Skip to main content

அறிவுரையை யாரிடம் கேட்க வேண்டும்



பந்தப்பட்ட ஆத்மா நான்கு வழிகளில் குறைபாடுடையவனாக இருக்கிறான். அவை அவன் மாயை வசப்பட்டவன், தவறு செய்பவன், குறை அறிவு உடையவன், ஏமாற்றம் எண்ணம் உடையவன் என்பவையாகும். பௌதீக பந்தத்திலிருந்து ஒருவன் விடுதலை பெறாதவரையில் இந்நான்கு குற்றங்களும் கண்டிப்பாக இருக்கும். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மனிதனிடமும் ஏமாற்றும் எண்ணம் இருக்கிறது. இந்த எண்ணம் தொழில் மற்றும் பண வரவு செலவுகளில் நடை முறைப்படுத்தப்படுகிறது. இரண்டு நண்பர்கள் இணைந்து அமைதியுடன் வாழ்ந்தபோதிலும் அவர்களிடையே வரவு செலவு என்று வரும்பொழுது, அவர்களிடம் இருக்கும் ஏமாற்றும் மனப்பான்மையின் காரணமாக அவர்கள் பகைவர்களாகின்றனர். ஒரு தத்துவவாதி ஒரு பொருளாதார நிபுணனை ஏமாற்றுக்காரன் என்று குற்றம் சொல்கிறான், ஒரு பொருளாதார நிபுணனோ, ஒரு தத்துவவாதி பணத்துடன் தொடர்பு கொள்ளும்பொழுது அவனும் ஏமாற்றுக்காரனாகிறான் என்று தத்துவவாதியைக் குற்றம் சொல்கிறான். எது எப்படியிருந்த போதிலும் பௌதீக வாழ்க்கையின் நிலை இதுவேயாகும். மிகப் பெரிய தத்துவத்தை ஒருவன் கற்றுக் கொடுக்கலாம் ஆனால் அவனுக்குப் பணம் தேவைப்படும்பொழுது அவன் ஏமாற்றுக்காரானாகிறான். இப்பௌதிக உலகில் விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும், பொருளுாதார நிபுணர்களும் ஒர் வழி அல்லது மற்றோர் வழியில் ஏமாற்றுக்காரர்களேயாவர். விஞ்ஞானிகள் ஏமாற்றுப் பேர்வழிகள்ஆவர் ஏனென்றால் விஞ்ஞானத்தின் பெயரில் அவர்கள் ஏராளமான போலியான விஷயங்களை எடுத்து வைக்கின்றனர். இவர்கள் சந்திரனுக்குப் போவதாகக் கூறுவார்கள். ஆனால் இறுதியில் தங்கள் சோதனைகளுக்காகப் பொதுமக்களின் ஏராளமானப் பணத்தினைக் கொண்டு தங்கள் ஏமாற்று வேலையை முடித்துக் கொள்கின்றனர். அவர்களால் பயனுடைய அவர்களால் பயனுடைய ஒன்றைக் கூடச் செய்ய முடியாது. இந்நான்கு குற்றங்களையும் தாண்டி மேலே இருக்கும் ஒருவனைக் காணும் வரை ஒருவன் மற்றொருவனின் அறிவுரையினை ஏற்றுக் கொண்டு பௌதீகப் பந்தத்திற்குப் பலியாகிவிடக் கூடாது. கிருஷ்ணர் அல்லது அவரது உண்மையானப் பிரதிநிதியிடமிருந்து அறிவுரை மற்றும் உபதேசங்களைப் பெறுவதே மிகச்சிறந்த முறையாகும். இதன்மூலம் ஒருவன் இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் கூட மகிழ்ச்சியுடனிருக்கலாம்.


( ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 5.14.26 / பொருளுரை )


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க


ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...