Skip to main content

Posts

தேவேந்திரனின் பிரார்த்தனை

  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 10 / அத்தியாயம் 27 / பதம் 4-13 ************************************************************************************************************** பதம் 4 இந்த்ர உவாச விஸூத்த - ஸத்தவம் தவ தாம ஸாந்தம் தபோ - மயம் த்வஸ்த - ரஜஸ் - தமஸ்கம் மாயா - யோ ( அ ) யம் குண - ஸம்ப்ரவாஹோ ந வித்யதே தே ( அ ) க்ரஹணானுபந்த : மொழிபெயர்ப்பு தேவேந்திரன் கூறினான் : சத்துவ குணத்தின் வெளிப்பாடான உமது உன்னத வடிவம் எந்தவிதமான மாற்றமில்லாததும் , ஞான ஒளியுடையதும் , ரஜோ , தமோ குணங்கள் அற்றதுமாகும் . மாயை மற்றும் அறியாமையினை அடிப்படையாகக் கொண்ட ஜட இயற்கையின் ஆற்றல் மிக்கப் பிரவாகம் உம்மிடம் வெளிப்படுவதில்லை .   பதம் 5 குதோ நு தத் - தேதவ ஈஸ தத் - க்ருதா லோபாதயோ யே ( அ ) புத - லிங்க - பாவா : ததாபி தண்டம் பகவான் பிபர்தி தர்மஸ்ய குப்த்யை கல - நிக்ரஹாய மொழிபெயர்ப்பு பிறகு எவ்வாறு உம்மிடம் காமம் , குரோதம் , லோபம் என்னம் சாதாரண மனிதனின் அடையாளங்கள் இருக்க முடியும் ? இவை ஒருவனின் முந்தைய பௌதீக வாழ்வின் ஈடுப...