Skip to main content

ஶ்ரீ ராம லிலா ஸ்ரவணம்


 ஶ்ரீ ராம லிலா ஸ்ரவணம்




பகவான் ஸ்ரீ ராமர்:

பரம புருஷ பகவான் ஸ்ரீ ராமராகத் தோன்றி தமது தூய பக்தரும், அயோத்தியின் அரசருமான தசரத மகாராஜனை தமது தந்தையாக ஏற்றுக் கொண்டார். ஸ்ரீ ராமர் தமது பூரண அம்சங்களுடன் அவதரித்தார். அவரது அம்சங்கள் அனைவரும் அவரது இளைய சகோதரர்களாகத் தோன்றினர். வழக்கம் போல் தர்மத்தைக் காத்து அதர்மத்தை அழிப்பதற்காக, திரேதா யுகத்தின் சித்திரை மாதத்தில், வளர்பிறையின் ஒன்பதாம் நாளன்று பகவான் தோன்றினார். அவர் வாலிபராக இருந்தபொழுது மாமுனிவரான விஸ்வாமித்திரருக்கு உதவும் பொருட்டு சுபாஹு எனும் அரக்கனைக் கொன்றதுடன் முனிவர்களின் அன்றாட கடமைகளுக்கு இடையூறு செய்து வந்த அரக்கியையும் தாக்கினார். பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் ஒத்துழைத்து பொதுமக்களின் நன்மைக்காக செயற்பட வேண்டும். பிராமண முனிவர்கள் பக்குவமான அறிவின் மூலம் மக்களுக்கு ஞானம் புகட்ட முயல்கின்றனர். அத்தகைய முனிவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது க்ஷத்திரியர்களின் கடமையாகும். “ப்ரஹ்மண்ய-தர்மம்” எனப்படும் மனித வர்க்கத்தின் மிகவுயர்ந்த பண்பாட்டைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் ஏற்ற சீரிய அரசராக பகவான் ஸ்ரீ இராமச்சந்திரர் இருந்தார். குறிப்பாக பகவான் பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் பாதுகாப்பு அளித்து உலகின் செழிப்பை மேலும் வளப்படுத்துகிறார். விஸ்வாமித்திரரின் வாயிலாக அசுரர்களை வெல்லக்கூடிய சக்திமிக்க ஆயுதங்களை அவர் நிர்வாகப் பொறுப்பிலுள்ள தேவர்களுக்கு அளித்தார். ஜனக மகாராஜனின் தனுர் யாகத்தில் பங்கேற்ற அவர், வெல்ல முடியாத சிவபெருமானின் வில்லை உடைத்து, ஜனகரின் புதல்வியான சீதாதேவியை மணந்தார்.

திருமணத்திற்குப் பிறகு அவரது தந்தையான தசரத மகாராஜனின் உத்தரவுப்படி அவர் பதினான்கு ஆண்டுகால வனவாசத்தை ஏற்றார். தேவர்களின் நிர்வாகத்திற்கு உதவுவதற்காக அவர் பதினான்காயிரம் அசுரர்களைக் கொன்றார். மேலும் அசுரர்களின் சதியினால், அவரது மனைவியான சீதாதேவி இராவணனால் கடத்திச் செல்லப்பட்டாள். சுக்ரீவனின் சகோதரனான வாலியைக் கொல்ல சுக்ரீவனுக்கு உதவிய பகவான் சுக்ரீவனை தமது நண்பராக்கி கொண்டார். பகவான் ஸ்ரீ ராமரின் உதவியால், சுக்ரீவன் வானர ராஜனானார். சீதையை அபகரித்துச் சென்ற இராவணனின் இராஜ்ஜியமான இலங்காபுரிக்குச் செல்ல இந்தியப் பெருங்கடலில் பாறைகளாலான ஒரு மிதக்கும் பாலத்தை அவர் நிர்மாணித்தார். பிறகு இராவணன் அவரால் கொல்லப்பட்டு, இராவணனின் சகோதரரான விபீஷணர் இலங்கையின் அரியாசனத்தில் அமர்த்தப்பட்டார். அசுரனான இராவணனின் சகோதரர்களில் விபீஷணரும் ஒருவராவார். ஆனால் பகவான் ஸ்ரீ ராமர் அவரை சீரஞ்சிவியாக்கினார். பதினான்கு ஆண்டுகள் கழிந்தபின், இலங்கையின் விவகாரங்களை முடித்துக் கொண்ட பகவான், புஷ்பக விமானத்தில் அவரது இராஜ்ஜியமான அயோத்தித் திரும்பினார். மதுராவை ஆண்டுவந்த லவனாசுரனைக் கொல்லும்படி தமது சகோதரரான சத்ருக்னருக்கு அவர் உத்தரவிட்டார். அவ்வாறே அசுரனும் கொல்லப்பட்டான். பத்து அஸ்வமேத யாகங்களை அவர் நிறைவேற்றினார். பிறகு சரயு நதியில் குளித்துக் கொண்டிருக்கும்பொழுது அவர் மறைந்து போனார். மிகச்சிறந்த இதிகாசமாகிய இராமாயணம், உலகில் ஸ்ரீ ராமர் நிகழ்த்திய வீரச் செயல்களைப் பற்றிய சரித்திரமாகும். மேலும் அதிகாரப்பூர்வமான இராமாயணம் மகாகவி வால்மீகி முனிவரால் எழுதப்பட்டதாகும்.

(ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 1.12.19/ பொருளுரை / )

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க


ஆன்மீக கதைகளை படிக்க 👇



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...