ஜெகந்நாத காட் (படிதுறை) 🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆 இருநூறு வருடங்களுக்கு முன்னர் யமுனா நதி வம்சி வட்டா நதிகரையில் இராமானந்தி வைஷ்ணவர் பரம்பரையில் வரும் ஹரிதாஸ் என்னும் பக்தர் வசித்து வந்தார். அவர் பகவான் ஜெகன்நாதரை தினந்தோறும் மனதில் தியானித்து வந்தார். ஒரு நாள் இரவு ஹரிதாஸ்சரின் கனவில் பகவான் ஜெகன்நாதர் தோன்றி தான் யமுனா நதிக்கரையில் வாசம் செய்ய மிகவும் விரும்புவதாகவும் ஹரி தாசரின் நித்திய வழிபாட்டை ஏற்றுக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும் பகவான் ஜெகன்நாதர் ஹரிதாசரிடம் " தன்னுடைய தாரு பிரம்ம ( மரத்தினால் ஆன விக்ரகம்) ரூபத்தை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் செய்யும் லீலை பூரியில் நடைபெறும். அச்சமயத்தில் புதிய விக்ரகம் செய்து பழைய விக்ரகங்களை பூமிக்குள் வைத்து மூடுவர். அச்சமயம் பல்வேறு சடங்குகள் விமர்சியாக நடைபெறும். சடங்குகள் முடிவதற்கு முன் நீ அவ்விடம் சேர வேண்டும். அந்த பழைய விக்ரகத்தை விருந்தாவனத்திற்கு எடுத்து வந்து யமுனை கரையில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டார். இது எனது கட்டளை என்று அரசரிடம் தெரிவித்துவிடு.பின்னர் நான் இங்கு வரும் ஏற்பாட்டை அவர் ப...