Skip to main content

Posts

கடவுள் நம்பிக்கை

  கடவுள் நம்பிக்கை ராஜேஷ் முடிவெட்டிக் கொள்ள வழக்கமாகச் செல்லும் கடைக்குச் சென்றான். முடிதிருத்துபவர் அவனுக்கு நெருக்கமான நண்பர். இருவரும் பல விஷயங்கள் பற்றி மகிழ்ச்சியாக உரையாடுவர். அன்றும் அப்படியே பலவிஷயங்கள் பற்றி பேசினர். இடையில் கடவுளைப் பற்றிப் பேச்சு வந்தது. முடிதிருத்துபவர், எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் இருக்கிறார் என்று நான் நம்ப மாட்டேன்! என்றார். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? என்று கேட்டான் ராஜேஷ். காரணம் மிகச் சுலபமானது. தெருவில் போய்ப்பாருங்கள். கடவுள் இருந்தால் நோயால் வாடுபவர்கள் இருப்பார்களா? கடவுள் இருந்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் தெருவில் அலையுமா? கடவுள் இருந்தால் துன்பமும், வலியும் இராது. இதையெல்லாம் அனுமதிக்கும் கடவுள் நிச்சயம் இருப்பார் என்று நான் நம்பவில்லை, என்றார் முடிதிருத்துபவர். ராஜேஷ் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. வீணாக விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்று மவுனமானார். முடிதிருத்தும் வேலைமுடிந்து, ராஜேஷ் வெளியே போனார். அவர் போன சற்று நேரத்தில், வீதியில் நீண்ட தாடியும் அடர்ந்த முடியுமாய், ஒரு ஆள் நிற்பதை கடைக்காரர் பார்த்தார். அந்த நபரைப் பார்த்தால், மு...

ஆத்மா

 

நாம் எல்லோரும் ஜீவாத்மாக்கள் என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பதே ஆன்மீக ஞானம்.

 

பகவத்கீதை கடவுளை அறியும் விஞ்ஞானமாகும்

 

தேவேந்திரனின் பிரார்த்தனை

  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 10 / அத்தியாயம் 27 / பதம் 4-13 ************************************************************************************************************** பதம் 4 இந்த்ர உவாச விஸூத்த - ஸத்தவம் தவ தாம ஸாந்தம் தபோ - மயம் த்வஸ்த - ரஜஸ் - தமஸ்கம் மாயா - யோ ( அ ) யம் குண - ஸம்ப்ரவாஹோ ந வித்யதே தே ( அ ) க்ரஹணானுபந்த : மொழிபெயர்ப்பு தேவேந்திரன் கூறினான் : சத்துவ குணத்தின் வெளிப்பாடான உமது உன்னத வடிவம் எந்தவிதமான மாற்றமில்லாததும் , ஞான ஒளியுடையதும் , ரஜோ , தமோ குணங்கள் அற்றதுமாகும் . மாயை மற்றும் அறியாமையினை அடிப்படையாகக் கொண்ட ஜட இயற்கையின் ஆற்றல் மிக்கப் பிரவாகம் உம்மிடம் வெளிப்படுவதில்லை .   பதம் 5 குதோ நு தத் - தேதவ ஈஸ தத் - க்ருதா லோபாதயோ யே ( அ ) புத - லிங்க - பாவா : ததாபி தண்டம் பகவான் பிபர்தி தர்மஸ்ய குப்த்யை கல - நிக்ரஹாய மொழிபெயர்ப்பு பிறகு எவ்வாறு உம்மிடம் காமம் , குரோதம் , லோபம் என்னம் சாதாரண மனிதனின் அடையாளங்கள் இருக்க முடியும் ? இவை ஒருவனின் முந்தைய பௌதீக வாழ்வின் ஈடுப...