Skip to main content

Posts

கிருஷ்ணருடைய உன்னத நிலையை முழுமையாக அறிந்தவர் மட்டுமே. எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் முழுமையாக விடுபட முடியும்.

  கிருஷ்ணருடைய உன்னத நிலையை முழுமையாக அறிந்தவர் மட்டுமே. எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் முழுமையாக விடுபட முடியும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 யோ மாம் அஜம் அனாதிம் ச வேத்தி லோக-மஹேஷ்வரம் அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வ–பாபை: ப்ரமுச்யதே மொழிபெயர்ப்பு ************************ எவனொருவன், என்னைப் பிறப்பற்றவனாகவும், ஆரம்பம் அற்றவனாகவும், எல்லா உலகங்களின் இறைவனாகவும் அறிகின்றானோ, மனிதர்களிடையே குழப்பமற்றவனாக அவன் மட்டுமே, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறான். பொருளுரை *************** ஏழாம் அத்தியாயத்தில்(7.3) கூறப்பட்டுள்ளபடி, மனுஷ்யாணாம் ஸஹஸரேஷூ கஷ்சித் யததி ஸித்தயே-ஆன்மீக உணர்வின் தளத்திற்குத் தம்மை உயர்த்திக் கொள்ள முயல்பவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. ஆன்ம உணர்வினைப் பற்றிய சற்றும் அறிவற்ற கோடிக்கணக்கான சாதாரண மனிதர்களைவிட அவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள். ஆனால் தமது ஆன்மீக நிலையைப் புரிந்து கொள்ள உண்மையிலேயே முயற்சி செய்யும் அத்தகு சிறந்த மனிதர்களில், கிருஷ்ணரே பரம புருஷ பகவான், அவரே எல்லாவற்றின் உரிமையாளர், அவர் பிறப்பற்றவர் என்னும்அறிவு நிலையை வந்தடைபவனே ஆன்மீக உணர்வை அடைந்தவர்களில் மிகவும் வெற...

கீதை காட்டும் பாதை

 

கீதை காட்டும் பாதை

 

வருத்தினி ஏகாதசி

  வருத்தினி ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஏப்ரல் / மே மாதங்களில் தேய்பிறையில் தோன்றக்கூடிய வருத்தினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரக்கும் இடையிலான உரையாடலின் விவரிக்கப்பட்டுள்ளது.  ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கூறினார். ஓ! வாசுதேவா, எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். தயவுசெய்து (ஏப்ரல்/மே) மாதங்களின் தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் பெருமைகளை பற்றியும் எனக்கு விளக்குங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார் என தருமை மன்னா, இந்த ஏகாதசியின் பெயர் வருத்தினி. இது ஒருவருக்கு இந்த வாழ்க்கையிலும் அதற்கு பிறகும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் ஒரு ஜீவன் தன் பாவ விளைவுகளை குறைத்துக்கொண்டு, நிரந்தமான ஆனந்தத்தை அடைந்து மிகுந்த பாக்கியசாலி ஆகிறான். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் ஒரு துர்பாக்கியசாலியான மனைவியும் பாக்கியசாலி ஆகிறாள். ஒருவன் இப்பிறவியிலும் அதற்கு பின்னரும் ஆனந்தத்தையும் நல்ல அதிர்ஷ்டமும் அடைகிறான். அவர்கள் அனைத்து பாவ விளைவுகளும் நீங்கப்பெற்று ப...

