Skip to main content

Posts

Showing posts with the label From Whom To Accept Advice?/அறிவுரையை யாரிடம் கேட்க வேண்டும் (Srimad Bhagavata Shiksha)

அறிவுரையை யாரிடம் கேட்க வேண்டும்

பந்தப்பட்ட ஆத்மா நான்கு வழிகளில் குறைபாடுடையவனாக இருக்கிறான். அவை அவன் மாயை வசப்பட்டவன், தவறு செய்பவன், குறை அறிவு உடையவன், ஏமாற்றம் எண்ணம் உடையவன் என்பவையாகும். பௌதீக பந்தத்திலிருந்து ஒருவன் விடுதலை பெறாதவரையில் இந்நான்கு குற்றங்களும் கண்டிப்பாக இருக்கும். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மனிதனிடமும் ஏமாற்றும் எண்ணம் இருக்கிறது. இந்த எண்ணம் தொழில் மற்றும் பண வரவு செலவுகளில் நடை முறைப்படுத்தப்படுகிறது. இரண்டு நண்பர்கள் இணைந்து அமைதியுடன் வாழ்ந்தபோதிலும் அவர்களிடையே வரவு செலவு என்று வரும்பொழுது, அவர்களிடம் இருக்கும் ஏமாற்றும் மனப்பான்மையின் காரணமாக அவர்கள் பகைவர்களாகின்றனர். ஒரு தத்துவவாதி ஒரு பொருளாதார நிபுணனை ஏமாற்றுக்காரன் என்று குற்றம் சொல்கிறான், ஒரு பொருளாதார நிபுணனோ, ஒரு தத்துவவாதி பணத்துடன் தொடர்பு கொள்ளும்பொழுது அவனும் ஏமாற்றுக்காரனாகிறான் என்று தத்துவவாதியைக் குற்றம் சொல்கிறான். எது எப்படியிருந்த போதிலும் பௌதீக வாழ்க்கையின் நிலை இதுவேயாகும். மிகப் பெரிய தத்துவத்தை ஒருவன் கற்றுக் கொடுக்கலாம் ஆனால் அவனுக்குப் பணம் தேவைப்படும்பொழுது அவன் ஏமாற்றுக்காரானாகிறான். இப்பௌதிக உலகில் விஞ்ஞானிகளு...