Skip to main content

Posts

கீதை காட்டும் பாதை

 

கீதை காட்டும் பாதை

 

கடவுள் இருக்கின்றாரா?

வழங்கியவர்: ஜெய கோபிநாத தாஸ் *************************** கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்னும் கேள்வி பலரின் மனதில் அவ்வப்போது எழக்கூடிய ஒன்றாகும். கடவுள் இருக்கின்றார் என்று கூறும் ஆத்திகர்களுக்கும், கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்களுக்கும் இடையில் உலகெங்கிலும் அவ்வப்போது வாதங்கள் நடைபெறுகின்றன. அவ்வாதங்களின் இறுதியில், கடவுள் இருக்கின்றார் என்பதே பெரும்பாலும் முடிவு செய்யப்படுகின்றது. எண்ணிலடங்காத அத்தகு வாதங்களின் ஒரு சிறு பகுதி, பகவத் தரிசனத்தின் வாசகர்களுக்காக இங்கு வழங்கப்பட்டுள்ளது. கடவுள் இல்லை என்பதைக் காட்டிலும் கடவுள் இருக்கின்றார் என்பதற்கே சாட்சிகள் அதிகமாக உள்ளன. அதை நிரூபிப்பதற்கான சில தகவல்கள்: * இவ்வுலகில் எல்லா தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேவைக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை, தேவைப்பட்டு இல்லாமல் இருப்பதும் ஏதுவும் இல்லை. உதாரணமாக, தாகத்தைத் தணிப்பதற்குத் தண்ணீர் இருக்கின்றது, பலதரப்பட்ட உயிரினங்களின் பசியைத் தணிப்பதற்குப் பலதரப்பட்ட உணவு வகைகள் உள்ளன. இவற்றைக் கூர்ந்து கவனித்தால், இவற்றையெல்லாம் முறையாக நிர்வகிப்பவர் ஒருவர் இருப்பதை நிச்சயம் உணரலாம். * ஓர...

கடவுளை அறிவது எப்படி?

  வழங்கியவர்: ஜெய கோபிநாத தாஸ் ************************** அறிவைப் பெறுவதற்கு பொதுவாக மூன்று முக்கிய வழிகள் உள்ளன. (1) பிரத்யக்ஷ பிரமாணம்–புலன்களைக் கொண்டு நேரடியாக அடையப்படும் அறிவு (2) அனுமான பிரமாணம்–முந்தைய தகவல்களைக் கொண்டு யூகத்தின் மூலம் பெறப்படும் அறிவு (3) சப்த பிரமாணம்–அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடமிருந்து பெறப்படும் அறிவு கடவுளைப் பற்றி அறிந்துகொள்வதற்கு பிரத்யக்ஷ பிரமாணமும் அனுமான பிரமாணமும் பயன்தராதவை. சப்த பிரமாணத்தினால் மட்டுமே இறைவனை அறிய இயலும். பிரத்யக்ஷ பிரமாணம் ************************** நேரடியாகப் புலன்களால் அறிவைப் பெறக்கூடிய வழிமுறை பிரத்யக்ஷ பிரமாணம் எனப்படும். இதில் சில பிரச்சனைகள் உள்ளன. நமது புலன்கள் எல்லைக்குட்பட்டவை. நமது கண்களால் எல்லாவற்றையும் காண இயலாது. அவற்றின் பார்வை அளவு 400 முதல் 700 மில்லிமைக்ரான். நமது காதுகள் 20 முதல் 20,000 ஹெர்ட்ஸ்க்கு இடைப்பட்ட ஒலியலைகளை மட்டுமே கேட்கும் திறன் கொண்டவை. மேலும், நமது புலன்கள் மாயையின் வயப்படுபவை. அதாவது ஒன்றை மற்றொன்றாக அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவை. இவை நமக்கு முழுமையான ஞானத்தைத் தராது. எனவே, இறைவனை அடைவதற்கான...

விக்ரஹ வழிபாடு

  மரம் கல் அல்லது வேறு பொருட்களிலிருந்து பகவானின் ரூபம் செதுக்கப்படும் போது அதில் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் வீற்றுள்ளார் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் யதார்த்தமாக யோசித்தால் கூட எல்லா பௌதிக மூலக்கூறுகளும் பகவானுடைய சக்தியின் விரிவுகளே என்பதை புரிந்துகொள்ள முடியும் பரம புருஷ பகவானின் சக்தியானது அவரது தனிப்பட்ட உடலிலிருந்து வேறுபட்டதல்ல என்பதால் பகவான் அவரது சக்தியில் எப்பொழுதும் விற்றுள்ளார் தமது பக்தனின் தீவிரமான விருப்பத்தின் அடிப்படையில் அவர் தம்மை வெளிப்படுத்துகிறார் பகவான் மிக உயர்ந்த சக்திகளை கொண்டுள்ளார் என்பதால் அவர் தம்மை தமது சக்திகளின் மூலமாக வெளிப்படுத்த இயலும் என்பது நியாயமானதாகும். விக்கிரக வழிபாடு அல்லது சாளக்ராம வழிபாடு என்பது சிலையை வழிபடுவது அன்று. தூய பக்தனின் இல்லத்திலுள்ள பகவானின் விக்ரஹத்தினால் அந்த தெய்வீகமான மூல புருஷர் எவ்வாறு செயல்படுவாரோ அதே போன்று செயல்பட முடியும். (பொருளுரை / ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்/ ஆதி லீலை 14.9) 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ...

