Skip to main content

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்




 ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்


வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்


🔆🔆🔆🔆🔆🔆🔆


பூஞ்சோலை ஓர் அழகிய நாடு. அந்நாட்டை நீதிநெறி தவறாமல் விஷ்ணுவரதன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அந்த அரசன் அந்தணர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தான். விஷ்ணுவரதனின் ஆட்சியில் மக்கள் எந்த ஒரு குறையும் இன்றி மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருநாள் அரசர் ஊர் திருவிழாவில் அந்தணர்களுக்கு உணவளிக்க ஏற்பாடுகள் தடபுடலாக செய்து கொண்டிருந்தார். அச்சமயம் வானில் ஒரு கழுகு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு உணவருந்தும் இடத்திற்கு மேல் பறந்துச் சென்றது.

அப்பொழுது எதிர்பாராத விதமாக பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் சமைத்து வைத்திருந்த உணவில் விழுந்து விட்டது. இதை யாரும் கவனிக்கவில்லை. எதையும் அறியாத அரசன் அந்த உணவை அந்தணர்களுக்கு அளித்தார். அந்த உணவை உண்ட மறுகணமே அந்தணர்கள் உயிர் துறந்தார்கள். இதைக் கண்டு அரசர் மிகவும் வருத்தம் கொண்டார்.

கர்ம வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு குழப்பமாகி விட்டது. இந்த கர்மவினையை யாருக்கு கொடுப்பது.?

கழுகிற்கா?

பாம்பிற்கா?

அல்லது அரசனுக்கா?

கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது. அதனால் அது கழுகின் தவறு இல்லை.

பாம்பின் விஷம் உயிர்போகும் நிலையில் அதன் வாயிலிருந்து வழிந்தது, அதனால் பாம்பின் குற்றமும் இல்லை.

இதை எதையும் அறியாத அரசன் உணவை வழங்கியது அரசனின் தவறுமில்லை. அரசனும் இதை வேண்டுமென்றே செய்யவில்லை.

இதற்கான கர்மவினையை யாருக்கு கொடுப்பது? சரி, நாம் சென்று எமதர்மரிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தை சித்திரகுப்தன் கூறினார். இதைக் கேட்ட எமதர்மர், சிறிது நேரம் சிந்தித்தார். அதன் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும். அதுவரை பொறுமையாக இருக்கவும் என அறிவுறுத்தினார்.

சில நாட்களுக்கு பின் ஒருநாள் சில அந்தணர்கள் பூஞ்சோலை நகருக்கு வந்தனர். அரசன் விஷ்ணுவரதனை காண அரண்மனைக்கு செல்ல நினைத்தனர். ஆனால் அந்த அந்தணர்களுக்கு, அரண்மனைக்கு செல்ல வழி தெரியாததால், பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள். அப்பெண்மணியும், அந்த அந்தணர்களுக்கு சரியான பாதையை கூறிவிட்டு, அந்தணர்களிடம், நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால் இந்த அரசன் அந்தணர்களுக்கு உணவளித்து கொல்பவன் என்று கூறினாள்.

இப்பெண் இவ்வாறு கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. அந்தணர்களை கொன்ற கர்ம வினை இந்த பெண்மணிக்கே என முடிவு செய்தார்.

இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நடந்த உண்மை எதுவும் அறியாமல், ஒருவரின் மேல் வீணாக பழி சுமத்தினால் கர்மவினை, பழி உரைப்பவர் மீது வந்து சேரும்.


கதையின் நீதி:

🔆🔆🔆🔆🔆🔆🔆


நீங்கள் யாருடைய செயலை பற்றியாவது குறை கூறும்பொழுது அந்த குறை உண்மையானதாக இருந்தால், அந்த செயலின் பாதி பாவம் உங்களை வந்து சேரும்.

அதேபோல் நீங்கள் யாருடைய செயலை பற்றியாவது குறை கூறும்பொழுது அந்த குறை பொய்யானதாக இருந்தால், அந்த செயலின் முழு பாவமும் உங்களை வந்து சேரும்.

பாம்பும் தவளையும்

🔆🔆🔆🔆🔆🔆🔆


இரவின் இருளில் ஒரு பாம்பு தவளையின் இனிமை யான கத்தலைக் கேட்பதன் மூலம் தன் உணவைக் கண்டு கொள்ள முடியும். "இது தவளை' என்பதைப் பாம்பு புரிந்து கொள்ள முடியும், அது தவளையை அதன் ஒலி அதிர்வால் பிடிக்கிறது. இந்தச் சான்று சிலசமயம் மரணத்திற்காக ஒலி அதிர்வை ஏற்படுத்துபவர்களுக்குத் தரப்படுகிறது. ஒருவர் தவளைகளைப் போல் ஒலியதிர்வை ஏற்படுத்தும் இனிய நாக்கு படைத்தவராக இருக்கலாம், ஆனால் அந்த அதிர்வு மரணத்தை அழைக்கும்.

நாக்கு மற்றும் ஒலி அதிர்வின் சிறந்த பயன் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே, என்பதை உச்சரிப்பதாகும். அது ஒருவரைக் கொடூரமான மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும்.

ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 3.29.29./ பொருளுரை

நாம் மற்றவர்களை பற்றி தவறாக கூறும்பொழுதோ அல்லது தவறாக நினைக்கும்பொழுதோ, அவ்வாறு செய்வதற்கு முன் இந்த கதையை நினைவுகூர வேண்டும்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, 
ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆

Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇

🔆🔆🔆🔆🔆🔆🔆

சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...