பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -10 பூரணத்தின் வைபவம் வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் ஒன்பதாம் அத்தியாயத்தின் சுருக்கம் பொறாமையற்ற நபர்கள் கிருஷ்ண ரைப் பற்றிக் கேட்பதால் பெறக்கூடிய அறிவு, எல்லா அறிவின் அரசனாகவும் மிகமிக இரகசியமானதாகவும் உள்ளது. கிருஷ்ணர் அனைத்தையும் படைப்பவர், ஆனால் அவர் அவற்றிலிருந்து வேறுபட்டவர். ஜட இயற்கையின் மீது தனது பார்வையைச் செலுத்துவதாலேயே அவர் அதைப் படைக்கின்றார். இருப்பினும் முட்டாள்கள் அவரை சாதாரண மனிதனாக நினைத்து ஏளனம் செய்கின்றனர். அத்தகையோரின் அனைத்து முயற்சிகளும் அழிந்துவிடும். கிருஷ்ணரை இறைவனாக ஏற்று, எப்போதும் கீர்த்தனத்தில் ஈடுபட்டுள்ள மஹாத்மாக்கள் அவரது தெய்வீக இயற்கையின் பாதுகாப்பில் இருக் கின்றனர். கிருஷ்ணரை நேரடியாக வழிபடாத மக்களில் சிலர் அவரது பௌதிகத் தோற்றத்தையும், சிலர் தேவர்களையும் வழிபடுகின்றனர். தேவர்களை வழிபடுவோர் தேவர்களை அடைவர் என்றபோதிலும், அத்தகு வழிபாடு தவறானதாகும். கிருஷ்ணரைத் தூய பக்தியுடன் வழிபடுவோரை அவரே கவனித்துக் கொள்கிறார். கிருஷ்ணரை வழிபடுதல் மிகவும் எளிதானது. அனைவரையும் சமமாகக் காணும் கிருஷ்ணர் தனது...