Skip to main content

ஶ்ரீ ராதா கிருஷ்ணரின் ஊஞ்சல் திருவிழா லீலை



 ஶ்ரீ ராதா கிருஷ்ணரின் ஊஞ்சல் திருவிழா லீலை


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் மாபெரும் பக்தரான ஶ்ரீ நாரத முனிவர், விரஜ லீலைகளை தரிசிக்கவும் , பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் திவ்யமான லீலைகளை கண்டு ஆனந்தமடையவும் விருந்தாவனம் செல்வார் . அப்படி செல்லும் போது ஸ்ரீமதி ராதாராணியை தொடர்ந்து தரிசிப்பது வழக்கம் .இதை கவனித்து வந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீமதி ராதாரணியிடம், நாரதர் கலகம் செய்வதில் கைதேர்ந்தவர் ஆகையால், அவரிடம் கவனமாக பழக வேண்டும் என்று எச்சரித்தார். ஏனெனில், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், நாரதர் முனிவர் தனக்கும் ராதாரணிக்கும் இடையே ஏதேனும் கலகம் செய்துவிடுவார் என்று நினைத்தார்.

ஶ்ரீமதி ராதாராணி, தன்னக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள அன்பு பிணைப்பில் யாரும் கலகம் ஏற்படுத்த முடியாது என்று ஆணித்தனமாக நினைத்தார். அவரது ஆழ்ந்த பிரேமபக்தியினால் கிருஷ்ணரின் எச்சரிக்கையை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், "நான் கூறும் வார்த்தையின் தீவிரத்தை உணராமல் இருக்கிறாய்; நாரத முனிவரால் பிரச்சினை அனுபவிக்கும்போதுதான் உனக்கு நான் சொல்வது விளங்கும் ", என்று மீண்டும் ஶ்ரீமதி ராதாராணியை எச்சரித்தார்.

ஒருமுறை, வ்ரஜ பூமிக்கு வந்த நாரத முனிவர், தன வீணையை மிக அழகாக வாசித்தார். இதை கேட்டு மயங்கிய பகவான் கிருஷ்ணர், நாரத முனிவருக்கு வேண்டிய வரமளிக்க தயாராக இருந்தார்.

நாரதர், "எனக்கு இப்போது எந்த வரமும் தேவையில்லை. தேவைப்படும்போது நானே கேட்டுக்கொள்கிறேன்", என்று கூறினார். கிருஷ்ணரும் சம்மதித்தார்.

ஒரு நாள், அணைத்து சகிகளும் ஒன்று சேர்ந்து, லலிதா குண்டத்திற்கு அருகில், கிருஷ்ணருக்கும் ராதாரணிக்கும் ஒரு ஊஞ்சல் திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதற்காக ஒரு ஊஞ்சலை தயார் செய்து அதனை அலங்காரம் செய்து, அணைத்து சகிகளும் பகவான் கிருஷ்ணரும் தயாராக இருந்தனர். எனினும் ஸ்ரீமதி ராதாராணி அங்கு வரவில்லை. அவரில்லாமல் விழா தொடங்க முடியாது.எனவே அனைவரும் அவருக்காக காத்திருந்தினர். அப்போது அங்கு வந்த நாரத முனிவர், நடக்கவிருக்கும் விழா பற்றி அறிந்துகொண்டார். பகவான் கிருஷ்ணரிடம், "அன்றொருநாள் தாங்கள் எனக்கு வரமளிப்பதாக கூறினீர்களே. அந்த வரத்தை நான் இப்போது கேட்க போகிறேன் அதை மறுக்காமல் தரவேண்டும்", என்று கூறினார்.பகவான் கிருஷ்ணரும் ஒப்புக்கொண்டார்.

நாரதர், "நீங்களும் லலிதா சகியும் ஒன்றாக ஊஞ்சல் ஆடுவதை பார்க்க நான் ஆசை கொள்கிறேன்", என்று கூறினார். இதை கேட்ட பகவான் கிருஷ்ணர், "இது மிகவும் எளிது. ஊஞ்சல் தயாராக உள்ளது. ராதாராணியும் இன்னும் வரவில்லை. ஆகையால் நானும் லலிதாவும் ஊஞ்சல் ஆடுகிறோம்" என்று கூறினார். இதை கேட்ட நாரத முனிவர் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் லலிதா சகி வருத்தமடைந்தார். ஏனெனில் அவர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணருடன் , அவரது பிரிய தோழி ஶ்ரீமதி ராதாராணியுன் ஊஞ்சலில் ஆடுவதையே விரும்பினார்.

லலித சகியின் தயக்கத்தை உணர்ந்த கிருஷ்ணர், லலிதா சகியின் கரத்தை பிடித்து தன் அருகில் அமர வைத்து ஊஞ்சலில் ஆட துவங்கினார். இதை கண்ட நாரத முனிவர் மற்றும் சகிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். நாரத முனிவர் உடனடியாக அங்கிருந்து மறைந்தார்.

