Skip to main content

யார் அந்தணர்கள் ?



பகவான் எப்பொழுதும் அந்தணர்களிடத்தும், பசுக்களினிடத்தும் மிகுந்த கருணையுடையவராக இருக்கிறார். ஆகையினாலேயே கோ ப்ராஹ்மண ஹிதாய ச என்று சொல்லப்பட்டிருக்கிறது. பகவான் கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவான முழுமுதற் கடவுள் அந்தணர்களினால் வழிபடப்படும் தெய்வம் ஆவார். வேத இலக்கியங்களில் குறிப்பாக ரிக் வேதத்தின் மந்திரங்கள் உண்மையான அந்தணர்கள் எப்பொழுதும் விஷ்ணுவின் திருவடித் தாமரைகளையே நோக்குகின்றனர் என்று கூறுகின்றன; ஓம் தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய : தேர்ச்சி பெற்ற அந்தணர்கள் முழுமுதற் கடவுளின் விஷ்ணு வடிவத்தினையே அதாவது கிருஷ்ணர், ராமர் மற்றும் விஷ்ணு அம்சங்களையே வழிபடுகின்றனர். அந்தணர் குடும்பத்தில் பிறந்த ஒரு அந்தணனின் செயல்கள் வைணவர்களுக்கு எதிரானதாக இருந்ததென்றால் அவன் அந்தணனாகக் கருதப்படமாட்டான். ஏனென்றால் அந்தணன் என்றால் வைணவன் என்றும் வைணவன் என்றால் அந்தணன் என்றே பொருளாகும். பகவானுக்குப் பக்தனான ஒருவனும் அந்தணனே ஆவான். ப்ரஹ்ம ஜானாதி ப்ராஹ்மண: என்பது சூத்திரம். பிரம்மத்தை உணர்ந்தவன் அந்தணன் (பிராம்மணன்) ஆவான். அதுபோல் முழுமுதற் கடவுளை உணர்ந்தவன் வைணவன் ஆகிறான். பிரம்மத்தை உணர்வதென்பது முழுமுதற் கடவுளை உணர்வது என்பதின் ஆரம்பமேயாகும். முழுமுதற் கடவுளை உணர்ந்த ஒருவன் முழுமுதற் கடவுளின் அருவத்தன்மையான பிரம்மத்தையும் கூட உணர்ந்தவனே ஆகிறான். ஆகையினால் வைணவன் என்பவன் ஓர் அந்தணன்தான். இங்கு குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால் இந்த அத்தியாயத்தில் அந்தணர்களைப் பற்றித் தாமே பகவான் பாராட்டிப் பேசும் வார்த்தைகள் எல்லாம் அவருடைய பக்தர்களான அந்தணர்கள் அல்லது வைணவர்களையேக் குறிப்பிடுவதாகும். இதனை, அந்தணர் குடும்பங்களில் பிறந்து அதற்கான தகுதிகள் சிறிதும் இல்லாதிருந்தும் தம்மை பெயரால் அந்தணர்கள் என்று அழைத்துக் கொள்பவர்களைக் குறிப்பிடுவதாக யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.


ஶ்ரீமத் பாகவதம் 3.16.4 - பொருளுரை



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇



https://t.me/udvegakathaigal

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...