Skip to main content

Posts

நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன

  நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன ஆக்ஞா டஹல் மஹா பிரபுவின் கட்டளைப்படி நகர் சங்கீர்த்தனம் செய்தல் கீதாவளியில் பக்திவினோத டாக்குரர் 1 நதியா கோத்ருமே நித்யானந்த மஹாஜன்  பதியாச்சே நாம் ஹட்டா ஜீவேர் காரண் 2. (ஸ்ர்த்தாவான் ஜன் ஹே, ஸ்ர்த்தாவான் ஜன் ஹே) பிரபுர் ஆஞ்ஞை பாய் மாகி பேய் பிக்ஷா  போலோ க்ருஷ்ண பஜோ க்ருஷ்ண கோரோ க்ருஷ்ண சிக்ஷா 3. அபராத ஸுன்ய ஹோய்யே லோஹோ க்ருஷ்ண நாம்  க்ருஷ்ண மாதா, க்ருஷ்ண பிதா . க்ருஷ்ண தன - ப்ராண் 4.  கிருஷ்ணேர ஸம்ஸார கோரோ சாடி அனாச்சார்  ஜீவே தோயா, க்ருஷ்ண நாம் ஸர்வ தர்ம ஸார் 1.நதீயா நகரத்தின் கோத்ரும த்வீபத்தில் கருணையே வடிவான பிரபு நித்யானந்தர், வீழ்ந்த ஆத்மாக்களை விடுவிப்பதற்காக புனித நாமச் சந்தையை திறந்து வைத்துள்ளார். 2. ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! பிரபு கௌரங்கரின் கட்டளைப்படி ஓ சகோதர்களே நான் இந்த மூன்று விண்ணப்பங்களை வேண்டி யாசிக்கின்றேன். கிருஷ்ணா என்று ஜபியுங்கள்! க்ருஷ்ணரையே வழிபடுங்கள்! க்ருஷ்ணரைப் பற்றியே அனைவருக்கும் கற்றுக் கொடுங்கள்!!!! 3.வைஷ்ணவ அபராத்த்திலிருந்து எப்போதும் கவனமாக விலகியிரு...

அக்ரோத பரமானந்த நித்யானந்த ராய்

  அக்ரோத பரமானந்தா துவேஷமற்ற நித்திய ஆனந்தத்தின் இருப்பிடமே பிரபு நித்யானந்தர் -லோச்சன தாஸ் டாக்குரரின் "சைதன்ய மங்களா "விலிருந்து  1 அக்ரோத பரமானந்த நித்யானந்த ராய்  அபிமான சூன்ய நிதாய் நகரே பேடாய் 2 அதம பதித ஜீவேர் தவாரே த்வாரே கியா  ஹரீ நாம் மஹா மந்த்ர தேனோ பிலாய்யா 3 ஜாரே தேகே தாரே கோஹே தந்தே தருண தோரி  ஆமாரே கினியா லோஹோ பஜோ கௌர ஹரீ ஓ பாய்ரே தாதேர பாயே தோரி மதாய் ரே தோர் பாயே போலி போலோரே ஏக் பார் ஹரீ ஹரி  பாய் மாதாய் ரே தோர் பாயே போலி  போலோ ரே ஏக் பார் கௌர ஹரி  பாய் மாதாய் ரே தோர் பாயே போலி 4 ஓ துய் போலோ ரே ஏக் பார் கௌர ஹரி  பாவோ பரி தோரே ஜாபி ஓ துய் போலோ ரே ஏக் பார் கௌர ஹரி பாவோ பரி ஜாபி தோரே ஓ துய் போலோ ரே ஏக் பார் கௌர ஹரி  பாவோ பரி தோரே ஜாபி 4.  எதோ போலி நித்யானந்த பூமே கடி ஜாய்  சோனார பர்வத ஜேனோ துலாதே லோடாய் துலாதே லோடாய் துலாதே லோடாய் சோனார பர்வத ஜேனோ துலாதே லோடாய் சோனார பர்வத ஜேனோ துலாதே லோடாய்  சோனார பர்வத ஜேனோ கௌர ஹரி போலே  சோனார பர்வத ஜேனோ துலாதே லோடாய்  கௌர ஹரி ஹரி போலே துலாதே லோடாய் 5. ஹேனோ அவதாரே...

