Skip to main content

Posts

ஶ்ரீ ஜெகன்நாத ரதயாத்திரை

 

ஶ்ரீ ஜெகன்நாத ரதயாத்திரை

 

பிள்ளை பருவத்தில் ஸ்ரீல பிரபுபாதர் கொண்டாடிய ஸ்ரீ ஜெகந்நாத ரதயாத்திரை

  'ஸ்ரீல பிரபுபாதா' என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்கள் இஸ்கான் இயக்கத்தை நிறுவியவர் ஆவார். 1896-ல் நம் பாரத தேசத்தின் கல்கத்தாவில் பிறந்தவர். இவரது தாய் தந்தையர் இவருக்கு இட்ட பெயர் 'அபய்சரண்தே '. அதாவது கிருஷ்ணரை சரணடைந்தவர் என்று பொருள். பெயருக்கேற்றார் போல் சிறுவயது முதலே, இவரது தந்தை கௌர்மோகன் கிருஷ்ண பக்தியுடன் இவரை வளர்த்தார். பல பல கிருஷ்ண பக்தியை ஊக்கவிக்கும் கதைகளை கேட்டு வளர்ந்த அபயின் மனதை  கவர்ந்த விஷயம் வருடா வருடம் கல்கத்தாவில் நடைபெறும் ஸ்ரீஜகந்நாதரின் ரதயாத்திரை உத்ஸவம்.  ராதா கோவிந்தா கோவிலில் நடைபெறும் ரதயாத்திரைதான் கல்கத்தாவிலேயே பெரிய ரத யாத்திரையாகத் திகழ்ந்தது. இந்த ரதயாத்திரையில் கிருஷ்ணர் பலராமர் சுபத்ரா ஆகியோர் மூன்று தனித்தனி ரதங்களில் பவனி வந்தனர். ரதங்கள் ஹாரிசன் ரோடிலிருந்து கிளம்பி சிறிது தூரம் பயணம் செய்து விட்டு திரும்பி வந்து விடும். ரத யாத்திரையன்று ராதா கோவிந்தா கோயில் நிர்வாகிகள் ஏராளமாக பிரசாதம் செய்து ஜனங்களுக்கு விநியோகம் செய்வார்கள். ரதயாத்திரை என்பது ஆண்டுதோறும் இந்தியா...

யோகினி ஏகாதசி

ஆனி மாத தேய்பிறையில் (ஜூன் /ஜூலை) தோன்றக்கூடிய யோகினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார், ஓ! முழுமுதற் கடவுளே! ஓ! மதுசூதனா நான் நிர்ஜல ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்டுள்ளேன். இப்பொழுது ஆனி மாத (ஜூன்/ஜூலை) தேய்ப்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி கேட்க விரும்புகிறேன். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னா! ஆனி மாத தேய்பிறையில் (ஜூன்/ஜூலை) தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி நான் விளக்குகிறேன். இந்த ஏகாதசியின் பெயர் யோகினி. எல்லா கடுமையான பாவ விளைவுகளையும் அழித்து ஒருவரை ஜட இருப்பிலிருந்து விடுவிக்கிறது. ஓ! மன்னர்களில் சிறந்தோனே! இந்த உண்மையை விளக்க புராணத்தில் உள்ள ஒரு கதையைக் கூறுகிறேன். அழகாபுரியின் மன்னனான குபேரன். பகவான் சிவபெருமானின் தீவிர பக்தன், அவரிடம் யக்ஷ வம்சத்தை சேர்ந்த தோட்டக்காரன் இருந்தான். அவன் பெயர் ஹேமா. அவன் மனைவியின் பெயர் விசாலாக்ஷி மிக அழகானவர். ஹேமா அவனிடம் மிக்க பற்று கொண்டிருந்தான். ஹேமா தினந்தோறும் மானஸ சரோவ...

முரண்பாடான சம்பவங்களும் யுதிஷ்டிரரின் விளக்கமும்

அரசர் யுதிஷ்டிரரின் ஆட்சியின் போது, நாட்டு மக்களின் பிரச்சனைகளை பீமன் தீர்த்து வைத்தார். அதனால், எவருக்கேனும் கேள்விகளோ, பிரச்சனைகளோ இருந்தால், அவரிடம் மட்டுமே உதவி நாடி வந்தனர். ஒரு நாள், விசித்திரமான சம்பவம் ஒன்றை கவனித்ததாக ஒரு மனிதன் கூறினான். அவன் வீட்டு வேலி மற்றொருவனின் பகுதியில் நகர்ந்திருப்பதாகவும், அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் கூறினான். சாதாரணமாக, அரக்கர்களின் தொல்லைகளால் அவதிப்பட்ட மக்களை காப்பாற்றுவது பீமனுக்கு சகஜமாக இருந்தது; ஆனால், இதைப் போன்ற விஷயங்களைக் கண்டு பீமனுக்கு வியப்பாக இருந்ததால், அவனை யுதிஷ்டிரரிடம் செல்லும் படியாக அவர் கூறினார். அதே தினத்தில், இன்னொரு விசித்திரமான சம்பவமும் நடந்தது. வேறொருவன் தன் கதையை இவ்வாறு கூறினான் – அவனிடம் ஒரு பானை நிறைய தண்ணீர் இருந்தது. அதை முதலில் சிறிய பானைகளில் நிரப்பிய பிறகு, மறுபடியும் அச்சிறிய பானைகளிலிருந்து பெரிய பானைக்குள் நிரப்பிய போது, பாதி அளவு தண்ணீர் மட்டுமே இருந்தது. இதற்கும் பதில் ஒன்றுமே தெரியாமல் தவித்த பீமன், அம்மனிதனையும் யுதிஷ்டிரரிடம் சென்று கேட்குமாறு அனுப்பினார். கூடிய விரைவில், மூன்றாவதாக ஒ...

கலியுக அவதாரம் பகவான் ஸ்ரீ ஜெகந்நாதர்

 

கலியுக அவதாரம் பகவான் ஸ்ரீ ஜெகந்நாதர்