ஸ்ரீ அபராத சோதணா.

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஜனார்தனா யத் பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் தத் அஸ்து மே ஓ கடவுளே ! ஓ ஜனார்தனரே! நான் முறையான பக்தி இல்லாமல், முறையான மந்திரங்கள் இல்லாமல், முறையான விதிமுறைகளை அனுஷ்டிக்காமல் செய்யும் சிறிய பூஜையையும் ஏற்று அதனை முழுமை அடையச் செய்வீராக யத் தத்தம் பக்தி மாத்ரேன பத்ரம் புஷ்பம் பலம் ஜலம் ஆவேதிதம் நிவேத்யான் து தத் க்ருஹானானு கம்பயா நான் பக்தியோடு எதை அர்பணித்தாலும் – இலையோ, பூவோ, நீரோ, பழமோ - தையை கூர்ந்து அதை தங்கள் காரணமற்ற கருணையால் ஏற்று கொள்ள வேண்டும். விதி ஹீனம் மந்த்ர ஹீனம் யத் கின்சிட் உபபாதிதம் க்ரியா மந்த்ர விஹீனம் வா தத் சர்வம் க்ஷந்தும் அர்ஹஸி முறையான மந்திரங்கள் இல்லாமலும் முறையான விதிமுறைகளை பின்பற்றாமலும் நான் உங்களை வணங்கி இருந்தால் தையை கூர்ந்து தாங்கள் என்னை மன்னித்தருள வேண்டும். அஞ்ஞானாத் அதவா ஞானாத் அசுபம் யன் மயா க்ருதம் க்ஷ்ந்தும் அர்ஹஸி தத் சர்வம் தாஸ்ஏனைவ க்ரிஹான மம் ஸ்திதி சேவா கதிர் யாத்ரா ஸ்ம்ரிதிஷ் சிந்த ஸ்துதிர் வச பூயாத் சர்வாத்மனா விஷ்ணோ மைதீயம் த்வயி சேஸ்திதம் நான் எனது அறியாமையினாலோ அல்லது தெரியாமலோ ஏதேனும் அமங்கலமான செ...

பகவத் கீதைக்காக ஒரு குடும்பம்

  உபாக்யானே உபதேசம் (  அருளியவர் :-  ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி ) மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் பகவத் கீதைக்காக ஒரு குடும்பம்  ஒரு முறை, ஒரு ஆன்மீக குரு தன்னுடைய சந்நியாச சீடனுக்கு பகவத் கீதையை கொடுத்து, அதை தினமும் இடைவிடாமல் படிக்குமாறு அறிவுறுத்தினார். குருவின் கட்டளையை ஏற்ற சந்நியாச சீடன், விந்திய மழையின் ஒரு குகையில் அமர்ந்து, பகவத் கீதையை தினமும் படிக்க ஆரம்பித்தார்.  அந்த குகையில் இருந்த ஒரு சிறிய எலி, பகவத் கீதையை கொஞ்சம் கொஞ்சமாக கொறித்து தின்ன ஆரம்பித்தது. எலியுடைய இந்த சேட்டையை பார்த்த அந்த சீடர், அருகிலிருந்த கிராமத்திலிருந்து ஒரு பூனையை கொண்டு வந்தார்.  அடுத்த பிரச்சனை வந்தது.  பூனையை பராமரிக்க பால் தேவை என்பதை உணர்ந்தார். இந்த தேவையை பூர்த்தி செய்ய ஒரு பசுவை தேடினார். பகவானின் கருணையால் ஒரு அன்புள்ளம் கொண்டவர், இந்த சீடருக்கு பசுவை தானமாக வழங்கினார். மிகவும் மகிழ்ந்த சீடர், தனது இருப்பிடத்திற்கு வந்தார்.   அடுத்த பிரச்சனை வந்தது.  பசு குகைக்குள் இருக்க முடியாது என்பதை உணர்ந்த அவர், அதற்கு ஒரு தொழுவத்தை கட்ட முட...