Skip to main content

Posts

Showing posts with the label Brāhmaṇa / அந்தணர் (Article)

யார் அந்தணர்கள் ?

பகவான் எப்பொழுதும் அந்தணர்களிடத்தும், பசுக்களினிடத்தும் மிகுந்த கருணையுடையவராக இருக்கிறார். ஆகையினாலேயே கோ ப்ராஹ்மண ஹிதாய ச என்று சொல்லப்பட்டிருக்கிறது. பகவான் கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவான முழுமுதற் கடவுள் அந்தணர்களினால் வழிபடப்படும் தெய்வம் ஆவார். வேத இலக்கியங்களில் குறிப்பாக ரிக் வேதத்தின் மந்திரங்கள் உண்மையான அந்தணர்கள் எப்பொழுதும் விஷ்ணுவின் திருவடித் தாமரைகளையே நோக்குகின்றனர் என்று கூறுகின்றன; ஓம் தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய : தேர்ச்சி பெற்ற அந்தணர்கள் முழுமுதற் கடவுளின் விஷ்ணு வடிவத்தினையே அதாவது கிருஷ்ணர், ராமர் மற்றும் விஷ்ணு அம்சங்களையே வழிபடுகின்றனர். அந்தணர் குடும்பத்தில் பிறந்த ஒரு அந்தணனின் செயல்கள் வைணவர்களுக்கு எதிரானதாக இருந்ததென்றால் அவன் அந்தணனாகக் கருதப்படமாட்டான். ஏனென்றால் அந்தணன் என்றால் வைணவன் என்றும் வைணவன் என்றால் அந்தணன் என்றே பொருளாகும். பகவானுக்குப் பக்தனான ஒருவனும் அந்தணனே ஆவான். ப்ரஹ்ம ஜானாதி ப்ராஹ்மண: என்பது சூத்திரம். பிரம்மத்தை உணர்ந்தவன் அந்தணன் (பிராம்மணன்) ஆவான். அதுபோல் முழுமுதற் கடவுளை உணர்ந்தவன் வைணவன் ஆகிறான். பிரம்மத்தை உணர்வதென்பது ம...