Skip to main content

Posts

ஶ்ரீ ராதா கிருஷ்ணரின் ஊஞ்சல் திருவிழா லீலை

  ஶ்ரீ ராதா கிருஷ்ணரின் ஊஞ்சல் திருவிழா லீலை 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் மாபெரும் பக்தரான ஶ்ரீ நாரத முனிவர், விரஜ லீலைகளை தரிசிக்கவும் , பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் திவ்யமான லீலைகளை கண்டு ஆனந்தமடையவும் விருந்தாவனம் செல்வார் . அப்படி செல்லும் போது ஸ்ரீமதி ராதாராணியை தொடர்ந்து தரிசிப்பது வழக்கம் .இதை கவனித்து வந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீமதி ராதாரணியிடம், நாரதர் கலகம் செய்வதில் கைதேர்ந்தவர் ஆகையால், அவரிடம் கவனமாக பழக வேண்டும் என்று எச்சரித்தார். ஏனெனில், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், நாரதர் முனிவர் தனக்கும் ராதாரணிக்கும் இடையே ஏதேனும் கலகம் செய்துவிடுவார் என்று நினைத்தார். ஶ்ரீமதி ராதாராணி, தன்னக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள அன்பு பிணைப்பில் யாரும் கலகம் ஏற்படுத்த முடியாது என்று ஆணித்தனமாக நினைத்தார். அவரது ஆழ்ந்த பிரேமபக்தியினால் கிருஷ்ணரின் எச்சரிக்கையை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், "நான் கூறும் வார்த்தையின் தீவிரத்தை உணராமல் இருக்கிறாய்; நாரத முனிவரால் பிரச்சினை அனுபவிக்கும்போதுதான் உனக்கு நான் சொல்வது விளங்கும் ", என்று மீண...

ஸ்ரீ முக்த சரிதம்

  ஸ்ரீ முக்த சரிதம் கோபியர்கள் கிருஷ்ணருக்கு முத்துக்கள் வழங்குவதற்கு மறுத்தல். ஒருநாள் துவாரகையில், அரசி சத்யபாமா கிருஷ்ணரிடம், “ நீங்கள் விருந்தாவனத்தின் தோட்டத்தில் முத்துக்களை விளைவித்த சுவாரசியமான கதையைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். அதனை எனக்கு கூறுவீர்களா?” என்றாள். கிருஷ்ணர் கூறியதாவது : கார்த்திகை மாதத்தில் தீபாவளி நாளன்று, ராதாராணியும் கோபியர்களும் மால்யஹார குண்டத்தில் ஒன்றுகூடினர். இதனை கிருஷ்ணருடைய கிளியான விசக்ஷ்ணா கிருஷ்ணரிடம் தெரிவித்தது. உடனே மால்யஹார குண்டத்திற்கு வந்த கிருஷ்ணர் அங்கு ராதாராணியும் அவளுடைய சகிகளும் (தோழிகளும்) அழகழகான முத்துக்களால் ஆரங்கள் செய்து கொண்டிருப்பதை கண்டார். கிருஷ்ணர் ராதை மற்றும் கோபியர்களிடம், நீங்கள் செய்து கொண்டிருக்கும் முத்து ஆபரணங்களில் சிலவற்றை தந்தால், நான் எனது பசுக்களான ஹரிணி மற்றும் ஹம்சியை அலங்கரிப்பேன் என்றார். அதற்கு கோபியர்கள் மறுத்துவிட்டனர். இருப்பினும் கிருஷ்ணர் கோபியர்களிடம், “தயவுசெய்து எனது பசுக்களுக்கு முத்துக்கள் கொடுங்கள்” என்று வேண்டினார். லலித சகி பையிலிருந்த முத்துக்களில் ஒரு உடைந்த முத்தை எடுத்துக் கொடுத்து, “இத...