொருளாசை உடைய மனிதர்களின் தொடர்பை விட்டுவிட வேண்டும், பக்தர்களின் தொடர்பை விரும்ப வேண்டும். ஏனென்றால், பக்தர்களின் தொடர்பின்றி ஒருவர் பகவானின் செயல்களைப் புரிந்துகொள்ள முடியாது. பொதுவாக மக்கள் பரம சத்தியத்தின் அருவத் தோற்றத்தை ஒப்புக் கொள்கிறார்கள். அவர்கள் பக்தர்களுடன் தொடர்புகொள்ளாததால், அவர்கள் பரம சத்தியம் ஒரு மனிதராக, தனிப்பட்ட செயல்கள் உடையவராக இருக்க முடியம் என்பதைப் புரிந்துகொள்ள இயலாதவர்கள். இது மிகவும் கடினமான பொருளாகும், ஒருவர் பரம சத்தியத்தை தனிப்பட்ட முறையில் புரிந்து கொண்டால் அன்றி, பக்தி கொள்வதில் எந்தப் பொருளும் இல்லை. தொண்டு அல்லது பக்தி எந்த அருவத்துக்கும் அளிக்க முடியாதது. தொண்டு ஒரு தனிப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டும், பக்தரல்லாதாரால் ஸ்ரீமத் பாகவதம் அல்லது பகவானின் செயல்கள் வர்ணிக்கப்பட்டுள்ள வேறு எந்த வேத இலக்கியத்தைப் படிப்பதன் மூலம் கிருஷ்ண உணர்வைப் போற்ற முடியாது; அவர்கள் இந்தச் செயல்களைப் போலி என்றும் உருவாக்கப்பட்ட கதைகள் என்றும் நினைக்கிறார்கள். ஏனென்றால், ஆன்மீக வாழ்வு அவர்களுக்குச் சரியான மனநிலையில் விளக்கப்படவில்லை. பகவானின் தனித் தன்மை வாய்ந்த செயல்களைப் புரிந்துகொள்ள, ஒருவர் பக்தர்களின் தொடர்பை விரும்ப வேண்டும், அத்தகைய தொடர்பினால், ஒருவர் பகவானின் தெய்வீகச் செயல்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யும்பொழுது, ஆழ்ந்து நினைக்கும் பொழுது, விடுதலைக்கான வழி திறக்கிறது, அவர் வீடுபேறு அடைகிறார். பரம புருஷ பகவானிடம் உறுதியான நம்பிக்கை கொண்டவர் நிலைத்து நிற்கிறார், பகவானுடனும், பக்தர்களுடனும் அவர் கொள்ளும் தொடர்புக்கான கவனம் அதிகரிக்கின்றது. பக்தர்களுடன் தொடர்பு என்பது பகவானுடன் கொள்ளும் தொடர்பு என்று பொருள்படும். இந்தத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் பக்தர் பகவானிடம் தொண்டு செய்வதற்கான உணர்வு நிலையை வளர்த்துக் கொள்கிறார். பின்னர், பக்தித் தொண்டாகிய திவ்யமான நிலையில் இருந்து, அவர் படிப்படியாக முழுமை அடைகிறார்.


(ஸ்ரீமத்-பாகவதம்  3.25.25 )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more