Skip to main content

Posts

சாந்திபுரம் பண்டிகை

  சாந்திபுரம் பண்டிகை  வழங்கியவர் - திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் 🍁🍁🍁🍁🍁🍁🍁 சாந்திபுரம், அத்வைத ஆச்சாரியரின் விசேஷ வசிப்பிடம் 🍁🍁🍁🍁🍁🍁🍁 இன்றைய இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்திலுள்ள மாயாபுரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பதே சாந்திபுரம் என்னும் திருத்தலம். சைதன்ய மஹாபிரபு இவ்வுலகில் தோன்றுவதற்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்த அத்வைத ஆச்சாரியர் இவ்விடத்தில் வசித்ததால், இத்திருத்தலம் கௌடீய வைஷ்ணவர்களுக்கு மிகவும் புனிதம் வாய்ந்ததாகும். அத்வைத ஆச்சாரியர் மஹாவிஷ்ணுவிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்பதால், இத்திருத்தலம் வைகுண்ட அடையாளத்தைக் கொண்டுள்ளது. அத்வைதரின் தோற்றம் 🍁🍁🍁🍁🍁🍁🍁 அத்வைத ஆச்சாரியர் 1434ஆம் ஆண்டில், தற்போதைய வங்கதேசத்தின் சில்லட் நகரத்திற்கு அருகிலுள்ள நவகிராமத்தில், ஸ்ரீ குபேர பண்டிதருக்கும் ஸ்ரீமதி நாபதேவிக்கும் தெய்வீக மகனாகத் தோன்றினார். இந்திய எல்லையிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள அத்வைத ஆச்சாரியரின் பிறப்பிடத்தில் சிறு கோயில் எழுப்பப்பட்டுள்ளது, அது தற்போது இஸ்கான் இயக்கத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது, குறுகிய காலத்தில் அத்வைத ஆச்சாரியர் கங்கைக் கர...

பகவான் சைதன்யர்

 

ஆமலகீ ஏகாதசி

 ஆமலகீ ஏகாதசி    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பங்குனி மாத (பிப்ரவரி/ மார்ச்) வளர்ப்பிறையில் தோன்றக்கூடிய அமலகி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் மன்ததா மன்னருக்கு வசிஸ்ட முனிவருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.  ஒருமுறை மன்ததா மன்னர், வசிஸ்ட முனிவரிடம் கேட்டார், ஓ! அதிர்ஷ்டசாலியே, தாங்கள் என்னிடம் மகிழ்ச்சியும் கருணையும் கொண்டவராயின். தயவு செய்து, அனைத்து மங்களங்களும் அடையக்கூடிய ஒரு விரதத்தைப் பற்றி எனக்கு விளக்குங்கள்.  வசிஸ்ட முனிவர் பதிலளித்தார்: ஓ, மன்னா, ஒருவருக்கு அனைத்து மங்களங்களையும் கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த விரதத்தின் பெருமைகளையும், வரலாற்றையும் கூறுகிறேன்.  ஓ, மன்னா, இந்த விரதத்தின் பெயர் அமலகி ஏகாதசி. இந்த ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளை அழித்து, முக்தியை கொடுப்பதுடன் ஆயிரம் பசுக்களை தானமளிக்கும் பலனையும் கொடுக்கிறது.  பழங்காலத்தில் வைடிசா என்ற ஒரு நகரம் இருந்தது. செல்வ செழிப்பு மிக்க பிராமணர்கள், க்ஷத்ரியர்கள், வைஸ்யர்கள் மற்றும் சூத்திரர்கள் அந்நகரில் வசித்து வந்தனர்.  ஓ, மன்னா இந்த அழகிய நகரில் நாத்திகரோ...

பகவான் சைதன்யர்

 

பகவான் சைதன்யர்

 

பகவான் சைதன்யர்

 

பகவான் சைதன்யர்