Skip to main content

Posts

ஒரு சீரிய பக்தன் அனுபவிக்கும் துன்பமானது கர்மப் பலன் அன்று

  தத் தே (அ)னுகம்பாம் ஸு-ஸமீக்ஷமாணோ புஞ்ஜான ஏவாத்ம-க்ருதம் விபாகம் ஹிருத்-வாக்-வபுர்பிர் விததன் நமஸ் தே ஜீவேத யோ முக்தி-பதே ஸ தாய பாக் மொழிபெயர்ப்பு போற்றுதற்குரிய பகவானே! உமது அளவற்ற கருணை வேண்டி நம்பிக்கையுடன் காத்திருப்பவன், அக்காலக் கட்டத்தில் தான் செய்த முன்னையப் பாவங்களின் பலன்களைப் பொறுமையுடன் அனுபவித்துக் கொண்டும், தனது மனம், வாக்கு, காயத்தினால் உமக்கு மரியாதையுடன், தனது வணக்கங்களையும் அர்ப்பணித்துக் கொண்டிருந்தானென்றால் அவன் நிச்சயம் விடுதலை பெறுவதற்குத் தகுதியுடையனாவான். ஏனெனில் அவ்விடுதலையானது அவனுக்கு மரபு வழியாக வரும் உரிமையாகி விடுகிறது. பொருளுரை ஸ்ரீல ஸ்ரீதர சுவாமிகள் தனது விளக்க உரையில், ஒருவன் தனது தந்தையின் சொத்துக்களை அனுபவிப்பதற்கு மரபு வழியாக எவ்வாறு உரிமையுடையவனாகின்றானோ அது போல பக்தியோக நெறி முறைகளைப் பின்பற்றி கிருஷ்ண உணர்வில் இருப்பவன், முழுமுதற் கடவுளின் கருணையைப் பெறுவதற்குத் தானாகவே தகுதியுடையவனாகிறான். அதாவது அவன் கடவுள் இராஜ்ஜியத்திற்கு உயர்வு பெறுகிறான் என்று குறிப்பிடுகிறார். ஸு-ஸமீக்ஷமான என்னும் சொல் ஒரு பக்தன் தான் செய்த முன்னையப் பாவ...

தன்னையே தனது சூழ்நிலைகளின் தலைவனாக எண்ணிக் கொள்கொள்ளும் உயிர்வாழி

  உயிர்வாழிகள் எவ்வாறு ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலிற்கு மாற்றமடைகின்றனர் என்பதைப் பற்றி அறிந்துகொள்வதில் இந்தப் மிகவும் முக்கியமானதாகும். இரண்டாம் அத்தியாயத்தில், ஆடையை ஒருவன் மாற்றிக் கொள்வதுபோல, உயிர்வாழி ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலிற்கு மாற்றமடைகின்றான் என்று விளக்கப்பட்டது. ஜட வாழ்வின் மீதான அவனது பற்றுதலே இந்த உடை மாற்றத்திற்கு காரணம். இந்த பொய்யான தோற்றத்தினால் அவன் கவரப்பட்டுள்ள வரை, ஓர் உடலி லிருந்து மற்றொரு உடலிற்கு மாறுவதை அவன் தொடரத்தான் வேண்டும். ஜட இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான அவனது விருப்பத் தினால் அவன் இத்தகு விரும்பத்தகாத சூழ்நிலைகளில் வைக்கப்படு கின்றான் . பௌதிக ஆசைகளின் காரணத்தினால், ஆத்மா சில சமயம் தேவனாக, சில சமயம் மனிதனாக, சில சமயம் மிருகமாக, சில சமயம் பறவையாக, சில சமயம் புழுவாக, சில சமயம் நீர்வாழியாக, சில சமயம் புனிதமான மனிதனாக, சில சமயம் பூச்சியாகவும் பிறக்கின்றான். இது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இவ்வெல்லா நிலைகளிலும் உயிர்வாழி தன்னையே தனது சூழ்நிலைகளின் தலைவனாக எண்ணிக் கொள்கின்றான், இருப்பினும் அவன் ஜட இயற்கையின் ஆதிக்கத்திற்குக் கீழ்ப்பட்ட...

