ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி வழங்கியவர்: நித்யானந்த தாஸ் ரூபர், ஸநாதனர், ரகுநாத தாஸர், ரகுநாத பட்டர், கோபால பட்டர், ஜீவர் ஆகிய ஆறு கோஸ்வாமிகள் பகவான் சைதன்யரின் முதன்மையான சீடர்களாவர். ரூபரும் ஸநாதனரும் சைதன்யரைக் காண ஏங்குதல் சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, வங்காளத்தின் தலைநகரமான ராமகேலி எனும் இடத்தில் நவாப் ஹுசேன் ஷா என்பவரின் ஆட்சியில் ரூபரும் ஸநாதனரும் அமைச்சர்களாகப் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் பிறப்பால் உயர்ந்த பிராமணர்களாக இருந்தபோதிலும், சமூக நெருக்கடியினால் மிலேச்ச அரசருக்குக் கீழ் பணிபுரியும் நிலையில் இருந்தனர். எனினும், அவர்கள் தங்களின் உள்ளுணர்வின் மூலமாக, ராதையும் கிருஷ்ணரும் இணைந்து ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக தோன்றியுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே, “நாங்கள் உங்களை அடைவதற்கும் உங்களுக்குத் தொண்டு செய்வதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துங்கள். நாங்கள் தற்போது மிகவும் தாழ்ந்த வருந்தத்தக்க நிலையில் இருக்கின்றோம்,” என்று அவர்கள் மஹாபிரபுவிற்குக் கடிதம் எழுதினர். மஹாபிரபுவிடமிருந்து அக்கடிதத்திற்கான பதில் உடனடியாக வரவில்லை. இறுதியில், மஹாபிரபு மறைமுகமான பதிலை...