Skip to main content

Posts

கடவுள் இல்லாத மதமா ?

  கடவுள் இல்லாத மதமா ? பொதுவாகவே தற்காலத்தில் மதத் தலைவர்களாக காட்டிக் கொள்பவர்கள் கடவுளைப் பற்றிய கருத்தற்றவர்களே. இருந்தும் அவர்கள் மதத்தைப் பற்றி உபதேசிக்கிறார்கள். அத்தகைய மதத்தினால் பயன்தான் என்ன ? மக்கள் தவறாகவே வழிகாட்டப்படுகிறார்கள். கடவுளின் கட்டளையே உண்மையான மதமாகும்; தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-பரணீதம். கடவுளைப் பற்றிய எண்ணமேயில்லாதபோது மதமென்ற கேள்விக்கிடமேது ? இப்பாசாங்கு எவ்வளவு நாள் நீடிக்கும்? நிச்சயமாக அழிந்தே தீரும். கடவுளைப் பற்றிய அறியாமையே தற்போதைய சீரழிவுக்கு காரணம் சட்டமென்பது அரங்கத்தின் கட்டளையென்பது போல, மதம் கடவுளின் கட்டளையாகும். ஆனால் சமுதாயத்தில் அரசாங்கமே இல்லாதபொழுது அரசாங்கத்தின் சட்டத்திற்கு இடமேது ? ஒவ்வொருவரும் சொந்த சட்டங்களையே உற்பத்தி செய்வார்கள். அதுவே இன்றைய மதங்களின் நிலையாகும். கடவுளே இல்லை என்பதால், கடவுளின் கட்டளைகளை பின்பற்றுபவர்களுமில்லை.. ஆனால், கிருஷ்ண பக்தர்களாகிய நாங்கள் கடவுள் பற்றிய தெளிவான சிந்தனையுடையவர்கள். இதோ பரமபுருஷரான கடவுள் கிருஷ்ணர். அவர் கட்டளையிடுகிறார். அவற்றை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகிறோம். ஆகையால் இது தெளிவான மாதமாகிறது...

ஜீவாத்மாவின் நான்கு வகையான குறைபாடுகள்

 

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...

நாம மகிமை

 
 

ஶ்ரீ ராம லிலா ஸ்ரவணம்

  ஶ்ரீ ராம லிலா ஸ்ரவணம் பகவான் ஸ்ரீ ராமர்: பரம புருஷ பகவான் ஸ்ரீ ராமராகத் தோன்றி தமது தூய பக்தரும், அயோத்தியின் அரசருமான தசரத மகாராஜனை தமது தந்தையாக ஏற்றுக் கொண்டார். ஸ்ரீ ராமர் தமது பூரண அம்சங்களுடன் அவதரித்தார். அவரது அம்சங்கள் அனைவரும் அவரது இளைய சகோதரர்களாகத் தோன்றினர். வழக்கம் போல் தர்மத்தைக் காத்து அதர்மத்தை அழிப்பதற்காக, திரேதா யுகத்தின் சித்திரை மாதத்தில், வளர்பிறையின் ஒன்பதாம் நாளன்று பகவான் தோன்றினார். அவர் வாலிபராக இருந்தபொழுது மாமுனிவரான விஸ்வாமித்திரருக்கு உதவும் பொருட்டு சுபாஹு எனும் அரக்கனைக் கொன்றதுடன் முனிவர்களின் அன்றாட கடமைகளுக்கு இடையூறு செய்து வந்த அரக்கியையும் தாக்கினார். பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் ஒத்துழைத்து பொதுமக்களின் நன்மைக்காக செயற்பட வேண்டும். பிராமண முனிவர்கள் பக்குவமான அறிவின் மூலம் மக்களுக்கு ஞானம் புகட்ட முயல்கின்றனர். அத்தகைய முனிவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது க்ஷத்திரியர்களின் கடமையாகும். “ப்ரஹ்மண்ய-தர்மம்” எனப்படும் மனித வர்க்கத்தின் மிகவுயர்ந்த பண்பாட்டைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் ஏற்ற சீரிய அரசராக பகவான் ஸ்ரீ இராமச்சந்திரர்...

பகவான் ஜகந்நாதரின் அசாதாரணமான தோற்றத்தின் இரகசியம்

அருளியவர் :- உயர் திரு பங்கஜாங்கிரி தாஸ் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஜகந்நாதரின் இந்த அசாதாரணமான தோற்றத்தின் இரகசிய காரணம் என்ன என்பது சிக்கி மகித்தி என்பவர் எழுதிய மஹாபாவா பிரகாஷா என்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்பீராவில் (ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பூரியில் வசித்த இடம்) ஸ்வரூப் தாமோதரும், ராமாநந்தாராயும் மகாபிரபுவிடம் ஜகந்நாதர் பலதேவர் மற்றும் தேவி சுபத்ராவின் அசாதாரணமான உருவத்தை பற்றி வினவியதற்கு பகவான் சைத்தன்யர் கீழ்கண்டவாறு விவரித்தார். ஒருமுறை பலராமரின் தாயாகிய ரோகிணி தேவி துவாரகைக்கு வருகை தந்தபொழுது பகவான் கிருஷ்ணரின் ராணிகள் அவரை சூழ்ந்து கொண்டார்கள். மேலும் கிருஷ்ணர் பிருந்தாவனத்தில் திருமணத்திற்கு முன்பு நடத்திய திவ்ய லீலைகளை பற்றி கூறுமாறு கேட்டுக்கொண்டனர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் "தூங்கும் போது சில சமயம் பேசுவதை கேட்கிறேன். அவரது இனிய குரலில் அவரது நண்பர்கள் பெயராகிய ஸ்ரீதாமா, சுபாலா மற்றும் பசுக்களின் பெயர்களை அழைக்கிறார். சில சமயம் அவர் "ஓ லலிதா, விசாகா, ஓ ஸ்ரீ ராதே என்று அழைக்கிறார். மற்றொரு சமயம் அம்மா எனக்கு புதிய வெண்ணெயை ஊட்டி வ...