யத் - கீர்தனம் யத் - ஸ்மரணம் யத் - ஈக்ஷணம் யத் - வந்தனம் யச் - ச்ரவணம் யத் - அர்ஹணம் லோகஸ்ய ஸத்யோ விதுனோதி கல்மஷம் தஸ்மை ஸுபத்ர - ஸ்ரவஸே நமோ நம : மொழிபெயர்ப்பு சர்வ மங்களம் பொருந்திய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய பெருமைகள் , நினைவுகள் , அவரது தரிசனம் , பிரார்த்தனைகள் , அவரைப் பற்றி கேட்ட மற்றும் அவரது வழிபாடு ஆகியவை சாதகனின் பாவ விளைவுகளை எல்லாம் உடனே தூய்மை செய்துவிடக் கூடியவையாகும் . அவருக்கு எனது வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன் . பொருளுரை எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் தன்னை ஒருவன் விடுவித்துக் கொள்வதற்குரிய மிகச் சிறந்த முறை மிகப் பெரிய அதிகாரியான ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமியால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது . நினைவில் கொள்ளுதல் , ஆலயத்திற்குச் சென்று விக்கிரகத்தை தரிசித்தல் , பகவான் முன்னிலையில் பிரார்த்தனைகள் செய்தல் , மற்றும் பகவானின் புகழ் பாடப்படுவதைக் கேட்டல் ஆகியவற்றை ஸ்ரீமத் பாகவதத்திலும் , பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளவாறு , கீர்த்தனமாகவும் வேறு முறைகளிலும் நிறைவேற்ற முடியும் . இன்னிசைகளுடன...