ஸ்ரீ வக்ரேஷ்வர பண்டிதர் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மிகவும் பிரியமான சேவகர் ஆவார், கௌர-கணோத்,தேஷ தீபிகா வில், வக்ரேஷ்வர பண்டிதர் பகவான் நாராயணரிலிருந்து வரும் (வாசுதேவர், சங்கர்சனர், அனிருத்தர், மற்றும் பிரதியும்னர்) நான்கு விரிவாக்கங்களில் ஒன்றான அனிருதரின் அவதாரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வக்ரேஷ்வர பண்டிதரின் சீடர் கோபால குரு கோஸ்வாமியும் , கோபால குரு கோஸ்வாமியின் சீடரான தியான் சந்திரரும் அவர்கள் எழுதிய புத்தகங்களில் வக்ரேஷ்வர பண்டிதர், ஸ்ரீமதி ராதரானியின் நெருங்கிய தோழிகளான அஷ்ட-சகிகளில் ஒருவரான துங்கவித்யா-சகியின் அவதாரம் என்று கூறுகிறார். இந்த துங்கவித்யா சகி மிக சிறந்த பாடகரும் நேர்தியான நடனக் கலைஞருமாவார். வக்ரேஷ்வர பண்டிதர் நதியா மாவட்டம், திரிவேணிக்கு அருகிலுள்ள குப்தபரா என்னும் கிராமத்தில் பிறந்தார். அனுதினமும் ஸ்ரீவாச பண்டிதரின் வீட்டில் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு சங்கீர்த்தன நிகழ்ச்சிகள் ,மற்றும் நாட்டிய நாடகங்கள் நடைபெறும். அதில் பங்கு கொண்டு நடித்தபோது, வக்ரேஷ்வர பண்டிதர் தலைமை நடனக் கலைஞர்களில் ஒருவராக இருந்தார், மேலும் அவர் தொடர்ந்து எழுபத்திரண்டு...