Skip to main content

ஶ்ரீமத் பகவத் கீதை எட்டாம் அத்தியாயத்தின் மஹிமை


 கீதா மஹாத்மியம்

மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர்

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஶ்ரீமத் பகவத் கீதை எட்டாம் அத்தியாயத்தின் மஹிமை


பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம்.


ஶ்ரீமத் பகவத் கீதை எட்டாம் அத்தியாயத்தின் மஹிமை

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



பத்ம புராணத்திலிருந்து - பகவத் கீதை அத்தியாயம் 8 பற்றிய வர்ணனை

சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, ஸ்ரீமத் பகவத்கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி இப்போது கேட்டு ஆனந்தம் அடைவாயாக".

தெற்கே, அமர்த்கபூர் என்ற ஊரில், பவஷர்மா என்ற பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு விலைமாதுவை திருமணம் செய்தான். அதோடு, மது அருந்துவது, மாமிசம் உண்பது, திருடுவது, வேட்டையாடுவது, பிறர் மனைவியரை அனுபவிப்பது போன்ற அணைத்து பாவகாரியங்களிலும் ஈடுபட்டான். ஒரு முறை விருந்திற்கு சென்ற பவஷர்மா மிகவும் அதிகமாக மது அருந்தினான். அதன் விளைவாக வயிற்றுக்கடுப்பால் மிகவும் அவதிப்பட்டான். மிகவும் துன்புற்ற அவன் ஒரு நாள் இறந்து போனான். அடுத்த பிறவியில் ஒரு பேரீச்ச மரமானான்.

ஒரு நாள் இரண்டு பிரம்மராட்சசர்கள் அந்த மரத்தடியில் ஓய்வெடுக்க வந்தனர். அந்த பிரம்மராட்சசர்களுடைய முந்தைய ஜென்மத்தின் கதை இதோ:

குஷிபால் என்ற பிராமணன், வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத்தேர்ந்தவராக இருந்தான். அவனுடைய மனைவி குமதி, தீய எண்ணம் கொண்டவள். தன் மனைவியுடன் பல இடங்களுக்கு சென்று தானம் வாங்கும் பிராமணன், பேராசையின் காரணமாக தான் பெற்ற தானத்தை வேறு எந்த ப்ராமணனுடனும் பகிர்ந்து கொள்ளமாட்டான். இக்காரணத்தினால் இறப்பிற்கு பின்னர் இருவரும் ப்ரஹ்மராக்ஷசர்களாக மாறினர். இருவரும் பசியாலும் தாகத்தாலும் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தனர்.

அப்போது இந்த பேரீச்ச மரத்தின் அடியில் ஓய்வெடுக்க வந்தனர். அப்போது குமதி, தன் கணவரிடம், "பிரம்மராட்சசர்களின் ரூபத்திலிருந்து நாம் எவ்வாறு வெளியே வர முடியும்?" என்று வினவினாள்.அதற்கு குஷிபால், "தன்னை பற்றி அறிந்து, பிரமனை பற்றி அறிந்து, பலனளிக்கும் செயல்களை பற்றி அறிந்தால் மட்டுமே நாம் விடுதலை அடைய முடியும். அந்த ஞானம் இல்லாவிட்டால் நமது பாவங்களிலிருந்து நாம் விடுபட முடியாது" என்று பதிலளித்தார்.இதை கேட்ட மனைவி, "ஹிம் தத் ப்ரஹ்ம கிம் அத்யாத்மம் கிம் கர்மா புருஷோத்தமா?" என்று வினவினாள் . [இதற்கு அர்த்தம் பிரம்மன் என்றால் என்ன? தான் என்றால் என்ன? பலனளிக்கும் செயல்கள் என்றால் என்ன?]

எதிர்பாராத விதமாக, அவள் வினவியது ஸ்ரீமத் பகவத் கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் ஒரு ஸ்லோகத்தின் வரிகளாகும். அப்போது அந்த ஸ்லோகத்தை கேட்டுக்கொண்டிருந்த மரத்தின் வடிவிலிருந்த பவசர்மா, மரத்தின் வடிவிலிருந்து விடுதலை அடைந்து மீண்டும் பிராமணரின் உடலை பெற்றார். அதே சமயம் அங்கு வந்த புஷ்பக விமானம், குஷிபால் பிராமணரையும் அவரது மனைவியையும் ஏற்றிக்கொண்டு வைகுந்ததை நோக்கி சென்றது.

இக்காட்சியை கண்ட பவசர்மா, தான் கேட்ட அந்த பாதி ஸ்லோகத்தை குறித்துவைத்து கொண்டார். காசீபுரிக்கு திரும்பி வந்து, பகவான் கிருஷ்ணரை வழிபாடு செய்து விட்டு, தினமும் மிகுந்த பக்தியுடன், இந்த பாதி ஸ்லோகத்தை படித்து வந்தார்.

அச்சமயம், வைகுந்ததில் பகவான் விஷ்ணு திடீரென்று எழுந்தார். இதைக்கண்ட லட்சுமி தேவி, "பகவானே, எதற்காக உறக்கத்திலிருந்து திடீரென்று எழுந்தீர்கள்?"என்று வினவினார். பகவான், "எனதன்பு லட்சுமியே, கஷிபுரியில் கங்கை நதிக்கரையில் என்னுடைய பக்தன் ஒருவன் கடும் தவம் புரிந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் எட்டாம் அத்தியாயத்திலிருந்து பாதி ஸ்லோகத்தை தினமும் படித்து வருகிறான். இவனுடைய பக்திக்கு என்ன ஆசி வழங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்" என்று பதிலளித்தார். பார்வதி தேவி சிவபெருமானிடம் வினவினார், "பகவான் விஷ்ணு அந்த பிராமணருக்கு என்ன ஆசி வழங்கினார்?"

சிவபெருமான், "பகவான் விஷ்ணு பவஷர்மாவை வைகுந்தத்திற்கு அழைத்து வந்ததோடல்லாமல் நிரந்தரமாக தனக்கு சேவை செய்யும் வாய்ப்பையும் அளித்தார். அதுமட்டுமல்லாமல், பாவஷர்மாவின் அணைத்து முன்னோர்களும் விடுதலை பெற்று பகவானின் பாத கமலங்களை அடைந்தனர். எனதன்பு பார்வதியே, நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் சில சிறப்புகளை மட்டுமே கூறியிருக்கிறேன்" என்று கூறினார்.



 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...