Skip to main content

கிருஷ்ணருடைய உன்னத நிலையை முழுமையாக அறிந்தவர் மட்டுமே. எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் முழுமையாக விடுபட முடியும்.


 கிருஷ்ணருடைய உன்னத நிலையை முழுமையாக அறிந்தவர் மட்டுமே. எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் முழுமையாக விடுபட முடியும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁



யோ மாம் அஜம் அனாதிம் ச

வேத்தி லோக-மஹேஷ்வரம்

அஸம்மூட: ஸ மர்த்யேஷு

ஸர்வ–பாபை: ப்ரமுச்யதே


மொழிபெயர்ப்பு

************************


எவனொருவன், என்னைப் பிறப்பற்றவனாகவும், ஆரம்பம் அற்றவனாகவும், எல்லா உலகங்களின் இறைவனாகவும் அறிகின்றானோ, மனிதர்களிடையே குழப்பமற்றவனாக அவன் மட்டுமே, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறான்.


பொருளுரை

***************


ஏழாம் அத்தியாயத்தில்(7.3) கூறப்பட்டுள்ளபடி, மனுஷ்யாணாம் ஸஹஸரேஷூ கஷ்சித் யததி ஸித்தயே-ஆன்மீக உணர்வின் தளத்திற்குத் தம்மை உயர்த்திக் கொள்ள முயல்பவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. ஆன்ம உணர்வினைப் பற்றிய சற்றும் அறிவற்ற கோடிக்கணக்கான சாதாரண மனிதர்களைவிட அவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள். ஆனால் தமது ஆன்மீக நிலையைப் புரிந்து கொள்ள உண்மையிலேயே முயற்சி செய்யும் அத்தகு சிறந்த மனிதர்களில், கிருஷ்ணரே பரம புருஷ பகவான், அவரே எல்லாவற்றின் உரிமையாளர், அவர் பிறப்பற்றவர் என்னும்அறிவு நிலையை வந்தடைபவனே ஆன்மீக உணர்வை அடைந்தவர்களில் மிகவும் வெற்றி பெற்றவனாவான். கிருஷ்ணருடைய உன்னத நிலையை முழுமையாக அறிந்த அந்த நிலையில் மட்டுமே. ஒருவன் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் முழுமையாக விடுபட முடியும்.


"பிறப்பற்ற" எனும் பொருள் தரக்கூடிய அஜ எனும் சொல் பகவானைக குறிக்க இங்கே உபயோகிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாம் அத்தியாயத்தில் அஜ எனும் சொல்லினால் விளக்கப்படும் உயிர்வாழிகளிடமிருந்து அவர் வேறுபட்டவர். ஜடப் பற்றுதலினால் பிறந்து இறந்து கொண்டிருக்கும் உயிர்வாழிகளிலிருந்து, பகவான் வேறுபட்டவர். கட்டுண்ட ஆத்மாக்களின் உடல்கள் மாறுதலுக்கு உட்பட்டவை, ஆனால் அவருடைய உடலோ மாறுதலற்றது. அவர் இந்த ஜடவுலகிற்கு வரும்போதுகூட அதே பிறப்பற்றவராகத்தான் வருகின்றார். எனவே தான், பகவான் தனது உயர்ந்த சக்தியான அந்தரங்க சக்தியினால் எப்போதும் தோன்றுகிறார் என்றும் தாழ்ந்த சக்தியான ஜட சக்தியினால் அல்ல என்றும் நான்காம் அத்தியாயத்தில் கூறப்பட்டது.


இந்த பதத்திலுள்ள வேத்தி லோக மஹேஷ்வரம் எனும் சொற்கள், பிரபஞ்சத்திலுள்ள எல்லா லோகங்களுக்கும் பரம உரிமையாளர் பகவான் கிருஷ்ணரே என்பதை ஒருவன் அறிய வேண்டும் என்று குறிப்பிடுகின்றன. படைப்பிற்கு முன்பிலிருந்தே இருக்கும் அவர், தனது படைப்பிலிருந்து வேறுபட்டவர். தேவர்கள் அனைவரும் இந்த ஜடவுலகில் படைக்கப்பட்டவர்களே, ஆனால் கிருஷ்ணரைப் பொறுத்தவரையில், அவர் படைக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது, எனவே பிரம்மா, சிவன் போன்ற மாபெரும் தேவர்களிடமிருந்தும் கிருஷ்ணர் வேறுபட்டவர், மேலும் பிரம்மா, சிவன் உட்பட எல்லா தேவர்களையும் படைத்தவர் அவரே என்பதால், எல்லா உலகங்களின் பரம ஆளுநர் அவரே.


எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் படைக்கப்பட்ட எல்லாவற்றிலிருந்தும் வேறு பட்டவர், அவரை இவ்வாறு உள்ளபடி அறிபவன் எல்லா பாவ விளைவிகளிலிருந்தும் உடனடியாக விடுபடுகிறான். பரம புருஷரைப் பற்றிய அறிவினை அடைவதற்கு, ஒருவன் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும விடுபட்டிருக்க வேண்டும். பகவத் கீதையில் கூறியிருப்பது போல, பக்தித் தொண்டால் மட்டுமே அவரைப் புரிந்து கொள்ள முடியும், வேறு எந்த வழியாலும் அல்ல.


கிருஷ்ணரை சாதாரண மனிதராக அறிய ஒருவன் முயலக் கூடாது. முட்டாள்கள் மட்டுமே அவரை சாதாரண மனிதராக எண்ணுகின்றனர் என்று முன்பே கூறப்பட்டது. ஆதே கருத்து இங்கு வேறுவிதமாக கூறப்பட்டுள்ளது. முட்டாளாக இல்லாத மனிதன், அதாவது பகவானுடைய உண்மையான நிலையைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு புத்தியுடையவன், எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் எப்போதும் விடுபட்டவனாவான்.


கிருஷ்ணர் தேவகியன் மைந்தனாக அறியப்படும் பட்சத்தில், அவர் பிறப்பற்றவராவது எங்ஙனம்? இதுவும் ஸ்ரீமத் பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது அவர் தேவகி, வாசுதேவரின் முன்பு தோன்றியபோது, சாதாரணக் குழந்தையைப் போலப் பிறக்கவில்லை. முதலில் தனது மூல ரூபத்தல் தோன்றி, பின்னால் அவர் தன்னை சாதாரணக் குழந்தையைப் போல மாற்றிக் கொண்டார்.


கிருஷ்ணருடைய வழிகாட்டுதலின்கீழ் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் தெய்வீகமானவை. அச்செயல்கள், ஜட விளைவுகளால் களங்கமடைவது இல்லை.ஜட செயல்கள் மங்களகரானவை, அமங்களமானவை என்று பிரிக்கப்படுகின்றன. ஆனால் இவ்வுலகிலுள்ள அத்தகு கருத்து ஏறக்குறை மனக் கற்பனையே ஏனெனில் இந்த ஜடவுலகில் மங்களகரமானவை என்று எதுவும் கிடையாது. ஜட இயற்கை முழுவதும் அமங்களமானவையே என்பதால், அனைத்துமே அமங்களமானதுதான். சிலவற்றை மங்களகரமானதாகக் கருதுவது நமது கற்பனையே. உண்மையான மங்களம் என்பது, பூரண பக்தியுடனும் சேவை மனப்பான்மையுடனும் கிருஷ்ண உயர்வில் செய்யப்படும் செயல்களைப் பொருத்தாகும். எனவே, நமது செயல்கள் மங்களகரமானதாக அமைய வேண்டும் என்றால்,நாம் பரம புருஷருடைய வழிகாட்டதலின் கீழ் செயல்பட வேண்டும். அத்தகு வழிகாட்டுதல் ஸ்ரீமத் பாகவதம். பகவத்கீதை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நூலிலிருந்தும், நேர்மையான ஆன்மீக குருவிடமிருந்தும் பெறலாம். பரம புருஷரின் பிரதிநிதி என்பதால், ஆன்மீககுருவின் வழிகாட்டுதல் பகவானின் நேரடி வழிகாட்டுதலேயாகும். ஆன்மீக குரு , சாதுக்கள், சாஸ்திரங்கள் ஆகிய மூன்றின் வழிகாட்டுதலும் ஒன்றே. இந்த மூன்று மூலங்களிடையே எவ்வித முரண்பாடும் கிடையாது. இத்தகு வழிகாட்டுதலின் கீழ் செய்யப்படும் எல்லா செயல்களும், இந்த ஜடவுலகின் பாவ புண்ணியத்திலிருந்து விடுபட்டவையாகும். செயல்களைச் செய்வதில் பக்தனிடமுள்ள திவ்யமான மனப்பான்மை உண்மையான துறவாகும். இதுவே சந்நியாசம். பகவத் கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் முதலாவது பதத்தில் கூறப்பட்டுள்ளதைப் போல, எவனொருவன் பரம புருஷரால் ஆணையிடப்பட்டதன் காரணத்தால் தனது கடமையில் ஈடுபட்டுள்ளானோ, எவனொருவன் தனது செயல்களின் பலன்களில் தஞ்சமடைவதில்லையோ (அனாஷ் ரித: கர்ம-பலம்), அவனே உண்மையான துறவியாவான். பரம புருஷரின் வழிகாட்டுதலின்கீழ் செயல்படுபவனே, உண்மையான சந்நியாசியும் யோகியும் ஆவான். வெறுமே சந்நியாச உடையைத் தாங்கிக் கொண்டு போலி யோகியாக இருப்பவன் அல்ல.


பகவத் கீதை உண்மையுருவில் /அத்தியாயம் பத்து / பதம் - 3

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...