பதம் 1 கிருஷ்ண-ப்ரஸாதேந ஸமஸ்த-ஷைல- சாம்ராஜ்யம் ஆப்நோதி ச வைரிணோ 'பி சக்ரஷ்ய ய: ப்ரப பலிம் ச ஸாக்ஷாத் கோவர்தனோ மே திஷாதம் அபிஷ்டம் பிரபு கிருஷ்ணரின் கருணையினால், மலைகள் அனைத்திற்கும் பேரரசன் என்ற பெருமை பெற்றதும், பொறாமை கொண்ட எதிரியான இந்திரனிடமிருந்தே போற்றத் தகுந்த மதிப்பு, மரியாதையும், பாராட்டும் பெற்றதுமான மேன்மை மிக்க கோவர்த்தன மலையானது கருணையுடன் எனது உன்னத விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகின்றேன். பதம் 2 ஸ்வ-ப்ரேஷ்ட-ஹஸ்தம்புஜ-ஸௌகுமார்ய ஸுகானுபுதேர் அதி-பூமி-வருத்தே: மஹேந்ர-வஜ்ரஹதிம் அபி அஜனம் கோவர்தநோ மே திஷாதம் அபிஷ்டம் கோவர்த்தன மலையானது தனது உன்னத விருப்பத்தினால் இந்த பூமியில் அவதரித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது. கிருஷ்ணரின் தாமரை திருக்கரங்களால் ஏந்தப்பட்டு மென்மையிலும் மென்மையை அடைந்ததால், இந்திரனின் கோபத்தினால் உண்டாக்கப்பட்ட, கடும் இடி, மின்னலுடன் கூடிய நாசக்கார மழையையும் கூட சிறு பூஞ்சாரல் போன்று ஏற்று புன்னகை பூத்த கோவர்த்தன மலையானது எனது உன்னத விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகின்றேன். பதம் 3 யத்ரைவ க்ருஷ்ணோ விருஷபானு-புத்ர்ய தானம் க்ரிதும் கலஹம் வித...