பாம்பின் பிடியிலிருந்து தனது தந்தை நந்த மகாராஜரை பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் விடுவித்தல் 🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒரு சமயம் நந்த மகாராஜாவும் பிற ஆயர்களும் சிவபெருமானை வழிபடுவதற்காகத் தமது குடும்பத்தினருடன் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து அம்பிகா வனம் என்னும் காட்டிற்குச் சென்றனர். அவர்கள் அனைவரும் சரஸ்வதி நதியில் நீராடி பகவான் விஷ்ணுவின் ஒரு வடிவமான பகவான் சதாசிவனை வழிபட்ட பின்னர் அன்றைய இரவுப் பொழுதை அக்காட்டிலேயே கழிக்க முடிவு செய்தனர். அவர்கள் அனைவரும் துயில் கொண்டிருந்த பொழுது மிகுந்த பசியுடைய ஒரு பாம்பு அங்கு வந்து நந்த மகாராஜாவை விழுங்கத் தொடங்கியது. ஆபத்தில் சிக்கிக் கொண்ட நந்தமகாராஜா “ஓ, கிருஷ்ணர்! என் மைந்தனே, சரணடைந்த இந்த ஆத்மாவைக் காப்பாயாக” என்று கூக்குரலிட்டுக் கதறினார். நந்தமகாராஜாவின் அலறல் சத்தம் கேட்டு விழித்தெழுந்த ஆயர்கள் அங்கு கிடந்த மரக் கொம்புகளைக் கொண்டு அப்பாம்பை அடிக்கத் தொடங்கினர். ஆனால் அப்பாம்போ நந்த மகாராஜாவை விடுவதாக இல்லை. பின்னர் பகவான் கிருஷ்ணர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அப்பாம்பினைத் தனது தாமரைத் திருவடிகளினால் தீண்டினார். உடனே அங்கிருந்த பாம்பு மறைந்து அந்த இடத்...