Skip to main content

வெவ்வேறு உலகங்களில் வெவ்வேறு விதமான உயிர்கள்

 


நவீன விஞ்ஞான யுகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்கின்றவர்கள், இப்பூமி ஒன்றில் மட்டுமே விஞ்ஞான அறிவும், புத்திசாலித் தனமும் நிறைந்த உயிர்கள் இருக்கின்றனவென்றும் பிற கோள்களில் இப்படிப்பட்ட உயிர்கள் ஏதும் இல்லை என்றும் பொதுக் கருத்துடையவர்களாக இருக்கின்றனர். வேத இலக்கியங்கள் இம்மூடக் கூற்றினை மறுக்கின்றன. வேத ஞானம் படைத்தவர்கள் வெவ்வேறு உலகங்களில் வெவ்வேறு விதமான உயிர்கள் தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள். நாகர்கள், கின்னரர்கள், சாரணர்கள், சித்தர்கள், மற்றும் அப்ஸரர்கள் என்று இருக்கின்றார்கள் என்பதை அறிவர். வேதங்கள், இந்த பௌதீக வானத்தில் மட்டுமல்லாது ஆன்மீக வானத்திலும் பல்வேறு வகையான உயிர்கள் வாழ்கின்றன என்றும் தகவல்களைக் கூறுகின்றன. இங்குள்ள உயிர்கள் எல்லாம் ஒரே ஆன்மீகத் தன்மை உடையன. முழுமுதற் கடவுளிடமுள்ள அதே குணமுடையனவாகவும் இருந்த போதிலும் ஆத்மாவிற்கு நிலம், நீர், காற்று, தீ, வானம், மனம் புத்தி மற்றும் ஆணவம் என்னும் எண்வகைப் பொருள்களினாலான தேகம் உண்டாவதால் அவை பல்வேறு உடல்களைப் பெறுகின்றன. தெய்வீக உலகில் இதுபோல் உடலுக்கும், உருவுக்கும் எந்தவித வித்தியாசமும் கிடையாது. பௌதீக உலகில் உள்ள கோள்களில் பல்வேறு விதமான குணநலன்களும் அதற்கேற்றாற்போல் பல்வேறு விதமான உடல்களும் கொண்ட உயிர்கள் இருக்கின்றன. வேதங்களின் மூலமாக அது ஆன்மீகலோகமோ பௌதீக லோகமோ ஒவ்வொரு உலகத்திலும் வெவ்வேறு அறிவுகொண்ட உயிர்கள் பல இருக்கின்றன என்று நாம் அறிய வருகிறோம். பூலோக கிரஹங்களில் பூமி ஒன்றாகும். பூமிக்கு மேலாக ஆறு உலகங்களும், கீழாக ஏழு உலகங்களும் இருக்கின்றன. ஆதலினால் இம் முழுப் பிரபஞ்சமும் சதுர் தஸப்புவனம் அதாவது பதினான்கு உலகங்கள் கொண்டது என்று அழைக்கப்படுகின்றது. இப்பௌதீக வானத்திற்கு மேல்பரவ்யோமம்எனப்படும் ஆன்மீக வானம் இருக்கின்றது. அதில்தான் ஆன்மீக உலகங்கள் இருக்கின்றன. இந்த ஆன்மீக உலகவாசிகள் முழுமுதற் கடவுளுக்கும் பல்வேறு ரஸம் அல்லது உறவு முறைகளில் பக்தித் தொண்டு செய்கின்றனர். ரஸம் என்றால் பாவம் அல்லது உறவுமுறைகளாகும். அவை, தாஸ்ய ரஸம் ஸக்ய ரஸம், வாத்ஸல்ய ரஸம், மாதுர்ய ரஸம் இவற்றிற்கெல்லாம் மேலாக பராகீய ரஸம் போன்றவையாகும். இப்பராகீய ரஸம் அல்லது பரபுருஷக்காதல் கிருஷ்ணரின் உறைவிடமான கிருஷ்ண லோகத்தில் சர்வ சாதாரணமாகக் காணப்படுவதாகும். இதுவே கோலோக பிருந்தாவனம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கேதான் பகவான் கிருஷ்ணர் நிலையாக இருந்து கொண்டு லட்சக்கணக்கான கோடிக்கணக்கான அவதாரங்களும் எடுக்கின்றார். அப்படிப்பட்ட அவதாரங்களில் ஒன்றுதான் இப்பௌதீக உலகில் ஒரு குறிப்பிடத்தக்க இடமானபிருந்தாவனதாமம்என்ற இடத்தில் அவர் எடுத்தது. அங்கேதான் அவர் ஆன்மீகவானிலுள்ள பிருந்தாவன தாமத்தில் செய்த ஆதி லீலைகளை பந்தப்பட்ட உயிர்களை மீட்டு அவற்றிற்கு விடுதலை அளித்து மீண்டும் முழுமுதற் கடவுளிடத்து திரும்பிச் செல்வதற்காக இந்த கோலோக பிருந்தாவனத்திலும் செய்கிறார்.


( ஶ்ரீமத் பாகவதம் 4.20.36 / பொருளுரை 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...