ஶ்ரீ விருந்தாவன தாஸ தாக்கூர்

 ஶ்ரீ விருந்தாவன தாஸ தாக்கூர் மறைந்த தினம்  வியாழக்கிழமை 06-05-2021  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஶ்ரீ சைதன்ய பாகவதத்தை இயற்றிய ஸ்ரீல விருந்தாவன தாஸ தாக்கூரர் மோதாத்ரும த்வீபத்தில் பிறந்தார். வேதவியாசரின் அவதாரமாகிய இவர் ஸ்ரீ நித்தியானந்த பிரபுவின் சீடராவார். ஸ்ரீவாச பண்டிதரின் தங்கை மகளான நாராயணீ தேவியே இவருடைய தாயாவார். இவர் நான்கு வயது இருந்தபோது ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் கைகளிலிருந்து அவருடைய உத்திஸ்டையை பெற்றார். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் குழந்தையாக இருந்தபோது அம்பிகா என்ற பெண் தன் பாலை அவருக்கு உண்பித்தார். கிலிம்பிகா என்று அம்பிகாவிற்கு ஒரு இளைய சகோதரி இருந்தார். கிலிம்பிகாவே நாராயணி என்பதை கௌர-கனோதேச-தீபிகாவில் கூறப்பட்டுள்ளது. 🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண! ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 Telegram செயலி 🍁🍁🍁🍁🍁🍁 Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇 https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI ஆன்மீக கதைகளை படிக்க 👇 https://t...

யமதர்மராஜ

  யமதர்ம மஹாராஜ் வழங்கியவர் - சுத்த பக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவத் கீதை பத்தாம் அத்தியாயத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்,  "நாகங்களில் நான் பல தலையுடைய அனந்தன்,  நீர்வாழினங்களில் நான் வருண தேவன்.  முன்னோர்களில் நான் அர்யமா.  நீதிபதிகளில் நான் மரணத்தின் அதிபதியான யமன்.  பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் இந்திரன், வருணன், யமதர்மன்  மற்றும் குபேரன் போன்ற தேவர்கள் இந்த பிரபஞ்சத்தின் நான்கு முக்கிய திசைகளின் மேல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் ஸ்ரீமத் பாகவதத்தில் யமராஜர் "பிதாக்களின் ராஜா" அதாவது "பித்ருக்களின் அரசன்" (பித்ருக்கள் - மூதாதையர்)  என்று அழைக்கப்படுகிறார்.   யமராஜர் வசிக்குமிடம் சாமிய மணி என்று அழைக்கப்படுகிறது இவர் சூரியதேவன் விவஸ்வானின் மகனும்,  யமுனை நதியின் சகோதரனும் மற்றும்  யுதிஷ்டிர  மகாராஜாவின் தந்தையும் ஆவார். பகவான் ஹரியின்பால் பக்தி இல்லாத மக்களை அவரை நோக்கி திசைதிருப்பி பக்தியில் முன்னேற்றுவது யமராஜரின் முக்கிய கடமையாகும். உயிர் வழிகளின்  மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையை...

ஹரி நாமத்தின் மூலம் பொதீக சிறையில் இருந்து விடுதலை

  ஹரி நாமத்தின் மூலம் பொதீக சிறையில் இருந்து விடுதலை *********************** கிருஷ்ணரிடம் உதவி பெற்று கருவறைச் சிறையிலிருந்து நாம் விடுதலை பெற்றோம். ஆனாலும் உண்மையில் அது விடுதலையா? நாம் தற்போது சுதந்திரமாக இருக்கின்றோமா? நிச்சயமாக இல்லை. நாம் கிருஷ்ணரை மறக்கின்றபோது உடனடியாக முக்குணங்களால் ஆட்கொள்ளப்படுகிறோம். இந்த ஜடவுலகிலுள்ள ஒவ்வொன்றும் முக்குணங்களோடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. உண்மையில், இவ்வுலகம், து:காலயம் அஷாஷ்வதம், அதாவது, துக்கத்தின் இருப்பிடமும் நிரந்தரமற்றதுமாகும். இத்தகு உலகில் சுதந்திரமாக அனுபவிக்க நாம் எவ்வளவு போராடினாலும், அது வீண் முயற்சியே. கானல் நீரைக் கண்டு மயங்கும் மான்போல், இன்பம் இருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தைக் கண்டு நாம் அதைத் தேடித் தேடியே வாழ்வை முடிக்க நேரிட்டு விடுகிறது. ****************************** தைவீ ஹ்யேஷா குண-மயீ மம மாயா துரத்யயா மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே “ஜட இயற்கையின் முக்குணங் களாலான எனது இந்த மாயா சக்தி வெல்லுவதற்கரியது. ஆயினும் என்னிடம் சரணடைந்தோர் இதனை எளிதில் கடக்கலாம்.” (பகவத் கீதை 7.14) ******************************...