Skip to main content

சிவபெருமானின் பிரார்த்தனையும் விநாயகரின் பிறப்பும்




 சிவபெருமானின் பிரார்த்தனையும் விநாயகரின் பிறப்பும்




விநாயகர் கதை வாமன புராணத்தில் கூறுவது, பார்வதி தேவி தனது வியர்வையினால் ஒரு வடிவத்தை உண்டாக்கி, அதில் சிவனின் உடலிலிருந்த சாம்பலை தொட்டு உயிரூட்டப்பட்டார். இதனாலேயே இவர் 'கர்பத்திலிருந்து பிறவாதவர்' என்று அழைக்கப்படுகிறார்.

பின்வரும், பிரம்ம-வைவர்த்த புராணம்,சிவா புராணம் & ஸ்கந்த புராணத்தில் கூறப்படுவது யாதெனில்:

குழந்தை வரம் வேண்டி சிவனிடம், பார்வதி கூறுகிறாள் :
'மூவுலகிற்கும் இறைவனான உங்களை கணவனாக அடைந்தும், எனக்கு குழந்தை இல்லை. குழந்தை இல்லாத பெண்ணின் வாழ்க்கை பிரோஜனம் இல்லாததாக கூறப்படுகிறது' என்று கூறுகிறாள் .

பார்வதியின் விருப்பத்தினை பூர்த்திசெய்ய சிவபெருமான் அறிவுறுத்திகிறார் 'பண்புடையவளே ! புண்ய விரதத்தை கடைபிடித்து,பகவான் மீதான பக்தியினால் நீ செல்வாக்கு உடைய மகனை அடைவாய். இந்த விரதத்திற்கு வழிபாட்டுக்குகுறியவர் பகவான் கிருஷ்ணரே. அவரே வழிபடுபவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்து, அவர்களது முன்னோர்களையும் விடுவிக்கிறார். இவரின் மந்திரத்தை உச்சரிப்பவர்கள் அனைத்து வெற்றிகளையும் அடைந்து, பின் வைகுண்டத்தை அடைந்து நித்தியமாக வசிப்பர்' என்று கூறினார்.

அதன் பின்பு, பார்வதி தேவி ஒரு வருடம் முழுவதும் பக்தியுடன் பகவான் கிருஷ்ணரை தியானித்து கடைபிடித்தாள். இதனால் பார்வதியின் விரதம் வெற்றிபெற சிவபெருமானே பகவான் கிருஷ்ணரை அணுக, கிருஷ்ணர் பின்வருமாறு பதிலளித்தார் :
'கருணையுள்ளவரே, நீர் வைஷ்ணவர்கள் எஜமானர் என்பதால் உனது மகன் கணேசர் என்கிற பெயரில் மூன்று உலகங்களிலும் அறியப்படுவான். அவரை நினைத்தால் ஒருவருடைய வாழ்வின் தடைகள் நீங்கும்.இவ்வாறாக அவன் 'விக்னேஸ்வரன்' எனப்படுவான். மேலும்,தானத்தில் கொடுக்கப்படும் உணவுகளை எல்லாவத்தையும் உண்பதால் அவர் 'சம்போதர'(பெரிய வயிறையுடையவன்) என்றும் அறியப்படுகிறார்.

'சனியின் பார்வையினால் சம்போதரரின் தலை சீவப்பட்டு அவ்விடத்தில் ஒரு யானை தலை பொருத்தப்பட்டு, அவரை 'ஆணை முகத்தான்' என்றும், அவரின் ஒரு தந்தம் பரசுராமரால் வெட்டப்பட்டதால் அவர் 'ஒத்தை தந்தமுடையவர்' என்றும் அழைக்கப்படுவர். இவர் பிரபஞ்சம் முழுவதும் மக்களால் போற்றப்படுவர்,பிற தேவர்களை வழிபடுவதற்கு முன்னதாக இவரை வழிபடுவோர் வெற்றியடைவர், இல்லையெனில் தோல்வியடைவார்கள்' என்று கூறினார்.

இப்படி கணேசர் பிறந்தார். இவரை பார்த்து சிவபெருமான் கூறுகிறார்
'மகனே, எனது உயிரையும்விட நீ எனக்கு பிரியமானவன் ! என்னைப்போலவே தானம் கொடு, ஹரியிடம் பக்தியுடன் இரு ! மதிக்கத்தக்கவனாக இரு ! எதிரிகளை வெல்வாயாக ! '' என்று அவனை ஆசீர்வதித்தார்.