லலிதகுண்டத்திலிருந்து ஸ்ரீமதி ராதாராணியின் இருப்பிடத்திற்கு சென்ற நாரதர், ஶ்ரீமதி ராதாராணியின் அறைக்கு சென்று அவரிடம், "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?", என்று வினவினார். ராதாராணி மிகவும் மகிழ்ச்சியாக, "நான் கிருஷ்ணருடனான ஊஞ்சல் திருவிழாவிற்கு என்னை அலங்கரித்துக்கொண்டிருக்கிறேன்", என்று பதிலளித்தார். நாரதர், சிரித்துக்கொண்டே, "பாவம் நீங்கள். இங்கே அலங்காரம் செய்துகொண்டிருக்கிறீர்கள். ஆனால் அங்கே என்ன நடக்கிறது தெரியுமா? நீங்கள் இல்லாமல், லலிதா சகியுடன் ஊஞ்சல் திருவிழா நடந்துகொண்டிருக்கிறது", என்று கூறினார். ராதாராணியால் இதை நம்ப முடியவில்லை.

நாரதர், "வேண்டுமென்றால், நீங்களே லலிதா குண்டத்திற்கு சென்று உறுதி செய்து கொள்ளுங்கள்", என்று கூறினார். உடனடியாக ஶ்ரீமதி ராதாராணி லலிதா குண்டத்திற்கு விரைந்தார். தூரத்திலிருந்து பார்த்த அவருக்கு, கிருஷ்ணரும் லலிதா சகியும் ஊஞ்சல் ஆடுவது தெரிந்தது. மிகுந்த கோபத்துடன் அங்கிருந்து சென்றார்.

வெகு நேரமாகியும் ராதாராணி வராததால் கிருஷ்ணர் சந்தேகமடைந்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். நாரத முனிவரை காணவில்லை. நாரதர் தான் ஏதோ கலகம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணிய கிருஷ்ணர், ராதாராணியை அழைத்து வர தானே சென்றார். பல இடங்களில் தேடிய பிறகு, ராதாராணி ஒரு பாறையின் மேல் அமர்ந்து மிகவும் கோபமாக, அழுதுகொண்டிருந்ததை பார்த்தார் கிருஷ்ணர்.

கிருஷ்ணர் ராதாராணியின் அருகில் சென்று அவரை சமாதான படுத்த முயற்சித்தார். ஆனால் ராதாராணி எதையும் கேட்க தயாராக இல்லை. மிகவும் கோபமாக " இனி நான் உங்களுக்கு தேவையில்லை, ஊஞ்சலாட இன்று முதல் உங்களுக்கு லலிதா கிடைத்துவிட்டாளே , அவளுடன் ஊஞ்சல் ஆடுவதால் உங்களுக்கு மகிழ்ச்சியெனில் நீங்கள் லலிதாவுடனே மகிழ்ச்சியாக இருங்கள். நான் உங்கள் விருப்பத்திற்கு எதிராக ஒன்றும் சொல்லபோவதில்லை ", என்று வருத்ததுடன் கூறினார்.

கிருஷ்ணர், "நான் லலிதாவுடன் ஊஞ்சல் ஆடியது உனக்கு எப்படி தெரியும்?", என்று கேட்டார். "நாரதர் கூறினார்", என்று பதிலளித்தார் ராதாராணி. கிருஷ்ணருக்கு இப்போது புரிந்தது, நாரதரின் கலகம்.

ராதாரணியிடம், தான் அளித்த வரத்தை பற்றியும், நாரதரின் வேண்டுகோள் பற்றியும் விளக்கிய கிருஷ்ணர், எவ்வாறு நாரதர் தங்களுக்குள் கலகம் ஏற்படுத்தியுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார். லலிதாவிற்கு தன்னுடன் ஆட விருப்பமில்லை என்பதையும் தான் தான் நாரதரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக லலிதாவை வற்புறுத்தினேன் என்பதையும் விளக்கினார் கிருஷ்ணர்.

இந்த விளக்கங்களை கேட்ட ராதாராணி சமாதானமடைந்தார். பின்னர் இருவரும் மகிழ்ச்சியாக ஊஞ்சல் ஆடுவதற்காக லலிதா குண்டம் நோக்கி நடந்தனர்.

கிருஷ்ணரின் விருப்பத்தை பூர்த்தி செய்த நாரத முனிவர்.

🍁🍁🍁🍁🍁🍁


பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கும் ஶ்ரீமதி ராதாராணிக்கும் பிரேம ரசத்தை பெருக்கவே , பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் விருபத்தை பூர்த்தி செய்ய நாரத முனிவர் இது போன்ற ஒரு நாடகத்தை நடத்தி அனைவரையும் ஆனந்த படித்தினார்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...