ஸ்ரீ முகுந்த தத்தர் சட்டகிராம என்னும் மாவட்டத்தைச் சார்ந்த சன்ஹரா என்னும் கிராமத்தில் பிறந்தவர், அந்த கிராமம் பாடியா எனப்படும் காவல்நிலையத்தின் எல்லைக்குள் உள்ளது. இந்த கிராமம் புண்டரீக வித்யாநிதியின் இல்லத்திலிருந்து பத்து க்ரோஷ,ம், அல்லது சுமார் இருபது மைல் தொலைவில் அமைந்துள்ளது. கௌஆர-க ணோத் தே,ஷ₂-தீ,பிகா (140) கூறுகிறது: வ்ரஜே ஸ்தி, தௌ காயகௌ யௌ மது கண்ட,-மது வ்ரதௌ முகுந்த - வாஸுதே வௌ தௌ தத்தௌ கௌ₂ராங்க -கா₂யகௌ "மதுகண்டர், மதுவிரதர் என்ற பெயர்களுடன் இரு அற்புதமான பாடகர்கள் விரஜத்தில் இருந்தனர். அவர்கள் சைதன்ய லீலையில் முகுந்தராகவும் வாஸுதேவ தத்தராகவும் தோன்றினர், அவர்கள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சமுதாயத்தில் பாடகர்களாக செயல்பட்டனர்." சைதன்ய மஹாபிரபு மாணவராக இருந்தபோது, முகுந்த தத்தர் அவருடைய பள்ளித் தோழராவார், அவர்கள் தர்க்க வாதங்களில் அடிக்கடி ஈடுபடுவதுண்டு. சில நேரங்களில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு முகுந்த தத்தருடன் தர்க்கத்தின் தந்திரங்களை உபயோகித்து சண்டையிடுவார். இது சைதன்ய பாகவதத்தின் ஆதி காண்டத்தில் அத்தியாயங்கள் பதினொன்றிலும் பன்னிரண்டிலும் விளக்கப்பட்டுள்ளது. சைதன்ய மஹாப...