ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர் 1531 - 1615 (தோராயமாக) வழங்கியவர் :- சுத்த பக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸ்ரீமத் கௌரப்ரியா லோகநாத பாதப்ஜா-ஸத் பதம் ராதா-க்ருஷ்ண ரஸோன்மதம் வந்தே ஸ்ரீமான் நரோத்தம் “ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தாமரைப் பாதத்தில் தேனருதும் தேனீயாக இருக்கும் ஸ்ரீல நரோத்தம தாஸ் தாகூரை நான் வணங்குகிறேன். அவர் ஸ்ரீ ராதா மற்றும் கிருஷ்ணரின் அன்பில் பரவசமடைந்துள்ளார்.” கிழக்கு வங்காளத்தில் பகவான் ஸ்ரீ சைதன்யர் 🍁🍁🍁🍁🍁🍁 ஒரு முறை பகவான் சைதன்யர் தன்னுடைய சாகாக்களுடன் கிழக்கு வங்காளத்திலுள்ள கேதுரி என்ற கிராமத்திற்கு வருகை புரிந்தார். அப்போது திடீரென்று அவர் அழ ஆரம்பித்தார். “நரோத்தம், நரோத்தம், என் அன்பான நரோத்தம், நீ எங்கு இருக்கிறாய்?” இதைக் கேட்ட பகவானின் சகாக்களெல்லோரும் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர். ஏனென்றால் அவர்கள் இதற்கு முன் இந்த பெயருடைய யாரையும் அறிந்திருக்கவில்லை இதனால் அவர்கள் கேட்டனர். "யார் இந்த நரோத்தம்?" ' அதற்கு பகவான் அவர் இனி மேல்தான் வரப்போகிறார்" என்று பதிலளித்தார். அடுத்த நாள் பகவான் ஶ்ரீ சைதன்யர் பத்மா நதியில் ஸ்நானம் செய்த போது, பத்மா நதிக...