எனவே, கணேசர் சுதந்திரமானவரோ, உச்ச படைப்பாளரோ, அனைத்திற்கும் மூலமானவரோ இல்லை என்பதை இந்த புராண கதையிலிருந்து அறியலாம்.

கணேசர், பகவான் கிருஷ்ணரின் ஆசையினால் வந்து, பகவானால் சக்தி அளிக்கப்பட்டு தர்மத்தை பின்பற்றுவோரின் பாதையில் உள்ள தடைகளை நீக்குகிறார்.

பிரம்மா தனது பிராத்தனையில் கூறுகிறார் ...

யத்-பாத-பல்லவ-யுகம் வினிதாய கும்ப-
தவன்ந்தே ப்ரணாம-ஸமயே ஸ கணாதிராஜா: I
விக்ஹ்னான் விஹந்தும் அலம் அஷ்ய ஜகத்-த்ரயஷ்ய
கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி II

'மூன்று உலகிலுள்ள தடைகளை அழிக்கும் தனது செயலுக்கான சக்தியை பெறுவதற்காக, கணேசன் தனது யானை தலையில் புடைத்திருக்கும் ஒரு ஜோடி கும்பம் மீது யாருடைய திருவடிகளை தாங்கியுள்ளாரோ, அந்த ஆதி புருஷரான கோவிந்தர் நான் வணங்குகிறேன்' - பிரம்ம சம்ஹிதை - 5.50

பிரம்ம-வைவர்த்த புராணத்தில் - 4-6-117 கூறுகிறது...

கணேஷ: கார்திகேயஷ் ச நத்வா கிருஷ்ணம் பராத் பரம்
நநாம ஷங்கரம் தர்மம் அனந்தம் கமலோத்பவம்

'முதலில் உயர்தவர்களில் உயர்தவரான பகவான் கிருஷ்ணரிடத்திலும், பிறகு சிவபெருமான், யமராஜர், சேஷார், பிரம்மதேவர் அகியோரிடத்திலும், கணேசனும் கார்த்திகேயனும் விழுந்து வணங்கினர்'

அதாவது, பகவான் கிருஷ்ணரை உணராதவர்கள், கணேசருக்கு மரியாதை செலுத்தி வழிபட்டு தடைகளை நீக்கி கொள்கிறார்கள்.

ஆதி-வராஹ புராணம் - 211.85 கூறுகிறது....

ஜன்மாந்தர-ஸஹஸ்ரேஷு ஷமாராத்ய வ்ரிஷத்வஜம்
வைஷ்ணவத்வம் லபேத் கஷ்சித் ஸர்வ-பாபஷியே ஸதி


'ஆயிரமாயிரம் பிறவிகளாக ஒருவர் கணேசரை வழிபட்டு எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்ட பிறகே, வைஷ்ணவம் என்னும் தளத்தை அடைவது சாத்தியமாகும்'

பத்மபுராணம் கூறுகிறது ....

அனன்ய-ஷரணாே பக்தோ நாம-மந்த்ரேஷு தீஷித:
கதாசின் நார்சயேத் தேவான் கணேஷாதீம்ஸ் து வைஷ்ணவ:

'பகவானுக்கான தூய பக்தியில் விருப்பமுடைய பக்தன், மற்றும் வைஷ்ணவ மந்திரத்துடன் தீக்ஷ வாங்கியவன், கணேசரையோ பிற தேவர்களையோ எப்போதும் வழிபடவேண்டிய அவசியமில்லை'
எனவே, தூய பக்தனுடைய இதயம், மனம், அல்லது ஆத்மாவை பகவான் கிருஷ்ணரிடம் தவிர வேறு யாரிடமும் கொடுக்க விரும்புவதில்லை.

கற்புள்ள மனைவி அவளது கணவரிடத்தில் மட்டுமே சார்ந்திருப்பதை போல, பகவானுடைய பக்தர்கள் கிருஷ்ணரை மட்டுமே சார்ந்து, நம்பிக்கையுடன் பக்தியுடனும் எல்லா சூழ்நிலைகளிலும் அவருக்கு நிபந்தனையில்லாமல் சேவை செய்கிறான். இதுவே தூய பக்தியின் அடையாளங்கள். 

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami.

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...