நிதாய் குண மணி

   நிதாய் குண மணி வழங்கியவர்: லோசன தாஸ தாகூர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பதம் 1 🍁🍁🍁🍁 நிதாய் குணமணி ஆமார நிதாய் குண மணி  ஆனியா ப்ரேமேர வன்யா பா ஸாயில அவனீ மொழிபெயர்ப்பு  நித்யானந்த பிரபு எல்லா நற்குணங்களின் மணியாவார். எனது நித்யானந்த பிரபு எல்லா நற்குணங்களின் மணியாவார், அவர் பரவச பிரேமையின் வெள்ளத்தினைக் கொண்டு வந்து முழு உலகையும் அதில் மூழ்கடித்துள்ளார். பதம் 2 🍁🍁🍁🍁 ப்ரேமேர வன்யா ல யியா நிதாய் ஆய்லா கௌட, தேஷே டுபில பகத-கண தீன ஹீன பாஸே   மொழிபெயர்ப்பு ஸ்ரீ சைதன்யருடைய கட்டளையின்படி ஜகந்நாத புரியிலிருந்து வங்காளத்திற்குத் திரும்புகையில், நித்யானந்த பிரபு அந்த பிரேம வெள்ளத்தினைக் கொண்டு வந்ததன் மூலமாக, பக்த கணங்கள் அனைவரையும் அதில் மூழ்கடித்தார். வீழ்ச்சியுற்ற அபக்தர்கள் அதில் மூழ்காமல் அந்த பரவசக் கடலில் மிதந்து கொண்டிருந்தனர் பதம் 3 🍁🍁🍁🍁 தீன ஹீன பதித பாமர நாஹி பாசே ப்ரஹ்மார துர்லப ப்ரேம ஸபாகாரே ஜாசே மொழிபெயர்ப்பு பிரம்மதேவரால்கூட அடைவதற்கு கடினமான அந்த உயர்ந்த பிரேமையினை அதனை விரும்பாத அதற்குத் தகுதியில்லாத வீழ்ச்சியுற்ற மோசமான ஆத்மாக்களுக்கும்கூட நித்யானந்த பிரப...

கயா

  இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அழகான ஃபல்கு நதிக்கரையில் அமைந்திருப்பதே கயா என்னும் புனித க்ஷேத்திரமாகும். இதிகாசங்களான இராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் இந்த கயா க்ஷேத்திரம் நீத்தார் கடன் தீர்க்க நேர்த்தியான தீர்த்தம் என்று போற்றப்படுகிறது. சைதன்ய மஹாபிரபு, அத்வைத ஆச்சாரியர், இராமசந்திர பகவான் முதலிய பலரும் உலக மக்களின் தர்ம நெறி வாழ்விற்கு முன்னுதாரணமாக, கயாவிற்கு வருகை புரிந்து தமது மூதாதையர்களுக்கு பிண்டம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. பிண்ட தானத்திற்கு மிகச்சிறந்த இடமான இந்த கயாவின் மஹாத்மியத்தைச் சற்று காண்போம். கயாசுரன் அசுர குலத்தில் தோன்றிய கயாசுரன் கடுமையான தவத்தை மேற்கொண்டபோது தேவலோகமே நடுங்கியது. இதைக் கண்ட தேவர்கள் பிரம்மாவை நாடினர், பிரம்மதேவர் தேவர்களுடன் சிவபெருமானை நாடினார், சிவபெருமானோ அனைவருடன் இணைந்து விஷ்ணுவை நாடினார். தேவர்களின் பயத்தைப் போக்க பகவான் விஷ்ணு கயாசுரனிடம், வேண்டிய வரத்தைக் கேள்,” என நேரடியாகக் கூறினார். இதைக் கேட்டு தேவர்கள் நடுங்கிப் போனார்கள். இருப்பினும், கயாசுரன் உடனடியாக பகவான் விஷ்ணுவிடம், தேவர்கள், ரிஷிகள், துறவிகள் முதலியோரைக் காட்ட...

பிரயாகை

இன்றைய இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் , கங்கை , யமுனை , சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்ற (ஒன்று சேர்கின்ற) அழகான கரையில் அமைந்திருப்பதே பிரயாகை என்னும் திருத்தலம். பிரம்மதேவர் தனது முதல் பத்து யாகங்களை மேற்கொள்வதற்காக இந்த நதிக்கரையைத் தேர்ந்தெடுத்தார் என்பதால் , இவ்விடம் பிரயாகை என பெயர் பெற்றது. முகலாயரின் ஆட்சிக் காலத்தில் , சங்கமத்தின் கரையில் மன்னர் அக்பர் ஒரு பெரிய கோட்டையை எழுப்பி இலாகாபாத் (அலகாபாத்) என பெயரிட்டதால் , அலகாபாத் என்ற பெயரிலும் இவ்விடம் அறியப்படுகிறது. விஷ்ணுவிற்கு மிகவும் பிரியமான இடம் என்பதால் , தீர்த்த ராஜன் (திருத்தலங்களின் மன்னன்) என்றும் பிரயாகை புகழப்படுகின்றது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக , பிரயாகை என்றவுடன் பலரின் மனதில் எழுவது இலட்சக்கணக்கான மக்கள் பங்கு பெறும் கும்பமேளா நிகழ்ச்சியாகும் .   கும்பமேளாவின் வரலாறு   தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது , கூர்மர் , தன்வந்திரி , மோஹினி என்று பகவானின் மூன்று அவதாரங்கள் அதில் பங்கெடுத்து கொண்டனர். அதனை ஒரு திகைப்பூட்டும் லீலை என்று சாஸ்திரம் வர்ணிக்கின்றது. தன்வ...