அற்பத்தனத்திற்கான விலை

முன்னொரு காலத்தில் உபபர்ஹணா என்றறியப்படும் கந்தர்வன் ஒருவர் இருந்தார். கந்தர்வர்கள் சுவர்க்க லோகத்தில் வாழும் தேவர்களில் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் மிகவும் அழகான தோற்றடயவர்களாகவும், நன்றாகப் பாடும் திறனுடையவர்களுமாகவும் இருந்தனர்.  இவர்கள் வாழும் கிரஹம் கந்தர்வ லோகம் என்றறியப்படுகிறது. உபபர்ஹணா மிகவும் அழகான தோற்றமுடையவராக, அவரது முகம் கவர்ச்சி மிக்கதாகவும், கட்டுமஸ்தான தேக அமைப்பையும் பெற்றிருந்தார். இதனால் பிற கந்தர்வர்களும் கூட இவரை மதித்தனர். இவர் மலர் மாலைகளாலும், சந்தனக் குழம்பினாலும், அழகு சாதனப்பொருட்களினாலும் மற்றும் ஆவரணங்களினாலும் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்வதில் நிபுணராகத் திகழ்ந்தார். அவர் அங்கு வாழ்ந்த பெண்களுக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார். ஒரு சமயம் சுவர்க்கலோக வாசிகள் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை போற்றித் துதிக்கும் பொருட்டு ஆன்மீக விழா ஒன்றினை ஏற்பாடு செய்தனர். எல்லா விதத்திலுமுள்ள தேவர்களையும் அதாவது கந்தர்வர்கள் மற்றும் அப்ஸரசுக்களும் அவ்விழாவில் பங்கெடுக்க அழைக்கப்பட்டிருந்தனர். உபபர்ஹணாவும் பல அழகிய பெண்கள் புடை சூழ அவ்விழாவிற்...

குழப்பத்திலிருந்து தெளிவு

சரஸ்வதி நதியின் கரையோரத்திலுள்ள தனியிடத்தில் அமர்ந்த வியாஸ தேவர் மிக ஆழ்ந்து யோசிக்கலானார். பின் அவர் தனக்குள்ளேயே  கூறிக்கொண்டார்... "நான் என்னுடைய ஆன்மீகக் கடமைகளை முறையாகப் பின்பற்றி வருகிறேன். பக்குவமான முறைகளில் வேதங்களையும், ஆன்மீக குருவையும் வணங்கி வருகிறேன். வேதத்தை நான்காகப் பிரித்துள்ளேன், எளிய மக்களும் புரிந்து பயன் பெறும் விதமாக மஹாபாரதத்தையும் எழுதியுள்ளேன். எனினும் என் மனம் முழுமையை உணரவில்லையே?"  "ஏன் என்னுடைய இதயம் திருப்தியை உணரவில்லை?..  இவ்வாறு நேர்மையான அவரது சுய பரிசோதனை மூலமாக ஸ்ரீல வியாஸ தேவர் தன்னுடைய அதிருப்திக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முனைந்தார். அவர் நினைத்தார், " பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத லீலைகள் மற்றும் பக்தி அதாவது  பகவான் கிருஷ்ணருக்குச் செய்யும் அன்புத் தொண்டு, அதுவே அனைத்து உயிர்வாழிகளின் இயல்பான நிலை. அத்தகைய தூய பக்திப்பாதையே தூய பக்தர்களையும் , பகவானையும் திருப்திப்படுத்தும்." இவையெல்லாம் என்னுடைய சரிதங்களில் போதுமான அளவு நான் விவரிக்கவில்லை.. ஒருவேளை அதுதான காரணமாக இருக்குமோ? ஸ்ரீல வியாஸ தேவர் இவ்வாறு எண்ணிக்கொண்டிருக...

பக்தி தொண்டின் மகிமை

  பகவானுக்குச் செய்யும் திவ்யமான தொண்டு பௌதிகமானதல்ல . பக்தனின் தொண்டு செய்யும் மனப்பான்மை படிப்படியாக வளர்ச்சியடைகிறதே தவிர , ஒருபோதும தளர்ச்சியடைவதில்லை . பொதுவாக முதுமையடைந்த ஒருவர் பௌதிக சேவையிலிருந்து ஒய்வுபெற அனுமதிக்கப்படுகிறார் . ஆனால் உன்னதமான பகவத் தொண்டில் ஒய்வு பெறுவதற்கு சிறிதும் இடமில்லை மாறாக , வயது முதிர முதிர தொண்டு செய்யும் மனப்பானமை அதிகரித்துக் கொண்டே போகிறது . பகவானின் உன்னதமான தொண்டில் சலிப்பே ஏற்படுவதில்லை என்பதால் , அதில் ஒய்வுபெறுவதற்கும் இடமில்லை . தேகத்தால் பௌதிக சேவை செய்து களைப்படைந்த ஒரு மனிதன் , ஒய்வு பெற அனுமதிக்கப்படுகிறான் . ஆனால் உன்னத தொண்டில் களைப்பே ஏள்படுவதில்லை . ஏனெனில் அது ஆன்மீகத் தொண்டாகும் , உடல் மட்டத்தில் உள்ளதல்ல . உடல் மட்டத்திலுள்ள செயல் வயது முதிர்ச்சியினால் படிப்படியாக நலிவடைந்துவிடுகிறது . ஆனால் ஆத்மா முதுமையடைவதேயில்லை என்பதால் , ஆன்மீகப் படித்தரத்திலுள்ள சேவைகள் களைப்பை ஏற்படுத்துவதில்லை . உத்தவர் வயது முதிர்ந்தவராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை . ஆன...